24/12/14

பெரியார் பார்வைகள்- நன்றி எழுத்தாளர் விநாயக முருகன்



நான் மனிதனே! நான் சாதாரணமானவன், என் மனதில் பட்டதை எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள். மற்றதைத் தள்ளிவிடுங்கள்.


எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள். "நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள், நான் சொல்லுவது வேதவாக்கு, நம்பாவிட்டால் நரகம் வரும் நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்" என்று வேதம், சாத்திரம், புராணம் கூறுவதுபோலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை, நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக் கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. "


சுயமரியாதை

-----------------------

மனித தர்மத்தை அடிப்படையாக வைத்து, மனித சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டுமானால் முதலில் செய்யவேண்டியது, பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும் சிந்திக்கச் செய்வதுமேயாகும்.

மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடத் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு தாழ்வு உணர்ச்சியைப் போக்கித் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் பெற வேண்டும்
.

சீர்திருத்தமும், சுயமரியாதையும், சட்டம் கொண்டு வந்து, வாக்கு வாங்கி நிறைவேற்றப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம்

மனிதன் உலகில் தன் சுயமரிaயாதையை - தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ளவேண்டும்.

மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்.


நான் யார்?

------------------

நான் எனக்கு தோன்றிய, எனக்குச் சரியென்று படுகிற கருத்துக்களை மறைக்காமல் அப்படியே சொல்லுகின்றேன். இது சிலருக்குச் சங்கடமாகக்கூட இருக்கலாம். சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம். சிலருக்குக் கோபத்தையும் உண்டாக்கலாம் என்றாலும் நான் சொல்வது அத்தனையும் ஆதாரத்தோடு கூடி உண்மைக் கருத்துக்களே தவிர பொய்யல்ல. எந்தக்காரியம் எப்படி இருந்தாலும் அரசியலில், பொது வாழ்க்கையில் கண்டிப்பாக மனித தர்மம் தவிர வேறு எந்தக் கால தர்மமோ, சமய தர்மமோ புகுத்தப்படக்கூடாது என்பதுதான் எனது ஆசையே ஒழிய, உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் என் விருப்பம்போல்தான் நடக்க வேண்டும் என்பதல்ல. எனது பொதுவாழ்வில் நான் அறிவு பெற்ற பிறகு, பார்ப்பனரல்லதார் ஆட்சி என்றால் வலியப்போய் ஆதரித்தே வந்திருக்கிறேன். இதில் நான் மானம் அவமானம் பார்ப்பதில்லை. நான் என் ஆயுள் வரை யாரிடமும் ஓட்டுக் கேட்க மாட்டேன். எனக்காக இரண்டு நல்ல (புகழ்) வார்த்தைகள் சொல்லும்படி யாரிடமும் எதிர்பார்க்கமாட்டேன்.

"நீ ஒரு கன்னடியன் எப்படித் தமிழனுக்குத் தலைவனாக இருக்கலாம்?" என்று என்னைக் கூடக் கேட்டார்கள். "தமிழனுக்கு எவனுக்கும் யோக்கியதை இல்லையப்பா" என்றேன். இதற்குக் காரணம், ஒரு தமிழன், இன்னொரு தமிழன் உயர்ந்தவனாக இருப்பதைப் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்கவே மாட்டான்.


சமுதாயச் சீர்திருத்தம்

------------------------------------

சாதி வித்தியாசமோ, உயர்வு தாழ்வே கற்பிக்கின்ற புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்று சொல்லிவிட வேண்டும்: மீறிப் படிக்க ஆரம்பித்தால் அவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டும். நாம் அரசியல் துறையில் முன்னேறி மாற்றம் பெற்றிருக்கிறோமே தவிர, சமுதாயத் துறையில் இன்னமும் பிற்போக்கான நிலையில்தான் இருக்கின்றோம். இந்த நிலை மாறவேண்டும். ஒரு சமூகமென்றிருந்தால் அச் சமூகத்தில் ஏழைகளில்லாமலும், மனச்சாட்சியை விற்றுப் பிழைப்பவர்கள் இல்லாமலும் செய்வதுதான் சரியான சமூகச் சீர்திருத்த வேலையாகும். சீர்திருத்தம் என்பது தேவையற்றதை நீக்கிவிட்டுத் தேவையுள்ளதை மட்டும் வைத்துக்கொள்ளுதலே யாகும். சமுதாயத்தில் பார்ப்பனர் என்றும் பஞ்சமர் என்றும் பிரிவுகள் இருக்க வேண்டியது அவசியம்தானா? அதற்குக் கடவுள் பொறுப்பாளி என்று கூறப்படுமானால் அக்கடவுளைப் பஞ்சமனும் சூத்திரனும் தொழலாமா?



கல்வி

-----------

எல்லா மக்களுக்கும் கல்வி பரப்புவது, நம் நாட்டில் பொது உடைமைக் கொள்கையைப் பரப்புவது போன்று அவ்வளவு கடினமான கரியமாய் இருக்கிறது. கல்வியறிவும் சுயமரியாதை எண்ணமும் பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும். ஆசிரியர்கள், பெற்றோர்கள், அதிகாரிகள் எல்லோரும் மாணவ ர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை, நாணயம் இவைகளை வளர்க்க முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

படிப்பு எதற்கு? அறிவுக்கு, அறிவு எதற்கு? மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் - தொல்லை கொடுக்காதவனாய் - நாணயமாய் வாழ்வதற்கு.

முதலாவதாக, மாணவர்கள் ஆசிரியருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அடுத்து, ஒழுங்குமுறை பழக வேண்டும். அதற்கு அடுத்தாற்போல் தான் பாடம்.


தமிழ்மொழி

---------------------

ஒரு நாட்டிற் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றே யாகும். மொழிப்பற்று இராதவரிடத்து தேசப்பற்று இராதென்பது நிச்சயம். தேசம் என்பது மொழியை அடிப்படையாகக் கோண்டு இயங்குவது. ஆதலால் தமிழர்களுக்குத் தாய் மொழிப்பற்றுப் பெருக வேண்டும் என்பது எனது பிரார்த்தனை. தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு மொழிப்பற்று அவசியம்! அவசியம்! என்று சொல்லுகிறேன். வங்காளிக்கு வங்கமொழியில் பற்றுண்டு; மராட்டியனுக்கு மராட்டிய மொழியில் பற்றுண்டு; ஆந்திரனுக்கு ஆந்திர மொழியில் பற்றுண்டு; ஆனால், தமிழனுக்குத் தமிழில் பற்றில்லை. தாய்மொழியில் பற்றுச் செலுத்தாதவரையில் தமிழர்கள் முன்னேற்றமடையமாட்டார்கள்.

நான் தமிழினிடத்தில் அன்பு வைத்திருக்கிறேன் என்றால் அதன் மூலம் நான் எதிர்பார்க்கும் நன்மையையும் அது மறை நேர்ந்தால் அதனால் இழப்பு ஏற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழினிடத்து அன்பு செலுத்துகிறேன். மற்றொரு மொழி நமது நாட்டில் புகுத்தப்படுவதைப் பார்த்து அதனால், நமக்கு ஏற்படும் இழப்பை அறிந்து சகிக்கமுடியாமல்தான் எதிர்க்கிறேனே யொழியப் புதியது என்றோ, வேறு நாட்டினது என்றோ நான் எதிர்க்கவில்லை.

மக்களுடைய வாழ்க்கைக்குப் பயன்படக்கூடியதும் அறிவையும் திறமையையும் தைரியத்தையும் உண்டாக்கக் கூடியதும் ஆகிய சிறந்த கலைகளையெல்லாம் தமிழில் எழுதிப் பரவச் செய்வதன் மூலம், மக்களுடைய அறிவையும், தமிழ் மொழியையும் செம்மை செய்வதே தமிழ் உணர்ச்சியாகும்.


எழுத்துச் சீர்திருத்தம்

------------------------------------

எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முந்திய பதிப்புகளிலும் எழுத்துக்களிலும் ``ஈ'' என்கின்ற எழுத்தானது ``இ'' எழுத்தையே மேலே சுழித்த வட்டவடிவத்தில் இருந்து வந்திருக்கிறது.

இன்னும் 400, 500 ஆண்டுகளுக்கு முந்தின கல் எழுத்துக்கள் அநேகம், வேறு வடிவத்தில் இருந்து வந்திருக்கின்றன. அதுபோலவே இப்போ தும் சில எழுத்துக்களை மாற்ற வேண்டியதும் சில எழுத்துக்களைக் குறைக்க வேண்டியதும், சில குறிகளை மாற்ற வேண்டியதும் அவசிய ம் என்றும், அனுகூல மென்றும்பட்டால் அதைச் செய்யவேண்டியது த èன் அறிவுடைமை. ஒரு மொழியோ, ஒரு வடிவமோ எவ்வளவு பழையது - தெய்வீகத் தன்மை கொண்டது என்று சொல்லிக் கொள்ளுகின்றோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அவற்றைச் சீர்திருத்த வேண்டிய அவசியமிருக்கின்றது என்பது அதன் உண்மைத் தத்துவமாகும். எழுத்துக்களை உருவம் மாற்றுவது, குறிப்புகள் ஏற்படுத்துவது புதிய எழுத்துக்களை சேர்ப்பது என்பது போலவே சில எழுத்துக்களை அதாவது அவசியமில்லாத எழுத்துக்களைக் குறைக்க வேண்டியதும் அவசியமாகும். மொழியின் பெருமையும், எழுத்துக்களின் மேன்மையும், அவை எளிதில் தெரிந்து கொள்ளக் கூடியதாகவும், கற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருப்பதைப் பொறுத்தே ஒழிய வேறில்லை.


திருக்குறள்

-------------------

திருவள்ளுவரின் குறளை மெச்சுகிறார்களே ஒழிய காரியத்தில் அîதாடு, அதற்கு நேர்விரோதமாக கீதையைப் போற்றுகிறார்கள்.

அறிவினால் உய்ந்துணர்ந்து ஒப்புக்கொள்ளக்கூடியனவும் இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்திருக்கக் கூடியனவும் ஆன கருத்துக்களைக் கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள்.

கம்பராமாயணத்தில் 100 பாட்டும், கந்தபுராணம் அல்லது பெரிய புராணத்தில் 200 பாட்டும் படிப்பதைக் காட்டிலும் திருக்குறளில் 10 பாட்டுப் படிப்பது எவ்வளவோ அறிவூட்ட வல்லது.

குறள் வெறும் ஒழுக்கத்தையும், வாழ்க்கைக்கு வேண்டிய அனுபவ·ர்வமான பிரத்தியட்ச வழியையும் கொண்டதாகும்.

குறள் ஒரு அறிவுக் களஞ்சியம். பகுத்தறிவு மணிகளால் கோக்கப்பட்ட நூல்.


கூட்டுறவு

-----------------

கூட்டுறவு வாழ்க்கை பிறருக்கு நாம் எவ்வாறு சகாயம் செய்வது, எவ்வாறு உதவி செய்வது என்பதை இலட்சியமாகக் கொண்டதேயாகும்.

நமது உடலில் பழைய தனிமைத் தத்துவ இரத்தைத்தை எடுத்துவிட்டுக் கூட்டுறவுத் தன்மை என்கிற இரத்தத்தைப் பாய்ச்ச வேண்டும்.

மனிதன் பகுத்தறிவுள்ள காரணத்தால்தான் தன் சமுதாயக் கூட்டு வாழ்க்கைக்கென்று பல திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறான். அத்திட்டங்களை நிறைவேற்றத் தனி மனிதனால் முடியாது. அதற்கு மற்றவர் உதவி இருந்தே தீர வேண்டியிருக்கிறது.

கூட்டுறவு என்கிற கொள்கை சரியான உயரிய முறையில் நம்நாட்டில் ஏற்பட்டுவிடுமானால் மக்கள் சமூகமே சஞ்சலமற்று, நாளைக்கு என்ன செய்வதென்ற ஏக்கமின்றி, திருப்தியுடன் நிம்மதியாக-கு­கலமாக வாழ வழி ஏற்பட்டுவிடும்.

நாம் செலவழிப்பதில் வகைதகையற்ற முறையில் வீண் செலவு செ ய்து வருகின்றோம். கூட்டுறவு முறையில் நமது வாழ்க்கையை நடத்தினால், இன்றைய நமது செலவில் எட்டில் ஒரு பாகம் தான் செலவு ஏற்படும். பாக்கி இன்னும் ஏழு பேருக்கு உதவக் கூடியதாயிருக்கும். நம் நாட்டு நிலைமைகளை மாற்றியமைக்காவிட்டால் நம் வாழ்வு விரைவில் அîதாகதியாகிவிடுமென்பது நிச்சயம்.


பொருளாதாரம்

-------------------------

கடவுளுக்குக்கு நன்றி செலுத்தும் முறையிலும் இன்னும் மேன்மேலும் செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக விண்ணப்பம் போட்டு, லஞ்சம் செலுத்தும் முறையிலும் செல்வத்தைப் பாழாக்குகிறார்கள். இதன் பயனாகவே, இந்த நாட்டின் ஆண்டொன்றுக்குப் பல கோடி ரூபாய் பாழாவதைப் பார்க்கலாம்.

மக்களக்குள்ள சமுதாயக் கொடுமை தீரவேண்டியது எவ்வளவு அவசியமோ அது போலவே, மக்களுக்குள்ள பொருளாதாரக் கொடுமையும் தீரவேண்டியது அவசியமாகும்.

நான் ஒரு நிமிடம் அரசனாய் இருந்தாலும் முதல் முதல் திருமணம் முதலிய பலவகைகளிலும் ஏற்படும் பொருள் விரயத்தைத் தடுக்கத் ­க்குத் தண்டனை நிபந்தனையுடன் சட்டம் செய்வேன். பொருள் நட்டம் தான் இன்று இந்தியாவைப் பிடித்த பெரும் பிணி என்று சொல்லுவேன்.

செல்வம் என்பது உலகின் பொதுச்சொத்து, அதாவது மக்கள் அனைவரும் அனுபவிக்க உரிமையுள்ள சொந்தமான சொத்தாகும். அதை யார் உண்டாக்கியிருந்தாலும் உலகத்தில் உள்ளவரை, எவருக்கும் அது பொதுச்சொத்தாகும். அனுபவிக்கும் உரிமைபோல அதை அழியாமல் பாதுகாக்கவும் உரிமை உண்டு.

நாளுக்கு நாள் மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியப் பொறுப்பு ஆகிய தன்மைகள் இல்லாத போக்கு உச்ச நிலையடையும் வகையில் மனித சமுதாயம் சென்று கொண்டிருக்கிறது. சொத்துரிமை இல்லாமல் தடுப்பதே இதற்குப் பரிகாரமாகும்.


திருமணம்

-------------------

மணமக்கள், உயிர் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பழகும் முறையைப்போல் நடந்துகொள்ள வேண்டும். எதிலும் தான் கணவன் என்ற ஆணவத்தை மணமகன் கொள்ளக்கூடாது. மணமகளும் தான் கணவனுக்கு அடிமைப் பொருள் - அடுப்பூதுவதற்கு என்றே வந்தவள் என்ற எண்ணமில்லாது பழக வேண்டும்.

மணமக்கள் சந்ததி உற்பத்தி செய்வதில் அவசரப்பட்டுவிடக் கூடாது. திருமணம் நடந்து குறைந்தது மூன்று ஆண்டுகளுக்குப் பின்னாவது குழந்தை பெறுவதாயின் மிக நல்லதாகும்.

ஒருவனுடைய வாழ்க்கைக்கு ஒருவர் இன்றியமையாதவர் என்ற நிலையில் காதல் கொள்வதுதான் உயர்ந்த காதலாகும்.

சுயமரியாதைத் திருமணம் என்பது அறிவு ஆராய்ச்சியின் காரணமாய் ஏற்பட்டது.

திருமணம் என்பது மணமக்களை மட்டும் பொறுத்ததல்ல. நாட்டின் முன்னேற்றத்திலும் தொடர்பு கொண்டிருக்கிறது.


அரசியல்

---------------

பிறவியிலும் பணத்திலும் உயர்வு தாழ்வு இல்லையானால் ஆளுவதிலும் ஆளப்படுவதிலும் உயர்வு தாழ்வு இல்லாமல் போய்விடுமே என்று அரசன் பயப்படுகிறான்.

நம் நாட்டுக்கு இன்று எவ்வித அரசியல் கிடைப்பதானாலும் அதில் சமூக சமத்துவமும், சமூக ஒற்றுமையும் உண்டாக்கக்கூடிய தன்மை இருக்க வேண்டும்.

பணம் உள்ளவனும் பணம் இல்லாதவனும் உலகத்தில் இருக்கும்வரை லஞ்சம், பிச்சை முதலானவைகள் ஒழியவே ஒழியாது.

இலஞ்சம் ஒழிய வேண்டுமானால், தனி உடைமைத் தர்மம் அழிந்து, ஒழிந்து, பொதுஉடைமை நிலை ஏற்பட்டால்தான் முடியும். அதில்லாதபடி இலஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசுவது மனுதர்மம் பேசுவதேயாகும்.

சமுதாயத் துறைக்கு பாடுபடுவதுதான் உண்மையான அரசியல் தொண்டாகும்.


பொதுத்தொண்டு

----------------------------

தன்னலமற்ற பொதுத்தொண்டு செய்பவர்கள் - பிரதிபலன் கருதாது உழைக்கக் கூடியவர்கள் எண்ணிக்கை நாட்டில் மேன்மேலும் பெருகவேண்டும். அவர்களின் சீரிய குணங்கள் பொதுமக்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும். மனிதனாகப் பிறந்தவர் பொதுவாழ்வில் எப்படி நடந்துகொண்ண வேண்டுமென்பதற்கு அவர்களின் வாழ்க்கையே எடுத்துக்காட்டாக இருக்கும்.

பிறப்பதும் சாவதும் இயற்கை, ஆனால் மக்கள் பாராட்டுதலுக்கு உகந்தவகையில் வாழ்தல் வேண்டும். மக்கள் ஒருவரைச் சும்மா போற்றமாட்டார்கள். நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரியமாற்ற வேண்டும்.

சுகபோகத்தினால் இன்பம் காண்பதில் பெருமை இல்லை. தொண்டு காரணமாக இன்பம் காண்பதே சிறந்த இன்பமாகும். வாழ்வு என்பது தங்களுக்கு மட்டும் என்று கருதக் கூடாது. மக்களுக்காகவும் தொண்டுக்காகவும் நம் வாழ்வு இருக்க வேண்டும் என்று கருத வேண்டும்.

ஒருவன் தன்னுடைய சொந்தக் காரியத்தைப் பொருத்த மட்டில்தான் மானத்தையும், கவுரவத்தையும் கவனிக்க வேண்டும். பொதுநலம், பொதுத்தொண்டு என்று வந்துவிட்டால் அவை இரண்டையும் பார்க்கக்கூடாது.

மனிதன் திருடுகிறான், பெய் பேசுகின்றான், பாடுபடாமல் வயிறு வளர்க்கப் பார்க்கிறான். இவனை மக்கள் இகழ்வதில்லை, சாதியை விட்டுத் தள்ளுவதில்லை, ஆனால் சாதியைவிட்டுத் தள்ளிவிடப்படுகிறான், கல்யாணம் செய்தால், சாதியை விட்டுத் தள்ளிவிடப்படுகிறான். இந்த மக்களின் ஒழுக்கம், நாணயம் எப்படிப்பட்டது பாருங்கள்.


கருத்துகள்

--------------

சமுதாய வாழ்க்கையில் ஒழுக்கமே பக்தியைவிட இன்றியமையாது. ஒழுக்கம் என்பது, சொல்லுகின்றபடியே நடப்பதும் நடந்தபடியே செல்லுவதுமாகும்.

பக்தி என்பது தனிச் சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து. பக்தி இல்லாவிட்டால், இழப்பில்லை ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்.

தொழிலாளி-முதலாளித்தன்மை முறையே இருக்கக் கூடாது. வேலை செய்பவர்கள் பங்காளியாக அல்லாமல் கூலிக்காரர்களாக இருப்பது அடிமைத்தனம்.

நாடு, மொழி, கடவுள், மதம், சாதி என்று எந்தபற்றுமின்றி, மானுடப் பற்றுடன் அறிவைக் கொண்டு தங்குதடையின்றி சிந்தித்துச் செயல்புரிவதே பகுத்தறிவாளர் கடமையும், பொறுப்புமாகும்.

தீண்டாமை என்பதே சாதி காரணமாக ஏற்பட்டதே தவிர, அதற்கு வேறு காரணமே ஆதாரமே இல்லை. சாதியை வைத்துக்கொண்டு தீண்டாமை ஒழிய வேண்டும் என்பது சிறிதும் அறிவுடைமையாகாது.



பகுத்தறிவு

------------------

இராமாயணத்திலும், பாரத்திலும் ஆகாய விமானம் இருக்கிறது. ஆனால், அது மந்திர சக்தியால் ஓடியிருக்கிறது. ஆங்கில இலக்கியத்தில் ஆகாய விமானம் பற்றிய விளக்கம் இருக்கிறது. இது இயந்திர சக்தியால் ஓடுகிறது. நமக்கு எது வேண்டும்? மந்திர சக்தியா? இயந்திர சக்தியா?

அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் தேவைக்கும் பொருத்தமில்லாத காரியங்கள் பழக்கத்தின் பேராலோ, வழக்கத்தின் பேராலோ, தெய்வத்தின் பேராலே மதத்தின் பேராலே, சாதி வகுப்பின் பேராலோ மற்றெதன் பேராலே நடத்தப்படக் கூடாது.

கடவுள் சென்னது, மகான் சொன்னது, ரிஷி சென்னது, அவதார புருடர்கள் சொன்னது என்று பார்க்கின்றானே ஒழிய, தன்புத்தி என்ன சொல்லுகிறது என்று பார்ப்பதே இல்லை.

மூட நம்பிக்கைகளைப் பகுத்தறியாமல் பின்பற்றியதாலேயே உழை ப்பாளி அடிமையாகவும், சோம்பேறி ஆண்டானாகவும் இருக்கும் நிலை வந்தது.

மாறுதலைக் கண்டு அஞ்சாமல், அறிவுடைமையோடும் ஆண்மையோடும் நின்று எதையும் நன்றாய் ஆராச்சி செய்து, காலத்திற்கும் அவசியத்திற்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளிக் கூட்டுவன கூட்டித் திருத்தம் செய்ய வேண்டியது பகுத்தறிவுடைய மனிதனின் இன்றியமையாத கடமையாகும்.


அறிவியல்

-------------------

இயந்திரம் கூடாதென்றால் மனிதனுக்கு அறிவு விருத்தி கூடாது என்பதுதான் பொருளாகும்.

இன்று நாம் எவ்வளவு மாறுபாடு அடைந்துவிட்டோம். நம் வசதிக ளும் வாழ்வும் ஏராளமாகப் பெருகிவிட்டன. அதற்குமுன் கட்டைவ ண்டிதான். இன்று ரயில், மோட்டார், ஆகாய விமானம் முதலிய ந வீன வசதிகள், தீ உண்டாக்க சக்கிமுக்கிக் கல்லை உராய்ந்îதாம் , இன்று ஒரு பொத்தானை அழுத்தினால், ஆயிரக்கணக்கான மின்ச èர விளக்குகள் எரிகின்றன. வாழ்க்கையில் இவ்வளவு மாற்றமடைந் துள்ள நம் மக்களின் புத்திமட்டும் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த து போலவே இருக்கிறதே!.

கொஞ்ச காலத்திற்குமுன் கடவுளைப் பற்றிய கதைகளை அப்படி யே, அதாவது கடவுள் சக்தியில் நடைபெற்றது என்று நம்பிக்கொ ண்டிருந்தவர்கள் கூட, இப்பொழுது அப்படியே நம்புவதற்கு வெட் கப்பட்டுக் கொண்டு, தங்களுக்குள்ள அறிவு வளர்ச்சியில்லாத தன் மையை மறைத்துக் கொண்டு, விஞ்ஞானத்தின் மூலம் அக்கதைகளை மெய்ப்பிக்க முயற்சி எடுத்துக் கொண்டு சிரமப்படுகிறார்கள்.

சக்கிமுக்கிக் கல்லால் முதலில் நெருப்பை உண்டாக்கியவன் அந்தக் காலத்து "எடிசன்" அப்புறம் படிப்படியாக முன்னேற்றமாகி இப்பொழுது மின்சாரத்தில் நெருப்பைக் காண்கிறோம்; எனவே மாற்றம் இயற்கையானது; அதைத் தடுக்க யாராலும் முடியாது.

மக்கள் பிறப்புக்கூட இனி அருமையாகத்தான் போய் விடும். அது போலவே சாவும் இனிக் குறைந்து விடும். மனிதன் வெகு சுலபமாக நூறு ஆண்டு வாழ முடியும். யாரும் சராசரி என்று இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற மாட்டார்கள். ஆண், பெண் உறவுக்கும் பிள்ளைப் பேற்றுக்கும் சம்பந்தமில்லாமலே போய்விடும்.


இலக்கியம்

-------------------

எந்த நூலை எடுத்துக் கொண்டாலும் அதன் மதிப்பு, அந்த நூலின் பயனை அளவாகக் கொண்டதே ஒழிய, அதை ஆக்கியவனையோ, அதில் உள்ள தெய்வீகத் தன்மையையோ, இலக்கண இலக்கிய அளவையையோ, அமைப்பையோ, அற்புத தன்மையையோ அளவாகக் கொண்டது ஆகாது.

இலக்கியம் என்பது நாகரீகத்தை புகத்த வேண்டும். மக்களிடம் உ யரிய குணங்களைப் புகுத்துவதாக இருக்க வேண்டும்.

இலக்கியம் எதற்காக? இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்? எப் படிப்பட்டதை இலக்கியம் என்று சொல்லலாம்? அவை எதற்காக இருக்க வேண்டும்? என்பது பற்றிச் சிந்தித்தால், மனிதனின் வாழ்க்கைக்கு உயிர் மட்டும் அல்லாமல் மனித சமுதாய வளர்ச்சிக் கும் ஏற்றதாக என்பது என் கருத்து.

நம் மக்களிடம் நிரம்பியிருக்கும் மடமை, மானமற்ற தன்மை, இழிநி லை, அறிவற்ற தன்மை இவைகளைப் போக்க வேண்டும் என்ற எண்ணத்தின்மீதே "இலக்கிய மறுமலர்ச்சி" பற்றிச் சிந்திக்க வேண்டும்.

மதம், கடவுள் சம்பந்தமற்ற - யாவரும் பொதுவான இயற்கை ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத விஞ்ஞானத்தைப் பற்றிய இலக்கியம் ஆகியவைகள் மூலம்தான் ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மையடைய முடியும் என்பது மாத்திரமல்லாமல், அதைக் கையாளும் மக்கள் ஞான முடையவர்களாவார்கள்.


கலைகள்

---------------


"தமிழ்நாட்டில் தமிழ்ப் பாட்டுக்கள் பாடப்பட வேண்டும்" தமிழில் இசை இருக்க வேண்டும்" என்று கூறுபவர்களை நையாண்டிசெய்து, அவ்வாறு கூறுவதும் கோருவதும் முட்டாள்தனம் என்று மேடைகள் மீதேறிப் பேசிடத் துணிவுகொண்ட கூட்டத்தினருக்கும் இத்தமிழ்நாடு இடங்கொடுத்துக் கொண்டிருக்கிறது.

நல்ல தமிழில் - இயற்கை எழில்களையும், தமிழரின் வீரத்தையும்,அன்பையும், மானமிக்க சமத்துவ வாழ்வினையும், வரலாற்றினையும், நேர்மையையும், நீதி நெறிகளையும், தமிழ்நாட்டுப் பற்றையும், மொழியின் ஆர்வத்தையும், ஒற்றுமையையும், கட்டுப்பாட்டையும் எடுத்துக்காட்டும் பாட்டுக்களையே பாடுமாறு செய்தல் வேண்டும்.

நாடகங்களிலே இரண்டு விதமுண்டு. ஒன்று பாட்டாக நடத்திக் காண்பிப்பது; மற்றொன்று வசன ரூபமாய் நடத்திக் காண்பது. வசன ரூபமாய்க் காண்பிப்பவைகளையே மக்கள் விரும்புகிறார்கள்.

தமிழர்களின் தன்மானத்தை வளர்ப்பதற்கும், தமிழர்களுக்கு அறிவூட்டுவதற்கும், தமிழர்கள் மனிதத் தன்மை அடைவதற்கும் பயன்படாத இயலோ, இசையோ நடிப்போ எதற்காக வேண்டும்? அது என்ன மொழியில் இருந்தால்தான் என்ன?

எப்படிப்பட்ட கலையும், ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் சிறிதும் பயன்படக்கூடாதோய் இருக்க வேண்டும்.


ஒழுக்கம்

---------------

பொதுவாழ்வின் பெயரால் ஒழுக்கக் கோடாக, லஞ்சகராக, திருடர்களாக நடப்பவர்களை ஒருநாளும் விட்டுவைக்கக் கூடாது.

ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழவேண்டுமானால் அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.

மனிதனிடம் சுலபத்தில் ஒழுக்கத்தைப் புகுத்த வேண்டுமானால், மாணவப் பருவத்தில்தான் முடியும்.

பிறருக்கு எந்தவிதத் தொல்லையும் தராத வாழ்வே ஒழுக்கம். இது எல்லாவித பேத நிலையும் ஒழித்த நிலையில்தான் வளர முடியும். ஒழுக்க அடிப்படையே இன்ப வாழ்வு.

ஒழுக்கம் என்பது தனக்கும் அந்நியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்ளுவதாகும்.


பெண் உரிமை

-----------------------

மனிதன் பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகிறானேயொழிய தன்னைப் போன்ற உணர்ச்சிக்கும் அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை.

பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல்சாதிக்காரன் கீழ்ச்சாதிக்காரனை நடத்வதைவிட, ஆண்டான் அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகம்.

இந்திய நாட்டில் பெண்கள் சகல துறைகளிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்துவரும் வேதனையையும் இழிவையும், அடிமைத் தனத்தையும்விட அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள்.

கற்புக்காகக் கணவனின் திருகச் செயலையும் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற கொடுமை ஒழிய வேண்டும்.

ஆண் எப்படி வேண்டுமானாலும் திரியலாம், எவ்வளவு மனைவிகளை வேண்டுமானாலும் மணக்கலாம், என்கின்ற முறையே, விபச்சாரம் என்னும் பிள்ளைகளைப் பெற்றெடுக்கின்றது.


இளைஞர்கள்

----------------------

வாலிபர்களுக்கு வெறும் உற்சாகமும், துணிவும், தியாகபுத்தியும் மாத்திரம் இருந்தால் போதாது. நன்மை தீமையை அறியும் குணமும், சாத்தியம் அசாத்தியம் அறியும் குணமும், ஆய்ந்து ஓய்ந்து பார்க்கும் தன்மையும் இருந்தால் தான் வாலிபர்கள் பொதுவில் பயன்படக்கூடியவர்கள் ஆவார்கள்.

வாலிபப் பருவம், அபாயகரமான பருவம், சுலபத்தில் நெருப்புப் பற்றிக் கொள்ளக்கூடிய பொருளைப் போல் மிகப் பத்திரமாய் காப்பாற்றப்படவேண்டிய பருவம்.

பித்தலாட்ட, மத சம்மந்தமான மூட நம்பிக்கைகள் அனைத்தையும் ஒழிக்க வாலிபர்கள் முனைய வேண்டும்.

வாலிபர்கள் சுயமாகச் சிந்திக்குமாறு பழகப்படுத்துவதேயில்லை, பகுத்தறிவை உபயோகிக்கச் சந்தர்ப்பமளிக்கப்படுவதே இல்லை அறிவுக்கும் அனுபவத்துக்கும் சம்பந்தப்படுத்திப் பழக்குவதேயில்லை. இத்தகைய நிலைமை மாறாதவரை, வாலிபர்கள் சுயமாகச் சிந்தித்துப் பார்த்து ஆராய்ந்து தாங்களே ஒரு முடிவுக்கு வருவது முடியாதோகும்.

இளைஞர்கள் குழந்தைகளுக்ச் சமமானவர்கள். சமீபத்தில் உள்ளதைப் பற்றுகிறவர்கள், பின்விளைவை அனுபவித்து அறியாதவர்கள். கண்ணோட்டம் விழுந்தால் பற்றி விடுபவர்கள். எழுச்சி என்பது எங்கொங்குக் காணப்படுகின்றîதா, கூட்டம் கு­கலம் என்பவை எங்கெங்குக் காணப்படுகின்றனவோ அவற்றையெல்லாம் பற்றுவதும், அவை மறைந்தால் கைவிட்டுவிடுவதுமான குணமுடையவர்கள்.


பல்துறை

---------------

சிலர் சாமியைப் பார்த்தால் சாமி சக்தி ஓடிப்போவானேன்? சிலர் கோயிலுக்கு வந்தால் கோயிலும் சாமியும் தீட்டுப்ட்டுப் போவானேன்? சிலர் சாமியைத் தொட்டால் சாமி இறந்து போவானேன்? ஒரே பெயரும் உருவமும் உள்ள சாமிக்கு ஊருக்கு ஒரு விதமாய்ச் சக்திகள் ஏற்பட்டிருப்பானேன்?

காசி, ·ரி, பண்டரிபுரம் முதலிய ஊர்களில் உள்ள சாமிகள் யார் தொட்டாலும் சாவதில்லை. அங்குக் கோயிலுக்கு போகிறவர்கள் எல்லாம் தங்களே நேரில் சாமியைத் தொட்டு தலையில் தண்ணீர்விட்டு மலர் போட்டுக் கும்பிடுகிறார்கள். அதே பெயருள்ள சாமி நமது தமிழ்நாட்டில் மட்டும் நாம் தொட்டால் செத்துப் போய்விடுகிறîதா, ஏன்? இப்படி சாமிகளின் சக்தியும் உயிரும் கோயில்களின் யோக்கியதையும் ஊருக்கு ஒரு விதமாய் இருப்பானேன்?

எவன் ஒருவன் கடன் வாங்காமல் வரவுக்கேற்ற மறையில் செலவு செய்து வருகிறானே அவன்தான் பிரபு ஆவான். நல்ல குடும்பம் எனப்படுவது வரவுக்கு மிஞ்சிச் செவு செய்யாமல் இருப்பதாகும். தமது வாழ்க்கைக்குச் செலவை வரவுக்கு உள்பட்டே அமைத்துக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட குடும்பந்தான் கண்ணியமான குடும்பம். சாதி ஒழிப்புக்கு இன்றைய அரசியல் சட்டம் இடந் தரவில்லை. அதை, அடிப்படை உரிமைக்கு விரோதம் என்கிறது. அதேபோல்தான் வகுப்புவாரி விகிதப் பேச்சும் பேசாதே அது வகுப்புத் துவேசம் என்கிறது. சாதி இருப்பது தவறல்லவாம். சாதிப்படி உரிமை கேட்டால் மட்டும் தவறு என்றால் இதைவிடப் பித்தலாட்டம் வேறு இருக்க முடியுமா?


---------பெரியார் (மறைவு தினம் 24 டிசம்பர் 1973

22/9/14

பாலியல் வன்முறை குற்றமும் தண்டனையும், போர்னோ கிராஃபி குறித்த ஒரு பார்வை - காலச்சுவடு (உரிமை)

காலச்சுவடு வலைப்பக்கத்தில் வெளியான, பாலியல் சமத்துவமின்மை குறித்த, போர்னோ கிராஃபி ஏற்படுத்தியுள்ள பாலுறவு குறித்த இந்தியர்களின் பார்வையின் மாற்றத்தை, இறுக்கமான சமூக-குடும்ப சூழலால் பாலுறவு உடனான இயல்பான பிணைப்பை, அழகாக வெளிப்படுத்தும் ஒரு பதிவு. எழுதிய தேவிபாரதிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!


http://kalachuvadu.com/issue-158/page33.asp

4/9/14

தன்னறிதல்



பொழுதுகள் புலர்ந்தன

மெல்ல நகர்ந்தன நாட்கள்

கனவுகளைத் தொலைத்து

இலக்கற்று, கையறுநிலையில்

கழியும் நாட்களில்

கசியும் கண்ணீரோடு

அணுநிமிடமும் அரூபமாய்

வாழ்வை நோக்கிய ஏக்கமுமாய்

எழுந்திருக்க நினைக்கும்

எண்ணத்தோடு

சலனமற்று கிடக்கிறது

வீழ்ந்தவனின் மனது
 

தாய் நாவல் #மக்சீம் கார்க்கி - என் பார்வை



                                                             

                                                                 







உலகின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான மக்ஸிம் கார்க்கியின் மகத்தான படைப்பு தாய் நாவல் என்றால் அது மிகையாகாது.

உலக இலக்கியப் படைப்புகளில் சிறந்தவற்றை நாம் வரிசைப் படுத்துவோமானால், அதில் கார்க்கியின் 'தாய்' கட்டாயம் இடம் பெறும்.

நேற்றிலிருந்தே இந்நாவல் குறித்து ஒரு சிறு பதிவையேனும் பகிர வேண்டும் என்ற ஆவல் சற்றும் குறையாது அதிகரித்தபடியே சென்றதன் விளைவே இப்பதிவு.


















------நாவலின் வரலாறு------




1904 ஆம் வருடம் கார்க்கியின் எண்ணத்தில் ‘தாய்’ உருப்பெற்றது. அவருடைய வாழ்க்கைத் துணைவியாகிய ஏகடரினா பவ்லோவ்னா வோல்ழினா, நல்ல இலக்கியவாதி.

"சமரஸ்கயா கெசட்டா" என்னும் இதழின் அச்சுப்பிழை திருத்துபவராகத் திருமணத்திற்கு முன் பணிசெய்தவர். கருத்தில் உருப்பெற்ற “தாய்’ புதினத்தை குடும்பத்தினருக்கு விளக்கிச் சொன்னார்.

1906 ஆம் ஆண்டு டிசம்பரில் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் "ஆப்பிள்டன்" இதழில் தாய் முதற்பகுதியின் முன்பாகமும், 1907 ஆம் ஆண்டு தாய் நாவல் முழுதும் வெளிவந்தன. கார்க்கியின் “தாய்” முதலில் வெளிவந்தது அமெரிக்காவில் தான். ரஷ்ய முற்போக்காளர்கள் ஆர்வத்துடன் வரவேற்றனர்.


-----------எனது பார்வை-----------


பெலகேயா நீலவ்னா, பாவல் விலாசவ் எனும் தாய்-மகனுக்கு இடையேயான அன்பின் அற்புதப் பிணைப்பின் உணர்வுபூர்வ உள்ளடக்கமே இந்நாவல்.

ஒரு தாயின் பாச உணர்வு, தன் மகன் மீதான அளப்பரிய அன்பால், கொள்கையின் மேல் ஏற்பட்ட பிடிப்பால், கம்யூனிஸ சித்தாந்தத்தின் மீது ஒரு ஈடுபாடு உருவாகி, அதை உழைக்கும் மக்களிடத்திலும் பாகுபாடு நிறைந்த சமூகத்திலும் தழைத்தோங்க, வீரியம் பெற, தாமே விதையாக வீழ்வதை தேர்ந்த இலக்கிய நடையுடன் விவரிக்கும் படைப்பே இந்த அற்புத காவியம்.


-----------தோழர்களுக்கு----------


நண்பர்கள் அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒரு சிறந்த கலைப்படைப்பு. குறிப்பாக கம்யூனிச சித்தாந்தத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட தோழர்கள் அனைவரும் வாசிக்க, அள்ளி அள்ளிப் பருக வேண்டிய ஒரு அருமையானப் புத்தகம்.


------புத்தகம் குறித்து தோழர் லெனின்----


‘இதுவரை, புறத்தூண்டுதலின்றி உள்ளுணர்வு உந்தப் புரட்சிப் போராட்டத்தில் தாமாகவே தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளார்கள். ஆனால் இப்பொழுது தமக்குப் பயன்படும்படி “தாய்” படிக்கலாம்’.


------------ புத்தக வெளியீட்டு விபரம்-----------

மக்ஸிம் கார்க்கியின் தாய் நாவல்.

ஆசிரியர்: மக்ஸிம் கார்க்கி.

தமிழாக்கம்: தொ.மு.சி.ரகுநாதன்

பதிப்பகத்தார்: என்.சி.பி.எச்(நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)

முதல் பதிப்பு: மே, 2003

நான்காம் பதிப்பு : அக்டோபர், 2013. விலை: ₹350



அன்னா கரினினா- என் பார்வை




அன்னா கரீனினா - வாழ்வில் மறக்க முடியா ஓர் அற்புதப் படைப்பு. கடந்த பதினைந்து நாட்களாக தொடர் வாசிப்பில், ஆழ்ந்த ஈடுபாட்டோடு, என்னை நான் இந்த இலக்கிய கடலில் மூழ்கடித்துக்கொண்டேன். அதில் மிகுந்த மகிழ்ச்சியும் உற்றேன்.

ஆசிரியர் லியோ தால்ஸ்டாய் பெருநாவல்களில், நான் வாசித்த இரண்டாவது நாவல் இது!
ஆனால் உண்மையில் அன்னாகரீனினா எனக்குள் ஏற்படுத்திய ஒரு பாதிப்பைப் போல #போரும்அமைதி இல் நான் உணரவில்லை. போரும் அமைதியையும் பொருத்தவரை அதன் கதை களம், சூழல், கதாபாத்திரங்களின் உணர்வு தன்மை, மிக நுட்பமாக உணர, நாவலினுள் ஊடுருவி, மையக் கருவை தொட்டு நுகர அதிகப்படியான மறுவாசிப்பு தேவை. ஆனால் அன்னா கரீனினா அவ்வாறு அல்லாது முதல் வாசிப்புலேயே மனதை முழுவதும் கவரக் கூடியது. இருப்பினும் ஆழ்ந்த வாசிப்பு தேவை, ருஷ்ய படைப்புகள் என்றாலே இலக்கிய சுவையும், நயமும் ததும்ப இருக்கும். அத்தகைய ஒரு அதீத இலக்கிய சுவை நிரம்பிய நாவலே அன்னா கரீனினா.

ஒரு பெண்ணின் பல பரிமாணத்தை, வாழ்க்கை வெளியில் அவளை தன்னிச்சையாக எடைபோடும் ஒரு ஏதேச்சதிகார சமூகத்தை, உளவியல் ரீதியாக அன்னா அனுபவிக்க நேரும் துன்பங்களை, தன்னுடைய ஆதிக்க அதிகார நற்பெயருக்கு பங்கம் வராதவரை யார் புண்பட்டாலும் சரி என கவலையற்றவனாய் அன்னாவின் கணவன் கரீன், நாவலை படைத்த ஆசிரியர் டால்ஸ்டாய் தனது குணாதிசயங்களை மையமாக வைத்து கதையின் ஊடாக பயணிக்கும் ஒரு கதாபாத்திரமாக லெவினை படைத்திருந்தது, குடும்பம், மதம், சமூகம் என பல கட்டமைப்புக்குள் இந்த உலகம் பெண்களுக்கு என பிரத்யேகமாக ஏற்படுத்தியிருக்கும் பல எல்லைகளையும், தடைகளையும், வேலிகளையும், அதனை உடைத்து எறிய முற்படும் ஒரு பெண்ணின் மனவலிமையும், இறுதியில் தார்மீக துணையென யாருமின்றி ஆற்றாமையால் வெடித்து பொங்கும் அன்னா தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் வரை, என உலக இலக்கிய ஆளுமையான டால்ஸ்டாய் தனது தனித்துவமான நயமிக்க இலக்கியசுவையுடன் அழகாகவும் கவித்துவமாகவும் நாவலை வார்த்திருக்கிறார் என்றே சொல்லலாம்... சுமார் 150 வருடங்களுக்கு முன் வெளியான
இந்நாவலில் நிலவும் சமூக சூழலானது இன்றைய, நமது சமகால-சமூகத்திற்கும் அப்படியே பொருந்தக்கூடியவை என்பதிலிருந்தே உலகப் புகழ் பெற்ற இந்நாவலின் தனித்தன்மையை எளிதில் உணரமுடியும்..!








இப்படைப்பை வாசித்து முடித்ததில் இருந்தே, ஒரு எண்ணம் இருக்கமாய் நெஞ்சை நெருடியவாறே உள்ளது, ஆம், நாம், நம் சமூகம் இன்னும் கடக்க வேண்டிய தூரம், இன்னும் வெகு தொலைவில் உள்ளது...

6/7/14

டாலரை தவிர்க்கும் முயற்சிகள்! -பிரபாத் பட்நாயக் (05/07/2014ல் தீக்கதிரில் வெளியான கட்டுரை)




வளர்ச்சியடைந்த மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள், தேவைப்படும் போதெல்லாம், பாசிச சக்திகளைப் பயன்படுத்துவது உண்டு. இன்று அதனை உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராகச் செய்திருக்கின்றன. அத்தகைய சதிகளை எதிர்த்து ரஷ்யா நடவடிக்கையில் இறங்கிய போது, ரஷ்யாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன. அதற்கு பதிலடியாக, ரஷ்ய அதிபர் புடின், உலகப் பொருளாதாரத்தில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார். டாலர் என்ற ரிசர்வ் நாணயம் (உலகப் பொது நாணயம்) இல்லாமலேயே நாடுகளுக்கிடையில் பரஸ்பரம் வர்த்தகம் செய்து கொள்வதே அவரது திட்டம்.
எந்தெந்த நாடுகளெல்லாம் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு ஆளாகி உள்ளனவோ, அல்லது அவற்றை எதிர்த்துத் துணிந்து நிற்கின்றனவோ, அவற்றோடு அத்தகைய இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் செய்வதற்கு ரஷ்யா தயாராகி வருகிறது. அத்தகைய ஒப்பந்தங்களில் பணப்பட்டுவாடா அமெரிக்க டாலரிலும் இருக்காது, ஐரோப்பிய யூரோவிலும் இருக்காது. மாறாக, இரு தரப்பு ஒப்பந்த நாடுகளின் நாணயங்களிலேயே இருக்கும். சீனா, ஈரான் ஆகிய இரண்டு நாடுகளையுமே அதிபர் புடின் இதில் அதிகம்நம்புகிறார். அடுத்துவரும் 30 ஆண்டுகளுக்கு 400 பில்லியன் டாலர் அளவிலான எரிவாயுவினை சீனாவிற்கு சப்ளைசெய்வதென ரஷ்யா ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த மே மாதம் 21ம் நாள் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் முக்கியமான அம்சம், பணப்பரிவர்த்தனை டாலரில் இல்லை என்பதுதான்.

ரஷ்யாவின் நடவடிக்கைகள் புதிதல்ல!
‘இந்தியாவிற்கு இது போன்ற ஒப்பந்தங்கள் புதியவை அல்ல. பல ஆண்டு களாக முந்தைய சோவியத் யூனியனுடனும், கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடுகளுடனும் இந்தியா செய்து கொண்ட இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் இது போன்றவையே. ஒரு குறிப்பிட்ட செலாவணி மதிப்பு மற்றும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விலைகளின் அடிப்படையில் இந்தியா செய்து கொண்ட அத்தகைய ஒப்பந்தங்களில், பணப் பரிவர்த்தனையில் டாலரின் பங்கு எதுவுமில்லை. தற்போது புடின் சோவியத் யூனியன் காலத்திய அதேசெயல் முறையைத்தான் கையிலெடுத்துள்ளார்.

இதனால் லாபம் என்ன?
ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில், 30 டாலர் அந்நியச் செலாவணி கையிருப்பு கொண்ட ‘ஏ’ என்ற ஒரு நாடு ‘பி’ என்ற மற்றொரு நாட்டிற்கு 100 டாலர் மதிப்பிற்கான பண்டங்களை ஏற்றுமதி செய்கிறது என வைத்துக் கொள்வோம். இப்போது, அந்த ‘ஏ’ நாடு தனதுகையிருப்பில் உள்ள அந்நியச் செலாவணியான 30 டாலர், அத்துடன் தான் ஏற்றுமதி செய்த பண்டமதிப்பான 100 டாலர் என இரண்டையும் சேர்த்து, 130 டாலர் அளவிற்குத்தான் ‘பி’ நாட்டிலிருந்து இறக்குமதி செய்ய முடியும். அதே நேரம் அவரவருடைய சொந்த நாணயங்களில் இந்த ஒப்பந்தம் நடைபெறும் என்றால், கூடுதலாக பண்டங்களை ‘ஏ’ நாட்டால் ‘பி’ நாட்டிலிருந்து இறக்குமதி செய்ய முடியும். ஒரு வேளை அவை இரண்டும் நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி பொருளாதாரத் தடைகளின் காரணமாக டாலர் என்ற ரிசர்வ் நாணயத்தை பெற முடியாத நாடுகளாக இருந்தால், இது மாதிரியான இருதரப்பு ஒப்பந்தங்கள், அவர்களுடைய வர்த்தகத்தை கணிசமாக உயர்த்த உதவும்.

அரிதாகும் அந்நியச் செலாவணி!
வளர்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதாரத் தடைகளின் காரணமாகவும் சில நாடுகளுக்கு ரிசர்வ் நாணயம் கிடைக்காமல் போகலாம். அது தவிர, பொருளாதார மந்தம் காரணமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் கிராக்கி குறையும் போது, அந்நாடுகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புக்கள் குறைகின்றன. இதனாலும், சில நாடுகளுக்கு ரிசர்வ் நாணயம் கிடைப்பது அரிதாகி விடக் கூடும். அந்தப் பிரச்சனையை இந்த ரஷ்ய பாணி இரு தரப்பு ஒப்பந்தங்கள் தீர்த்து வைக்கின்றன. இதில் ஈடுபடும் நாடுகள் பரஸ்பரம் மற்றவர்களின் நாணயங்களை ரிசர்வ் நாணயம் போன்றே ஏற்றுக் கொள்வதால், நடைமுறையில் இவர்களது அந்நியச் செலாவணி கையிருப்பும், வர்த்தகமும் விரிவடைகின்றன.

டாலரைத் தவிர்த்தல்!
இன்றைய உலகில் டாலரே ரிசர்வ் நாணயமாக இருக்கும் சூழலில் அதைவிடுத்து பிற நாட்டு நாண யங்களையும் ரிசர்வ் நாணயங்களாக ஏற்றுக் கொள்ளும் இந்த முறையினை ரஷ்யர்கள் பரிவர்த்தனையில் “டாலரைத் தவிர்த்தல்” (De-dollarisation) என்று அழைக்கின்றனர். இதனை ஊக்கப் படுத்துவதற்காக, ரஷ்யக் கம்பெனிகள் ஒரு குறிப்பிட்ட சதவீத அளவு வர்த்தகத்தை ரஷ்ய நாணயமான ரூபிளிலேயே செய்ய வேண்டும் என்று, அண்மையில் ரஷ்யா சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.

நீண்ட கால விளைவுகள்!
உலக ரிசர்வ் நாணயமான டாலர் அமெரிக்காவின் உள்நாட்டு நாணய மாகவும் இருப்பதால், அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ், அதை எளிதில் அச்சிட்டுக் கொள்ள முடிகிறது. தனது நடப்புக் கணக்குப் பற்றாக்குறை எவ்வளவு பெரிதானலும், டாலரை அச்சிட்டு அதனை ஈடு செய்து கொள்ள முடிகிறது. பின்னர் இப்படி அச்சடித்த டாலர்களை வைத்து அரசின் கருவூலப் பத்திரங்கள் போன்ற நிதிச் சொத்துக்களை வாங்கி, அதன் மூலம் பணத்தை பொருளாதாரத்திற்குள் புழக்கத்தில் விடுகிறது. பிற நாடுகள் அமெரிக்க டாலர் களைத் தவிர, வட்டி தரக் கூடிய டாலர் சொத்துக்களையும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினால், அந்தச் சொத்துக்களை அவர்களுக்கு விற்று, தான் அச்சடித்த பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறது. ஃபெடரல் ரிசர்வைப் பொறுத்த அளவில், இந்த இரண்டுமே ஒன்றுதான். பிற நாடுகள் விரும்புவது டாலர் என்றாலும், வட்டி தரும் வேறு நிதிச் சொத்து என்றாலும் அமெரிக்க நடப்புக் கணக்கிற்கு அதனால், எந்தப் பாதகமும் ஏற்படுவது இல்லை.

இரண்டு சூழல்களிலுமே
ஒரு வேளை நாம் ஏற்கனவே சொன்னபடி சர்வதேச வர்த்தகப் பரிவர்த்தனைகளில் டாலர் தவிர்க்கப்படும் என்றால், அமெரிக்கா இப்படி டாலரை அச்சடித்து தனது நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை எளிதாகச் சரி செய்து கொள்ள முடியாது. டாலருக்கான கிராக்கி அவ்வாறு குறையும் போது, தேவைக்கு அதிகமாக டாலர் அச்சடிக்கப்பட்டால் டாலரின் மதிப்புமோசமாக வீழ்ச்சியடையும் அபாயம் உண்டு. அத்தகைய சூழலில் சொத்துடைமையளர்கள் தங்களுடைய சொத்துக்களை, தங்கம், வெள்ளி போன்ற பண்டங்களிலோ, பிற வடிவங்களிலோ மாற்றிக் கொள்ளவே விரும்புவார்கள்.
அதனை நோக்கியே செயல்படுவார்கள். அப்படி செய்யும்போது 1970களின் துவக்கத்தில் ஏற்பட்டது போன்று, பணவீக்கம் அதிகரித்து விடும். வேறு வழியில்லாமல் அமெரிக்கா தனது நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை குறைத்துக் கொண்டால், தனது மக்களின் நுகர்விற்காக அமெரிக்கா இன்று இறக்குமதி செய்யும் பண்டங்களின் அளவுகுறையும். அந்த அளவிற்கு அமெரிக்க மக்களின் வாழ்க்கைகத் தரமும் வீழ்ச்சியடையும். இராணுவச் செலவுகளையும் சுருக்க வேண்டிய தேவையின் காரணமாக, அமெரிக்காவின் இராணுவ பலமும் குறையும்.
அத்தகைய நிலை ஏகாதிபத்தியத்தின் தலைவனான அமெரிக்காவிற்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, இரண்டு சூழல்களிலும் நெருக்கடி கடுமையாகி, அதனால் முதலாளித்துவ உலகமும், அமெரிக்க மேலாதிக்கமும் ஆட்டம் காண நேரிடும். டாலர் ரிசர்வ் ஏற்பாட்டிலிருந்து எந்த நாடேனும் விலகி, வேறு நாணயங்களுக்குச் சென்றால், அமெரிக்கா அதை கடுமையாக எதிர்கொள்ளும் என்பது அறிந்ததே. இராக் தனது எண்ணெய் வர்த்தகப் பரிவர்த்தனையை டாலரிலிருந்து யூரோவிற்கு மாற்றத் திட்டமிட்டதுதான் இராக் ஆக்கிரமிப்பிற்கு முக்கியமான காரணம் என்று இன்றைக்கும் ஒரு சந்தேகம் உள்ளது.

சீனாவின் தேவை!
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு ஆளான ரஷ்யாவிற்கும், ஈரானுக்கும் டாலரைத் தவிர்க்கும் இயல்பான தேவை உள்ளது. சீனாவிற்கு அத்தகைய தேவை வேறு வகையில் உள்ளது. ஆனால், அதில் சிக்கலும் உள்ளது. பெருமளவிலான தனது நடப்புக் கணக்கு உபரியின் காரணமாக, சீனா ஆகப்பெருமளவில் டாலரையும், டாலர் மதிப்பிலான சொத்துகளையும் குவித்து வைத்திருக்கிறது. அனைத்தையும் டாலர் மதிப்பிலேயே வைத்துக் கொள்ளும் அபாயத் தினை மனதில் கொண்டு, மெள்ள மெள்ள அதை தங்கமாகவும், யூரோவாகவும் மாற்றிக் கொண்டு வருகிறது. அண்மைக் காலங்களில் யூரோவின் மதிப்பு சற்றுவலுப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். தங்க இறக்குமதியில் இந்தியாவைப் போல தனியார் என்று இல்லாமல், சீன அரசாங்கமே அதைச் செய்கிறது.

சீனாவின் சங்கடம்!
டாலரைத் தவிர்க்கும் நடவடிக்கை, டாலரின் மதிப்பை வீழ்த்தி விடும். டாலர் மதிப்பில் சொத்துக்களைக் குவித்திருக்கும் சீனாவிற்கு இதனால், மூலதனஇழப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. மரத்தில் தான் அமர்ந்திருக்கும் கிளையினையே வெட்டிய மகாகவி காளி தாசனின் கதையாக அது ஆகிவிடும். எனவே தான் சீனா சத்தமில்லாமல் இரகசியமாக, கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரியாமல் டாலரிலிருந்து வேறு வடிவத்திற்கு மாறுகிறது. இந்தப்புரிதலுடன் தான், ரஷ்ய - சீன ஒப்பந்தத்தைப் பார்க்க வேண்டும்.

இந்தியாவின் நிலை!
இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்ந்து அமெரிக்காவிற்கு அடிபணிந்து செல்வதாகவே உள்ளது. ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மீறுவதற்கு நிர்ப்பந்தம் ஏற்படும் போது, இது தற்காலிக நடவடிக்கை தான் என்று கூறி, அமெரிக்காவின் அனுமதியைப் பெற்ற பின்னரே, இந்தியா அதைச் செய்கிறது. ஒருவேளை தடைகளை உடைத்து ஈரானுடன் வர்த்தகம் செய்வது என்று இந்தியா முடிவு செய்தால், தடை மீறிய வர்த்தகத்திற்கு காப்புறுதி வழங்க நம் நாட்டின் பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்குக் கூட அதற்கான பலம் இல்லை.
ஏனெனில், அவையெல்லாம் இன்றைக்கு, மேற்கத்திய இன்சூரன்ஸ் கம்பெனிகள் தரும் மறு காப்பீட்டினை நம்பி நிற்க வேண்டிய நிலையில் உள்ளன. தடை மீறிய வர்த்தகம் என்று தெரிந்தால் மேற்கத்திய கம்பெனிகளிடமிருந்து அதற்கான மறு காப்பீடு கிடைக்காது. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை பலப்படுத்துவதன் மூலமே அதற்குத் தீர்வு காண முடியும். அப்போது தான் குறைந்தபட்ச தன்னதிகாரத்தினை காப்பாற்றிக் கொள்ள இயலும். மேற்கத்திய கம்பெனிகளை நாடி மறுகாப்பீடு செய்வதைத் தவிர்க்க வேண்டுமெனில், பொதுத் துறை இன்சூரன்ஸ் கம்பெனிகளின் வலிமையினை அதிகரிக்கும் வகையில், கணிசமான அரசு முதலீடு தேவைப் படுகிறது. ஆனால், அதையெல்லாம் செய்வதற்கு, அதாவது, பொருளாதார ரீதியாக அமெரிக்காவிற்கு அடிபணியும் நிலைப்பாட்டினை மாற்றிக் கொள்வதற்கு இந்தியா தயாரில்லை.

சோவியத் யூனியனும்
ரஷ்யாவும் ஒன்றல்ல!
ரஷ்ய அதிபர் புடினின் அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து அவசரப்பட்டு நாம் எந்த முடிவிற்கும் வந்துவிடக் கூடாது. ரஷ்யச் செல்வந்தர்கள் மேற்கத்திய வங்கிகளில் அநேகமாக டாலர் வடிவிலேயே சொத்துக்களை வைத்திருக்கின்றனர். டாலரைத் தவிர்க்கும் முயற்சியினை ரஷ்யக் கார்ப்பரேட் முதலாளிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அத்தகைய வர்க்க எதிர்ப்பினை புடின் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். என்னதான் அமெரிக்க எதிர்ப்பு கொண்டதாக இருந்தாலும், புடினின் ரஷ்யாவும் சோவியத் யூனியனும் ஒன்றல்ல. நாளைக்கே புடின், மேற்கத்திய நாடுகளிடம் சரணடைந்து, டாலர் தவிர்ப்பு நடவடிக்கையினைக் கைவிட்டாலும் அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

தமிழில் : ஆர்.எஸ். செண்பகம், திருநெல்வேலி.

6/6/14

தஸ்தயேவ்ஸ்கியின் அப்பாவியின் கனவு

‘அவர்கள் தீயவர்களாக மாறிய பிறகு சகோதரத்துவத்தையும் மனிதாபிமானத்தையும் பற்றி பேசத் தொடங்கி இக்கருத்துக்களை புரிந்து கொண்டனர். அவர்கள் குற்றவாளிகளாக மாறிய பிறகு நீதி என்ற கருத்தைக் கண்டுபிடித்தார்கள். நீதியை நிலை நிறுத்துவதற்காக பெரிய சட்டப்புத்தகங்களை கோட்பாடுகளை எழுதிக் கொண்டார்கள். இச்சட்டங்களைப் பாதுகாப்பதற்காக ஒரு தூக்கு மேடையை நிறுவினார்கள், அவர்கள் எதை இழந்துவிட்டார்கள் என்பதைப் பற்றி அவர்களிடம் தெளிவில்லாத நினைவு மட்டுமே இருந்தது. ஒரு காலத்தில் தாங்கள் கபடமில்லாதவர்களாக, மகிழ்ச்சி நிரம்பியவர்களாக இருந்திருக்க முடியும் என்ற எண்ணமே அவர்களுக்கு சிரிப்பைக் கொடுத்தது. அவர்கள் அது ஒரு கனவு என்றார்கள், அதை பிம்பங்களிலும் உருவங்களிலும் அவர்களால் கற்பனை செய்யக் கூட முடியவில்லை. ஆனால் விசித்திரமும், அதிசயமும் என்னவென்றால் அவர்கள் தங்களுடைய முந்தைய மகிழ்ச்சியை கட்டுக்கதை என்று சொன்னார்கள்’.
‘இந்தப் பூமியில் வாழ்கின்ற திறமையை இழந்துவிடாமலேயே மனிதர்கள் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும் என்பதை நான் அறிந்திருக்கிறேன். தீமையை மனிதனின் இயற்கையான நிலைமை என்பதை நான் நம்ப முடியாது. அதை நான் நம்பமாட்டேன்’.
“வாழ்கையைப் பற்றிய உணர்வு வாழ்க்கையை காட்டிலும் உயர்வானது, மகிழ்ச்சியின் விதிகளைப் பற்றிய அறிவு மகிழ்ச்சியைக் காட்டிலும் உயர்வானது. இதை நாம் எதிர்த்துப் போராட வேண்டும். நான் போராடுவேன். எல்லோரும் விரும்பினார்கள் என்றால் அனைத்தையும் உடனடியாகச் செய்துவிட முடியும்”.–‘அப்பாவியின் கனவு’
 ஆசிரியர்: #ஃபியோதர்_தஸ்தயேவஸ்கி (தஸ்தயேவ்ஸ்கியின் சிறுகதைகளும் குறுநாவல்களும் நூலில் இருந்து).

5/6/14

மாற்றம் அல்ல, தொடர்ச்சியே!

அக்கீல் பில்கிராமி கொலம்பியா பல்கலைக்கழகத் தத்துவத் துறை அறிஞர் 

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் களின் பின்னணியில், புதிய பிரதமர் மோடி “இந்தியாவின் அரசியல் பிரபஞ்சத்தினையே முற்றிலும் மாற்றி அமைக்கப் போகிறார்” என ‘கார்டியன்’ ஏட்டில் அஷூதோஷ் வர்ஷினி என்ற விமர்சகர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் காலப் பாசாங்கு வார்த்தைகள் கூட அரசியல்வாதிகளுக்கு இத்தகைய தொரு மலிவான வழியில் புகழ் தோற் றத்தினைக் கொடுத்து விடுகின்றன. தேர்தல் காலத்தில் அச்சிலும், திரை யிலும் மோடியும் அவரது பாசாங்குப் பேச்சுக்களும் இல்லாமல் எந்த ஊடகஇருந்தது? மாறிவரும் இன்றைய நவீனகால பொது வாழ்க்கையின் பிரதிபலிப் பின் ஒரு பகுதியே இது. இந்தத் தோற் றத்தினைப் பெறுவதற்கு மோடி எடுத்துக் கொண்ட கடுமையான முயற்சிகள், கார்ப் பரேட்டு நிறுவனங்களும், அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களும் இதற்காக செலவிட்ட நிதி என அனைத் தும் சேர்ந்து மோடிக்கு நாடு முழுவதும் இத்தகைய தோற்றத்தினை மக்கள் மத்தியில் உருவாக்கி விட்டது என்னவோ உண்மை.



தன்னடக்கப் பாசாங்கு


மோடியின் தந்திரம் பலித்து விட்டது. நாட்டின் மிக உயர்ந்த பதவியினை அவர் அடைந்து விட்டார். ஆனால், அவர் இப்போது நெஞ்சு நிமிர்த்தி நடக்கும் தனது இயல்பான தன்மையினை மறைத்து, மிகவும் தன்னடக்கப் பாசாங்குடன், ஏழை மக்களைப் பற்றியும், உழைக்கும் மக்களைப் பற்றியும் மிகவும் அக்கறையுடன் பேசத் தொடங்கியுள்ளார். இவர் தொடரப் போகும் கொள்கைகளால் எந்த மக்கள் மேலும் வறுமைக்குள்ளும் பாதுகாப்பற்ற வாழ்க்கைக்குள்ளும் தள்ளப்படப் போகின்றனரோ, அந்த மக்கள் குறித்து இப்போது மிக்கப் பரிவுடன் பேசி வருகிறார். தேர்தலுக்கு முன்பு மோடியை எதிர்த்தவர்களில் சிலர் கூட, அவர் ஏதாவது நல்லது செய்யக் கூடும் என்று நம்புகின்ற இன்றைய நிலையில், இதைச் சற்று அழுத்தமாக கூற வேண்டியத் தேவை உள்ளது எனக் கருதுகிறேன்.

மெத்தனம் கூடாது

ஒரு ஜனநாயகத்தில் தேர்தல்கள் குறித்து இரண்டு விஷயங்கள் தான் இருக்க முடியும். ஒன்று, முடிவுகள் எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இரண்டு, அந்த முடிவுகள் ஒருவருக்கு அச்சமளிப்பதாக இருப்பினும், எந்த காரணத்தைக் கொண்டும் வாக்களித்த மக்கள் மீது குற்றம் சொல்லக் கூடாது. இதைத் தாண்டி பெருந்தன்மையுடன் பேசுவதற்கு இதில் வேறொன்றுமில்லை. தேர்தல் முடிவுகள் குறித்து விமர்சனபூர்வமாக கணிப்புகளைச் செய்யும் அம்சத்தில் மட்டும் அசட்டையாக இருந்து விடக் கூடாது. அவப்பெயர் கொண்ட ஒருவர் வெற்றி பெற்று விட்டதனாலேயே, அந்த வெற்றியினைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அவர் தனது சித்தாந்த நம்பிக்கைகளையும், இயல்புக் குணாதிசயங்களையும் மாற்றிக் கொள்வார் என்று முடிவுக்கு வந்து விடக் கூடாது. அத்தகைய மெத்தனப் போக்கு தீயது. அது நமது நம்பிக்கைகளையும் போராட்டங்களையும் பாழ்படுத்தி விடும்.

பாசிசம் என்பது என்ன?

1930-40களில் ஐரோப்பாவில் இருந்த நிலைமைகளை மனதில் கொண்டு, அந்த அடிப்படையில், இன்று காலத்திற்குப் பொருந்தாத வகையில், மோடியை ‘பாசிஸ்ட்’ என்று அழைப்பது அறிவீனம் என, மோடி எதிர்ப்பாளர்கள் குறித்து சில அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டினர். அப்படியானால், பாசிசம் என்பது தான் என்ன? பாசிசத்திற்கு இரண்டு முக்கிய குணாம்சங்கள் உண்டு. ஒன்று, தனது நாட்டிற்குள்ளேயே அந்நிய எதிரிகள் என்று ஒரு பகுதியினரை அடையாளப்படுத்துவது. (ஜெர்மனியில், யூதர்கள், நாடோடிஜிப்சிகள் இவ்வாறு அடையாளப்படுத்தப் பட்டனர்). இரண்டு, தேசத்தின் நலன்களையும், கார்ப்பரேட் நலன்களையும் இரண்டறக் கலப்பது. பாசிசம் என்பது அது தான் என்று பாசிசத்திற்கு முசோலினி அளித்த அந்த புகழ் பெற்ற விளக்கம் அந்தவிமர்சகர்களுக்கு நினைவுக்கு வரவில்லை போலும். முஸ்லிம்கள் குறித்த விஷயத்தில் மோடியின் கடந்த கால வரலாறு, அவருடைய பொருளாதாரக் கொள்கைகள் என இவ்விரண்டையும் பொருத்திப் பார்த்தால் மோடி யார் என்பதைப் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமா என்ன?.

பசப்பல்கள்!


மாற்றம் குறித்தும், இந்தியாவின் புதிய எதிர்காலம் குறித்தும் மோடி விடுக்கும் அறிக்கைகளை பசப்பல்கள் என்று நான் கூறுவதற்கு அழுத்தமான காரணங்கள் உண்டு. மன்மோகன் சிங்கும் அவரது சகாக்களும் பின்பற்றிய கொள்கைகளைத் தான் மோடியும் தொடரவுள்ளார். ஒரேஒரு மாற்றம் என்னவெனில், பி.ஜே.பிஅந்தக் கொள்கைகளை சற்று சாமர்த்தியமாக நிறைவேற்றும். தற்போதைக்கு, பொருளாதார அரங்கினை விட்டு விடுங்கள். உதட்டளவில் மதச்சார்பின்மை பேசிக் கொண்டாலும், இந்திரா காந்தியும், பின்னர் ராஜீவ் காந்தியும் இந்திய அரசியலில் பெரும்பான்மைவாத, வகுப்புவாத அம்சங்களை நுழைத்தனர். பின்னர் பி.ஜே.பி அதை எவ்வாறு அவற்றின் தர்க்கரீதியான எல்லைக்கு வெற்றிகரமாக எடுத்துச் சென்றது என்பது நாம் அறிந்தது தானே?

ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், உணவுப் பாது காப்புத் திட்டம் என்பனவெல்லாம் ஐ.மு.கூ அரசின் திட்டங்களே எனினும், அதனைச் சரியாக நிறைவேற்றாமல், அது அவற்றைக் கிடப்பில் போட்டு விட்டது. ஆனால், பி.ஜே.பி இது போன்ற விஷயங்களில் சாதுரியமாக நடந்து கொள்ளும். மோடியின் ‘குஜராத் மாடலுக்கும்’, சந்திரபாபு நாயுடுவின் ‘ஆந்திரா மாட லுக்கும்’ இடையில் என்ன வேறுபாடு? சென்ற முறை சந்திரபாபு நாயுடு ஆட்சியின் முடிவில் என்ன ஏற்பட்டது? பெருநகர் அடிப்படியிலான வளர்ச்சி என்ற பெயரில் சாமானிய மக்களின் நலன்களைக் காவு கொடுத்ததன் விளைவாக ஆந்திராவில் அன்று சந்திரபாபு நாயுடுவின் கட்சி தோற்றது மட்டுமல்ல, அந்த மாநிலமே இன்று இரண்டு துண்டுகளாகப் பிளக்கப்பட்டு விட்டதே?.

ஊழல் ஒழிந்து விடுமா?

காங்கிரஸ் ஆட்சியில் உருவான பெரும் ஊழல்களை எல்லாம் ஒழித்து விடுவோம் என பி.ஜே.பி கூறுவதும் மற்றொரு பசப்பலேயாகும். இதற்கு முந்தைய கால கட்டத்தில் இதே பி.ஜே.பி ஊழல் குறித்த அம்சத்தில் எப்படி நடந்து கொண்டது என்பது நாம் அறிந்தது தானே? கடந்த இருபது ஆண்டுகளில் ஊழல் இந்திய முதலாளித்துவத்தின் உள்கட்டுமானமாக மாறியிருக்கும் நிலையில், அதை ஒழிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதைப் பொறுத்த மட்டில், எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பது பிரச்சனையே அல்ல.

முஸ்லிம் இளைஞர்கள்!

இந்தத் தேர்தல் காலத்தில், படித்த முஸ்லிம் இளைஞர்களின் மனநிலை, பிற பொதுவான முஸ்லிம் மக்களின் மன நிலையிலிருந்து சற்று மாறுபட்டிருந்தது என, ‘பைனான்ஷியல் டைம்ஸ்’ (22.05.2014) ஏட்டில் ஒரு விமர்சகர் எழுதியிருக்கிறார். மோடிக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதற்கு சாதகமான மனநிலையில் அவர்கள் இருந்தனர் என்றும் கூறுகிறார். இது ஏறக்குறைய ஜின்னா காலத்தில் இருந்தே, அதாவது சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தொடர்கிற நிலைமை தான். ஒன்றுபட்ட இந்தியாவில் முஸ்லிம் இளைஞர்கள், குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் படித்த இளைஞர்கள், தங்கள் வேலைவாய்ப்புக்கள் குறித்து அதிகம் கவலைப்பட்டவர்களாக இருந்தனர்என முன்பு மௌலானா ஆசாத் தனது எழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறார். இப்போதும் கூட, மோடி பெரும்பான்மை வாதத்தில் நம்பிக்கை கொண்டவர் எனினும், பெருநகர் அடிப்படையிலான வளர்ச்சி என்று வரும் போது வேலை வாய்ப்புக்கள் உருவாகலாம் என்ற நப்பாசை அவர் களுக்கு இருந்திருக்கக் கூடும். 

இது என்ன புதிதா?

பெருநகர் அடிப்படையிலான வளர்ச்சி என்பது ஒன்றும் புதிதல்ல. இதைத்தானே முந்தைய அரசின் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் கூறி வந்தார்? 2008 மே மாதம் டெஹல்கா ஏட்டிற்கு அவர் அளித்த பேட்டியில், இந்திய நாட்டின் 85 சதவீதத்தை நகரங்களாக மாற்ற விரும்புவதாக அவர் குறிப்பிட்டார். இந்திய நாட்டில், ஆயிரக்கணக்கான வருடங்களாக விவசாயத்தை நம்பி வாழும் கிராமப்புற மக்களின் வாழ்க்கையினை ஒரேயடியாக மாற்றி விடுவது அவ்வளவு எளிதா என்ன? வறுமையில் வாடும் அந்த மக்களின் வாழ்நிலையினை மேலும் மோசமாக்குவதன் மூலம் தான், இந்தச் சீர்திருத்தத்தினை இன்று அவர்கள் தொடங்க முடியும்.

நவீன தாராளவாதமும், அதிருப்தியும்!

மாற்றம் குறித்த வாக்குறுதிகள் ஒன்றும் புதிதல்லவே. 2004 தேர்தல் களை சற்று நினைத்துப் பாருங்கள். ‘ஒளிரும் இந்தியா’ என பி.ஜே.பி கூறிய பசப்பல் வார்த்தைகளை எவரும் அன்று நம்பவில்லை. ஆனால், இன்று நிலைமை மாறியிருக்கிறது. பத்து ஆண்டுகளாக நடைபெற்ற மோசமான ஆட்சியின் பின்னணியில், சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரம் அவ்வளவு வலு வாகவும் இல்லை. அது மக்களிடம் எடுபடவுமில்லை. நவீன தாராளவாதக் கொள்கைகளே அனைத்து அவலங்களுக்கும் காரணம் என்ற உண்மையினை மக்கள் புரிந்து கொள்ளாதவாறு தடுக்கும் வகையில் ஊடகங்களின் செயல்பாடுகள் அமைந்து விட்டன. அந்த நோக்கில் செயல்படும் பல பண்டிதர்கள், விமர்சகர்களின் சேவகமும் இதன் பின்னணியில் இருந்தது. நாட்டு நடப்புக்கள் குறித்த குறைந்தபட்ச விவரங்களும், நேர்மையான பரிசீலனையும் இருந்தால் இவற்றை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

நேர்மையான அரசியல் கட்சிகள்!

அதே வேளையில், இந்த நிலைமை தான் எப்போதும் தொடரும் என விரக்தி அடையத் தேவையில்லை. நவீன தாராளவாதக் கொள்கைகளை எதிர்க்கும் நேர்மையான அரசியல் கட்சிகள் தங்களது பலவீனத்தைக் களைந்து, தங்களது அரசியல் சக்தியினையும், அரசியல் உறுதியினையும் ஒன்று திரட்டிப் போராடும் நிலை தோன்றினால் அது சாத்தியமானதே. இன்றைய சூழலில், அது உடனடியாக சாத்தியமில்லை என்பது போலத் தோன்றக் கூடும். ஆனால், இன்று வரை கடைப்பிடிக்கப் பட்டிருக்கும் கொள்கைகளும், நாளையும் மோடி தொடரவிருக்கிற மேலும் கடுமையான நவீன தாராளவாதக் கொள்கைகளும், உண்மையான மாற்றத்திற்கான சூழ்நிலையினையும், அதற்காகப் போராடும் உத்வேகத்தினையும் கண்டிப்பாக உருவாக்கி விடும்.

வழி காட்டும் அரசியல் எது?

இது ஒன்றும் நடக்க முடியாதது அல்ல. உலகின் சில பகுதிகளில் இது ஏற்கனவே தொடங்கி விட்டது. தென் அமெரிக்க நாடுகள் சிலவற்றில் அது எழுச்சி பெற்று வருகிறது. ஆனாலும், சர்வதேச ஊடகங்கள் அவற்றை இருட்டடிப்புச் செய்து வருகின்றன. கடுமையான எதிர்மறைச் சூழலுக்கிடையிலும் அந்நாடுகளின் மக்கள் நடத்தும் இயக்கங்களின் பின்னணியில், இன்று மாற்றுக் கொள்கைகளை அமலாக்கும் அரசுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வரு கின்றன. அந்த அரசுகள், சர்வதேச நிதி மூலதனத்தின் நிர்ப்பந்தங்களையும் மீறி, எளிய மக்களின் வாழ்நிலையை சிறிது சிறிதாக உயர்த்தி வருகின்றன. இந்தப் பின்னணி சில கேள்விகளை எழுப்புகிறது. மக்கள் அத்தகைய அரசு களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் வழிகாட்டிய அரசியல் எது? மக்களை அணிதிரட்டும் வகையில் மக்கள் மத்தியில் அந்த அரசியல் எவ்வாறு கட்ட மைக்கப்படுகிறது? நவீன தாரளவாதக் கொள்கைகளின் நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகாமல், அதை அந்த அரசுகள் எப்படி எதிர்த்து நிற்கின்றன? அத்த கைய அரசியலையும், அரசியல் பொரு ளாதாரத்தையும் அறிந்து கொள்வது மட்டுமல்லாமல், மேற்கண்ட கேள்வி களுக்கான உரிய விடைகளையும் தேடிக் கண்டுணர்தல் இன்று மிகவும் அவசியம்.

தொகுப்பு:இ.எம். ஜோசப் நன்றி : தி இந்து (ஆங்கிலம்) 30.05.2014

3/6/14

கலைஞர் கருணாநிதிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

                                                                                        
திமுகத் தலைவர் - மு. கருணாநிதிக்கு இன்று 91வது பிறந்தநாள்.
இந்தியாவின் அனைத்து பொதுத் தேர்தல்களையும், சந்தித்த தலைவர்களுல் பிரதானமானவர் திரு.மு.கருணாநிதி.
திமுகத் தொண்டர்கள் மற்றும் அபிமானிகள் என அனைவராலும் பரவலாக கலைஞர் என அழைக்கப்படும் கருணாநிதியின் ஆரம்பகால அரசியல் பேச்சாற்றலை அவரது சொல்வனத்தை அக்காலத்தில் மெச்சாத ஆளே இல்லை என்று சொல்லலாம்.
அந்த அளவிற்கு மக்களையும், இளைஞர்களையும் தன்னுடைய பேச்சாற்றல் மூலம் திமுகவின் பால் ஈர்த்தவர், கலைஞர்.
என்னுடைய தந்தை தன்னுடைய இறுதிகாலம் வரையிலும் திமுக ஆதரவாளராகவும், கலைஞர் அபிமானியாகவுமே இருந்தார்.
அதனுடைய தாக்கம் சிறு வயதில் என்னுள்ளும் இருந்தது.
ஆனால், அன்று நான் கேள்விப் பட்ட திமுகவும் , இன்று இருக்கும் திமுகவையும் வேறுவேறாகவே எண்ணத் தோன்றுகிறது.
காலங்கள் மாறுகிறது, ஆனால் திமுக அதற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளவில்லை. மாறாது இருந்தது திமுவின் தலைமை மட்டுமே. இதுவே திமுகவின் மேல் மக்கள் அனைவரிடத்திலும் ஒரு எண்ணத் தளர்வை உண்டுபண்ணியது.
ஒருகாலத்தில் பெருவாரியான இளைஞர்களை தன்பக்கம் வெகு இலகுவாக ஈர்க்க முடிந்த திமுகவால், இன்று அதனுடைய பாரம்பரிய வாக்குவங்கியையே கூட காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. இதிலிருந்தே அதனுடைய சரிவு எத்தகையது என ஊகித்தரியலாம்.
வெற்றித் தோல்வி என்பது நமது தேர்தல் முறையில் வெகு சாதாரணம், ஆனால் தோல்விக்கு பிறகு கட்சியை நெறிப்படுத்திக் கொள்ள முயல்வதும், அதிலிருந்து கற்றுக் கொண்ட பாடத்தின் அடிப்படையில் கட்சிக்குள் மாற்றங்கள் செய்ய வேண்டியதும் முக்கியமானது.
ஆனால் இப்பணியில் திமுக தலைமை, சட்டமன்ற தேர்தல் முடிந்து இந்நாள்வரையிலும், தற்போது நடைப்பெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை கடந்து தற்போது வரையிலும் எந்தளவு தன்னை ஈடுபடுத்திக் கொண்டது என்பது சந்தேகமே.
கடந்தகால தலைமுறையினரை பொறுத்தவரை திமுக என்பது  ஒடுக்கப்பட்டவர்களுக்காக, சிறுபான்மையினருக்காக, சமூகநீதிக்காக குரல் கொடுத்த ஒரு கட்சி. ஆனால் இந்த தலைமுறையினரின் சமகால அரசியல் விழுமியங்களைப் பொறுத்தவரை திமுக என்பது ஊழல் வயப்பட்ட கட்சி.
இந்த அவப்பெயரைஅகற்றுவதற்கான பணியை மும்முரமாக திமுக துணிந்து முன்னெடுக்க வில்லை என்பதே யதார்த்த நிலை.
திமுக குடும்ப அரசியல் சூழலும், மா.செ'களின் குறுநில மன்னர் போக்கும் எதிர்மறை அபிப்பிராயத்தையே இன்றைய தலைமுறையினர் மனதில் விதைத்தது. அது தேர்தலிலும் எதிரொலித்தது.
காலங்காலமாய் பாடுபட்டு கட்சியை வளர்த்த 91 வயது மனிதர், இன்று தன் கண் முன்னே கழகத்தின் பெயர் களங்கம் அடைந்திருப்பதை எண்ணி மனதளவில் எத்துனை வேதனைக்கு  உள்ளாவார் என யூகிக்க முடிகிறது.
கவலையடைந்து இருப்பதை விட, விரைவில் ஸ்தாபன அளவில் துணிச்சலாக சில மாற்றங்களை திமுகவில் முன்னெடுத்தாலொழிய கழகத்தை கரை சேர்க்க முடியாது. இதை கலைஞரும் அறிவார்.
நம்மை பொறுத்தவரை, ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கு நாம் என்றுமே எதிரி கிடையாது.
துவண்டு கிடக்கும் ஒவ்வொரு மதச்சார்பற்ற முற்போக்கு அரசியல் சக்திகளுக்கும் உத்வேகம் அளிப்பது, தவறுகளை சுட்டிக் காட்டுவது, விமர்சிப்பது அனைத்து முற்போக்கு எண்ணமுடைய  ஜனநாயக  விரும்பிகளது கடமை என்றே எண்ணுகிறேன்.
கலைஞருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ☆ 

பா.ஜ.கவின் இந்த வெற்றியைச் சாத்தியமாக்கியவர்கள் – அ.மார்க்ஸ்

முழுக் கட்டுரையை வாசிக்க
http://amarx.org/?p=1429

31/5/14

M F HUSSAIN, THE GREAT

One of the Finest Artist of Our Times! The Man who portrayed India,  Indian Art towards Global Community through his Gorgeous Paintings ... M F Hussain, The Great!!! 
One of a Remarkable Identity of Modern India... Kudos

30/5/14

கனவுலகம்

கைகளால் தொட எண்ணியதை எல்லாம்
எண்ணத்தால் தீண்டினேன்,
 கனவின் வழி.
எட்டா சிகரங்கள் அனைத்தையும்,
எளிதாய் கடந்து சென்றேன்,
கனவின் வழியே...
மீளா துன்பங்கள் அனைத்திலிருந்தும்,
நொடிப்பொழுதில் மீண்டு வந்தேன்,
கனவின் வழியில்....
என் கனவுகள், என்னால் உருப்பெற்றது, என்னையும் பண்படுத்தியது.
வாழிய நூற்றாண்டு கனவுலகம்!!!

எஸ்.ராமகிருஷ்ணன்- நெடுங்குருதி நாவல்- விமர்சனம்

http://www.sramakrishnan.com/?p=3987

27/5/14

நான் மழை

வார்த்தைகள் முட்டினால்

மௌணங்கள் மொழியாகலம் !

நீ

என்னை தொட்டதால்

நானும் மழை ஆனதேன் ! 

உன் கண்கள் பட்டதும் 
காற்றும் கணத்ததேன் ...............

நேற்று என் வாசலருகே 
கடந்தாய் நீ எனை  
வீசிய மழைக்காற்று என் செவி 
தொட்டு அழைத்தது 
என் வருகையை கவணி என!

மழை காண வந்த நான் 
மனதை நழுவவிட்டேனோ....
ஏணோ, தவற விட்டதேனோ

மழை பார்க்க வந்த நான்,
மலைத்து பொய் நின்னேன் பல நொடி...
உன் கரிய கேசம் படர்ந்த 
மழை முகம் கண்டு தானடி !!!  

26/5/14

மூங்கில் நாதம் - கவிதை

 மனமொன்றில் மெல்லவே ஒலிக்கிறது

மூங்கில் நாதமொன்று ...

இயல்பாய், வெகு இயல்பாய்

காற்றோடு கலந்தபடியே கரைகிறது

காதின் ஓரம் ....

யாருக்காகவும் காத்திராமல்
யார் கவனத்தையும் நாடாமல் .......

இசை வழி நான் - கவிதை

கனத்திடும் மனதானது கரைய,

பலமுறை துணை நின்று உள்ளது இசை....

இசை உதவின் தனை, உண்டான,

எனை ஆட்க்கொண்ட எண்ணங்கள் உடனே மறைவதில்லை...

வழிந்தோடும் கண்ணீர்வழி
மறக்க முயல்வேன், என்னை நானே.......

25/5/14

Colour Of Music



'The world speaks to me in colours, my soul answers in music'.
The spirit of rejection finds its support in the consciousness of separateness; the spirit of acceptance finds its base in the consciousness of unity- RabindranatTagore

ராஜஸ்தான்

MEHRANGARH FORT, JODHPUR,RAJASTHAN

 

20/4/14

குஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன?- பயங்கரவாதிகளின் ஒப்புதல் வாக்குமூலம்; தெஹல்கா புலனாய்வின் முழுத் தொகுப்பு



 தோழர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம், குறிப்பாக இன்றைய சூழலில்.

நேற்று நடுநிசியில் இந்த புத்தகத்தை வாசித்து முடித்தேன், காலை வரை அதன் தாக்கம், வார்த்தகைகளின் வீரியம் என்னிலிருந்து மறையவில்லை. என்றும் மறையாது. 


‘நம் காலத்தில் நிகழ்ந்தேறிய ஒரு கொடூர நிகழ்வு, கோத்ரா இனப்படுகொலையைச் செய்தவர்களே பெருமிதத்துடன் அளித்த வாக்குமூலங்களின் பதிவே இந்நூல்’
தெகல்கா புலனாய்வின் முழு தொகுப்பு.

புத்தகத்தில் வர்ணிக்கப்படும் ஒவ்வொரு நிகழ்வையும் நினைத்து நினைத்து நான் தூக்கத்தையே தொலைத்தேன்...

குறிப்பாக கவுசிர் பானு , அவரை நினைத்த பொழுதில் கண்ணீர் துளிர்த்தது. மனம் வலித்தது.

நிறைமாத கர்ப்பிணி, அவர் அனுபவித்த அந்த வலியை நினைக்கக் கூட மனம் மறுக்கிறது, பதைபதைக்கிறது.
இந்த நிகழ்வில், நண்பர்களாலேயே வேட்டையாடப்பட்டவர் பந்தூக்வாலா, வதோதராவில் வசிக்கும் பேராசிரியரான இவர், தனது நண்பர்களால் மூர்க்கமாக தாக்கப்பட்டார், அருகாமையில் வசித்த ஒரு பிராமண குடும்பத்தால் பாத்ரூமில் மறைத்துவைக்கப்பட்டு காப்பாற்றப்பற்ற இவர் பின்னாட்களில் அந்த கொடூர நிகழ்வை இவ்வாறு நினைவு கூர்கிறார், ‘ஓநாய்கள் துரத்த ஓடும் முயலைப் போல நான் ஊரை விட்டே வெளியேறினேன்’.

என்னால் மறக்கமுடியாத பெயர்களில் சிலர், நசீமா பானு, இஷான் ஜாப்ரி, காசிம் பாய்....இன்னும் ஏராளம்.
இவர்கள் யாவரும் நிகழ்ந்தேறிய இனப்படுகொலையில் பலியானவர்கள். கொடூரமாய் கொல்லப்பட்டவர்கள். காவி பயங்கரவாதிகளால் வேட்டையாடப்பட்டவர்கள். 

வரலாற்றின் கருப்பு மையால் குறிக்கப்பட்ட பிப்ரவரி28,2002 நாளின் அழியா சான்றுகள் இவர்கள்.
ஒடுக்கப்பட்ட மக்களின் மரண ஓலம், காற்றில் கலந்து ஒலித்தவாறு, இன்றும் குஜராத்தை பீடித்தே உள்ளது. சமூகத்தாலும், பொருளாதாரத்தாலும் ஏற்கனவே வஞ்சிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டிருந்த அம்மக்கள், திட்டமிட்டு நசுக்கப்பட்டு, அழித்தொழிக்கப்பட்டனர்.
மனித சமூகமே வெட்கித் தலை குனியும் வகையில், ஈவிரக்கமற்ற முறையில் நசுக்கப்பட்ட அம்மக்களின் மனதில் கனன்று கொண்டிருக்கும் அந்த வலி, ஆறாது, நிச்சயம் என்றும் ஓயாது...
மறுக்கப்பட்ட நீதியின் வலி என்றும் மறையாது.






இந்து பயங்கரவாதிகள், "பரிவார்" என அழைக்கப்படும் காவி பயங்கரவாதிகள், நரோடியா பாட்டியா, குல்பர்க் கூட்டுறவு குடியிருப்பு, மோடாசா, தன்சுரா என எல்லா இடங்களிலும் எதிர்படும் அனைத்து இஸ்லாமியர்களையும் தயவுதாட்சன்யமின்றி வெட்டி, எரித்துக் கொன்றனர்.
அடி, கொல்லு, வெட்டு, எரி என அரசும், காவல்துறையும் நாள்நெடுகவும் கொலைகாரர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டிக் கொண்டே இருந்தன. அதில் முக்கியமானவர் மாயாபென் கோட்னானி.

இவை அனைத்தையும் விட தலையாயது எனின் அது நரேந்திரமோடியின் நேரடி ஊக்குவிப்பு தான்.

"நரேந்திர பாய் எங்களோடு இல்லையென்றால் எங்களால் இவ்வளவு பெரிய படுகொலையை நிகழ்த்தியிருக்க முடியாது" என்கிறான் முதன்மையான குற்றவாளி பாபு பஜ்ரங்கி. காவல்துறையும், நீதித்துறையும் மாறிமாறி கைகோர்த்துக் கொண்டு குஜராத் இனப்படுகொலை நிகழ்ந்தேறவும், அதனை நிகழ்த்தியவர்களை காப்பாற்றவும் பாடுபட்டது. இன்றைக்கு பெருமளவில் அதில் வெற்றியும் கண்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பிணையில் உள்ளனர், ஆம், இனப்படுகொலை நிகழத்தியோர் ஆசுவாசமாக சுதந்திரக் காற்றை சுவாசித்து வரும் ஒரு மயான பூமியே குஜராத்.
கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்பு வெளியான இப்புத்தகத்தின் மூன்றாவது பதிப்பு இது. இதை எளிய தமிழில் நமக்களித்தவர் எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் அவர்கள்.
வாசல் பதிப்பகம், தலித் முரசு இணைந்து வெளியிட்டுள்ளது.

தெகல்காவின் சார்பாக ஆறு மாத காலம் கடும் பயணம் மேற்கொண்டு, பல இன்னல்களைத் தாண்டி குஜராத்தின் உண்மைநிலையை உலகுக்கு வெளிக்கொணரந்த ஆஷிஷ் கேத்தன், இதற்கான ஆலோசனையும், உதவியும் புரிந்த தெகல்காவின் புலனாய்வு குழு ஆசிரியர் ஹரிந்திர பவேஜா, திரட்டப்பட்ட உண்மைகளை துணிச்சலாக சிறப்பு இதழாக வெளியிட்டு உலகின் கவனத்தை ஈர்த்த தருண் தேஜ்பால்...இவர்கள் மூவரும் வரலாற்றில் தாங்கள் செய்த பணிக்கு என்றும் மதிக்கப்படுவர். தெகல்காவின் இப்பணி பரவலாக அனைவராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்களின் இருள் சூழ்ந்த வாழ்வில் நம்பிக்கையின் எனும் வெளிச்சத்தின் சிறு கீற்றாய் வந்ததே இப்புத்தகம்.

இனப்படுகொலை குற்றவாளியான நரேந்திரமோடி இன்று பாஜகவின் பிரதமர் வேட்பாளர்....இது தான் இன்றைய அவலநிலை.
இந்த அவலமான காலக்கட்டத்தில் தான் நாம் வாழ்ந்துவருகிறோம், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவும் இருக்கிறோம். 






இயல்பாகவே எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்வி, எதற்காக பாஜக இந்த தேர்தலுக்காக இத்தனை கோடி ரூபாய்களை செலவு செய்கிறது.... இதற்கான எளிய விடை, அவர்கள் வளர்ச்சி எனும் போர்வையில் மறைக்க நினைப்பது ஒரு சாதாரண சிறு குற்றத்தை அல்ல, இனப்படுகொலையை!
இந்த புத்தகத்தின் மறுபதிப்பை மீண்டும் கொண்டுவந்தன் மூலம் மறைக்கப்பட்ட உண்மைகள் பலவற்றை இளைய தலைமுறையினர் தெரிந்துக் கொள்ள பெரிதும் உதவிய, அண்ணன் எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.