24/1/17

சமூக வலைதளமும் மனித உளவியல் தேய்வும்



இது சமூக வலைதங்களின் காலம். தேசம், எல்லை என்றெல்லாம் ஒன்று கிடையாது. யாரும் யாருடனும் பேசலாம், பழகலாம், நட்பாகலாம். கண்ணனுக்கு புலப்படாத ஒரு இணைப்பை ஏற்படுத்தியதில் இருக்கிறது சமூக வளைத் தளங்களின் சக்தி. யாரென தெரியாத புதிய நபர்களிடம் உறவு ஏற்படவும் ஒற்ற ரசனை கொண்ட புதிய நண்பர்களை கண்டடையும் சாத்தியத்தையும் சமூக வலைதளங்களே தந்துள்ளது.

இவை தான் சமூக வலைத்தளங்கள் பற்றிய நமது பொதுவான அபிப்ராயம்.



இவற்றை எல்லாம் தாண்டி சமூக வலைத்தளங்களை நாம் பார்க்கவே விரும்ப மாட்டோம். அதுவும் அதன் சாதக பாதகங்களை பற்றி பேசுவதெல்லாம் அலுப்பூட்டக்கூடிய விஷயம்.

ஆனால் வெளியாகி வரும் ஆய்வுகளானது, இதை பற்றியும் பேசி ஆக வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம் என்பதை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது.

பிரிட்டன் கொலம்பியா பல்கலைகழகத்தின் சமீபத்திய ஆய்வானது, ஐந்தில் ஒருவர் தனது நண்பர், காதலர் அல்லது குடும்ப உறுப்பினருடைய முக நூல் {facebook} கணக்கை அவர்களுக்கு தெரியாமல் அவர்களது திறன் பேசி {smartphone} வழியாகவோ, கணினி வழியாகவோ ரகசியமாக ஊடுருவி பார்கின்றனர் என்கிறது.

சமூக வலைதளங்களில் அதிகமாக பயனாளர்களை கொண்டுள்ளது பேஸ் புக். 2012ம் ஆண்டே 100 கோடி பயனாளர்களை தாண்டிவிட்ட பேஸ்புக் தளம், 2016ம் ஆண்டு இறுதி கணக்கின்படி 176 கோடி பயனாளர்களை தான் கொண்டுள்ளதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது. இப்படி சமூக வலைதளங்களில் முதன்மையான பேஸ் புக்கில் தான் அந்தரங்க தகவல்களுக்கான பாதுகாப்பின்மையும் அதிகரித்து வருகிறது. அதுவும் நெருங்கிய நண்பர்களிடம் இருந்தே வெளியாகும் இந்த அத்துமீறல் பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆய்வு குறித்து பேசிய வாஹ்லி அஹ்மத் உஸ்மானி “இது தொடர்ந்து அதிகரித்து வரும் ஒரு செயல்பாடு தான். தங்களது மொபைல் போனிலோ அல்லது கணினியிலோ பேஸ் புக் பயன்படுத்தி விட்டு, வெளி வராமல் அப்படியே விட்டு செல்கின்றனர். அப்படியான சமயத்தில் உடன் இருப்பவர்களின் மூலமாக முதலில் இலக்காவது அவர்களின் தனி செய்திகள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளே ஆகும்”.



இதற்கான கணக்கெடுப்பு அமெரிக்க இளைஞர்கள் 1308 பேரிடம் எடுக்கப் பட்டுள்ளது. தொடர்ச்சியாக பேஸ்புக் பயன்படுத்தும் அவர்கள் யாவரும் தங்களது User ID, password எனப்படும் வருகை பதிவு மற்றும் கடவுச் சொல்லை அடிக்கடி மாற்றியும் கூட பலன் இல்லை என்பதையும் சுட்டி காட்டுகின்றனர்.



பொறமை உணர்வு தான் இதில் முக்கிய பங்கு வகிக்கறது”, என்கிறார் ஆய்வில் முக்கிய பங்காற்றிய கணினி அறிவியல் பேராசியரர் இவான் பெஸட்னிக். அவர் மேலும் கூறுகையில் “அடிப்படையில் இந்த பொறமை தான் நெருங்கியவர்கள் என்று கூட பாராமல், அவர்களது அக்கவுன்ட்டை ஹேக் செய்யவும், ஊடுருவி பார்க்கவும் தூண்டுகிறது, சில சமயம் அந்த அக்கவுண்டையே பயன்படுத்தி அதன் உரிமையாளரை தொடர்ந்து கண்காணிக்கும் நிலைமை வரை இட்டுச் செல்கிறது” என்றார்.



இந்த ஆய்வில் பங்கெடுத்த சிலர், தங்களது குடும்பத்தினர் அல்லது விருப்பமானவர்களின் பேஸ்புக் பக்கங்களை கண்காணிக்கவும், அவர்களது நிலைத் தகவலை அல்லது புகைப்படத்தை நகைப்புக்குரியதாக மாற்றி கலாட்டா செய்யவே இப்படியெல்லாம் செய்கிறோம் என ஒற்றுக்கொள்ளவும் செய்கின்றனர். ஆனால் வெறுப்புணர்வினாலும், பகை உணர்வினாலும் இதை செய்பவர்களின் எண்ணிகையும் சம அளவில் உள்ளது கவனிக்க வேண்டிய ஒன்று.



மிகவும் முன்னேறிய, தொழில்நுட்பங்களை நமக்கு முன்னரே பயன்படுத்தி வரும் மேற்கத்திய நாடுகளிலேயே சமூக வலைத்தளங்களை அதிலும் குறிப்பாக பேஸ்புக்கை, கையாள்வதில் இவ்வளவு உளவியல் பூர்வ சிக்கல் இருக்கிற தென்றால், நம்முடைய நிலைமை சொல்லி தெரியவேண்டியதில்லை. இன்று சமூக வலைதளத்தின் மூலம் இணையும் காதல், நாளை அதன் மூலமே முடிவும் பெறுகிறது. தன் காதலி யாருடன் பேசுகிறாள், யாருடைய நிலை தகவலுக்கு லைக் செய்கிறாள் என்பதை கவனிப்பதே இன்றைய ‘ஆண்’மகனின் பெருங் கவலைகளில் ஒன்றாக இருக்கிறது. அதே நேரம் ஆண்களிடம் இதே கட்டுப்பெட்டி தனத்தை பெண்கள் காட்டுவதில்லை. மேற்கூறிய இந்த கூற்றுக்கு, இன்று பேஸ்புக்கில் காதலனின் “அன்பு” கட்டளையால் முகப்பு படம் வைக்க முடியாத பெண்களும், தனது பேஸ்புக் கடவுச்சொல்லை காதலனிடம் ஒப்படைத்து இருக்கும் பெண்களே சாட்சி.

**