4/9/14

தன்னறிதல்



பொழுதுகள் புலர்ந்தன

மெல்ல நகர்ந்தன நாட்கள்

கனவுகளைத் தொலைத்து

இலக்கற்று, கையறுநிலையில்

கழியும் நாட்களில்

கசியும் கண்ணீரோடு

அணுநிமிடமும் அரூபமாய்

வாழ்வை நோக்கிய ஏக்கமுமாய்

எழுந்திருக்க நினைக்கும்

எண்ணத்தோடு

சலனமற்று கிடக்கிறது

வீழ்ந்தவனின் மனது
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக