6/6/14

தஸ்தயேவ்ஸ்கியின் அப்பாவியின் கனவு

‘அவர்கள் தீயவர்களாக மாறிய பிறகு சகோதரத்துவத்தையும் மனிதாபிமானத்தையும் பற்றி பேசத் தொடங்கி இக்கருத்துக்களை புரிந்து கொண்டனர். அவர்கள் குற்றவாளிகளாக மாறிய பிறகு நீதி என்ற கருத்தைக் கண்டுபிடித்தார்கள். நீதியை நிலை நிறுத்துவதற்காக பெரிய சட்டப்புத்தகங்களை கோட்பாடுகளை எழுதிக் கொண்டார்கள். இச்சட்டங்களைப் பாதுகாப்பதற்காக ஒரு தூக்கு மேடையை நிறுவினார்கள், அவர்கள் எதை இழந்துவிட்டார்கள் என்பதைப் பற்றி அவர்களிடம் தெளிவில்லாத நினைவு மட்டுமே இருந்தது. ஒரு காலத்தில் தாங்கள் கபடமில்லாதவர்களாக, மகிழ்ச்சி நிரம்பியவர்களாக இருந்திருக்க முடியும் என்ற எண்ணமே அவர்களுக்கு சிரிப்பைக் கொடுத்தது. அவர்கள் அது ஒரு கனவு என்றார்கள், அதை பிம்பங்களிலும் உருவங்களிலும் அவர்களால் கற்பனை செய்யக் கூட முடியவில்லை. ஆனால் விசித்திரமும், அதிசயமும் என்னவென்றால் அவர்கள் தங்களுடைய முந்தைய மகிழ்ச்சியை கட்டுக்கதை என்று சொன்னார்கள்’.
‘இந்தப் பூமியில் வாழ்கின்ற திறமையை இழந்துவிடாமலேயே மனிதர்கள் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும் என்பதை நான் அறிந்திருக்கிறேன். தீமையை மனிதனின் இயற்கையான நிலைமை என்பதை நான் நம்ப முடியாது. அதை நான் நம்பமாட்டேன்’.
“வாழ்கையைப் பற்றிய உணர்வு வாழ்க்கையை காட்டிலும் உயர்வானது, மகிழ்ச்சியின் விதிகளைப் பற்றிய அறிவு மகிழ்ச்சியைக் காட்டிலும் உயர்வானது. இதை நாம் எதிர்த்துப் போராட வேண்டும். நான் போராடுவேன். எல்லோரும் விரும்பினார்கள் என்றால் அனைத்தையும் உடனடியாகச் செய்துவிட முடியும்”.–‘அப்பாவியின் கனவு’
 ஆசிரியர்: #ஃபியோதர்_தஸ்தயேவஸ்கி (தஸ்தயேவ்ஸ்கியின் சிறுகதைகளும் குறுநாவல்களும் நூலில் இருந்து).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக