4/9/14

தாய் நாவல் #மக்சீம் கார்க்கி - என் பார்வை



                                                             

                                                                 







உலகின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான மக்ஸிம் கார்க்கியின் மகத்தான படைப்பு தாய் நாவல் என்றால் அது மிகையாகாது.

உலக இலக்கியப் படைப்புகளில் சிறந்தவற்றை நாம் வரிசைப் படுத்துவோமானால், அதில் கார்க்கியின் 'தாய்' கட்டாயம் இடம் பெறும்.

நேற்றிலிருந்தே இந்நாவல் குறித்து ஒரு சிறு பதிவையேனும் பகிர வேண்டும் என்ற ஆவல் சற்றும் குறையாது அதிகரித்தபடியே சென்றதன் விளைவே இப்பதிவு.


















------நாவலின் வரலாறு------




1904 ஆம் வருடம் கார்க்கியின் எண்ணத்தில் ‘தாய்’ உருப்பெற்றது. அவருடைய வாழ்க்கைத் துணைவியாகிய ஏகடரினா பவ்லோவ்னா வோல்ழினா, நல்ல இலக்கியவாதி.

"சமரஸ்கயா கெசட்டா" என்னும் இதழின் அச்சுப்பிழை திருத்துபவராகத் திருமணத்திற்கு முன் பணிசெய்தவர். கருத்தில் உருப்பெற்ற “தாய்’ புதினத்தை குடும்பத்தினருக்கு விளக்கிச் சொன்னார்.

1906 ஆம் ஆண்டு டிசம்பரில் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் "ஆப்பிள்டன்" இதழில் தாய் முதற்பகுதியின் முன்பாகமும், 1907 ஆம் ஆண்டு தாய் நாவல் முழுதும் வெளிவந்தன. கார்க்கியின் “தாய்” முதலில் வெளிவந்தது அமெரிக்காவில் தான். ரஷ்ய முற்போக்காளர்கள் ஆர்வத்துடன் வரவேற்றனர்.


-----------எனது பார்வை-----------


பெலகேயா நீலவ்னா, பாவல் விலாசவ் எனும் தாய்-மகனுக்கு இடையேயான அன்பின் அற்புதப் பிணைப்பின் உணர்வுபூர்வ உள்ளடக்கமே இந்நாவல்.

ஒரு தாயின் பாச உணர்வு, தன் மகன் மீதான அளப்பரிய அன்பால், கொள்கையின் மேல் ஏற்பட்ட பிடிப்பால், கம்யூனிஸ சித்தாந்தத்தின் மீது ஒரு ஈடுபாடு உருவாகி, அதை உழைக்கும் மக்களிடத்திலும் பாகுபாடு நிறைந்த சமூகத்திலும் தழைத்தோங்க, வீரியம் பெற, தாமே விதையாக வீழ்வதை தேர்ந்த இலக்கிய நடையுடன் விவரிக்கும் படைப்பே இந்த அற்புத காவியம்.


-----------தோழர்களுக்கு----------


நண்பர்கள் அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒரு சிறந்த கலைப்படைப்பு. குறிப்பாக கம்யூனிச சித்தாந்தத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட தோழர்கள் அனைவரும் வாசிக்க, அள்ளி அள்ளிப் பருக வேண்டிய ஒரு அருமையானப் புத்தகம்.


------புத்தகம் குறித்து தோழர் லெனின்----


‘இதுவரை, புறத்தூண்டுதலின்றி உள்ளுணர்வு உந்தப் புரட்சிப் போராட்டத்தில் தாமாகவே தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளார்கள். ஆனால் இப்பொழுது தமக்குப் பயன்படும்படி “தாய்” படிக்கலாம்’.


------------ புத்தக வெளியீட்டு விபரம்-----------

மக்ஸிம் கார்க்கியின் தாய் நாவல்.

ஆசிரியர்: மக்ஸிம் கார்க்கி.

தமிழாக்கம்: தொ.மு.சி.ரகுநாதன்

பதிப்பகத்தார்: என்.சி.பி.எச்(நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)

முதல் பதிப்பு: மே, 2003

நான்காம் பதிப்பு : அக்டோபர், 2013. விலை: ₹350



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக