இந்த தேசம் நிச்சயமற்ற உருவில் “கருப்பு பணத்திற்கு எதிரான போரில்” ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், ஊழலுக்கு எதிரான நிலையில் இருந்தே விடுபட்டு விடும் அபாயத்தில் இருக்கிறோம் நாம். உண்மையில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் நாம் பின்னோக்கியே நகர்ந்து கொண்டு இருக்கிறோம். பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து அனைவரும் விவாதித்துக் கொண்டு இருக்கையில், ஊழல் தடுப்புச் சட்டத்தை(PCA),1988 திருத்துவதற்கு தயாராகி விட்டது பாராளுமன்றம். கொடுமை என்னவென்றால், பெரும்பாலான அரசியல் அமைப்புகளுக்கும் சாதகமாக அமைவதால், பல கட்சிகளின் ஆதரவையும் இத்திருத்தம் பெட்டறுள்ளது. ஆம், எல்லாம் கருப்பு பணத்திற்கு எதிரான போர் எனும் பெயரில் தான்.
நாடாளுமன்றத்தில் தற்போது நிலுவையில் இருக்கும் ஊழல் தடுப்பு (திருத்தம்) மசோதா 2013, சில திருத்தங்களை ஊழல் தடுப்பு சட்டத்திற்கு(PCA) முன்மொழிகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியின் போது ஏற்பட்ட மிகப் பரவாலான ஊழல் எதிர்ப்பு போராட்டங்களின் போது, 2013ம் ஆண்டு மாநிலங்களவையில் இந்த மசோதா முதன் முதலில் அறிமுகப் படுத்தப்பட்டது. சட்டரீதியாக ஊழலுக்கு கிடுக்கு பிடி போடுவதே அதன் நோக்கம். ஆனால் வருந்தத்தக்க சில அம்சங்கள் அதிலும் இருந்தன. எனினும் அதன் ஒட்டுமொத்த சீர்குலைவு என்பது தேசிய ஜனநாயக கூட்டணி உருவாக்க முனைந்த திருத்தங்களால் தான் ஆனது. கேபினெட் உட்பட, பல்வேறு கட்சிகளையும் உள்ளடக்கிய மாநிலங்களவையின் தேர்வு குழுவும் இந்த மாற்றங்களை ஏற்று கொண்டுள்ளது. இந்த பிற்போக்குத்தனமான சட்டம் இந்த குளிர் கால கூட்ட தொடரில் நிறைவேற்ற முடியாததால் தள்ளி போகும் நிலையிலுள்ளது.
யோகேந்திர யாதவ்
சீர்குலைக்கும் திருத்தங்கள்
கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்வு குழுவால் அங்கீரிக்கப்பட்ட இந்த மசோதாவின் வடிவம், ஒரு வழியில் மட்டுமன்றி பல்வேறு வழிகளிலும் ஊழல் தடுப்பு என்னும் அதன் அடிப்படையையே மழுங்கடிப்பதாக உள்ளது. ஊழலின் தற்போதைய வரையறையை குறுக்குவதோடு அல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான ஆதாரத்தையும் அதை நிருபிப்பதற்கான தேவையையும் அதிகமாக வலியுறுத்துகிறது, இது “தகவல் தெரிவிப்பாளர்களின” (whistleblowers) நிலையை இன்னும் சிரமம் ஆக்குவதோடு, அதிகாரிகள் தங்களை மேலும் காத்துக் கொள்வதற்கும், ஆட்சியாளர்கள்-அதிகாரிகள் எந்த ஒரு ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைக்கும் உள்ளகாதவாரு பார்த்து கொள்ளவுமே பயன்படும். இந்த மசோதா சட்டமானால், ஏற்கனவே ஊழலுக்கு எதிராக பலவீனமாக உள்ள நமது அமைப்பு மேலும் பலத்த அடி வாங்கும்.
இப்போது மசோதாவின் முக்கியமான ஒவ்வொரு சரத்தும் ஊழலுக்கு எப்படி பக்கபலமாக இருக்கிறது என பாப்போம்
மசோதாவில் முதல் அம்சமான ஊழலின் வரையறையும் பொருளும், அரசு (அ) பொதுப் பனியாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் குறுக்கப் பட்டுளள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 13(1)(d), ஊழலின் பல்வேறு மறைமுக அம்சங்களை கருத்தில் கொண்டுள்ளது, முறையற்ற உதவியாக “எந்த விலை மதிப்புள்ள பொருளோ அதற்கான முகாந்திரத்தை நிறுவும் செயலோ” அல்லது “பொது பணியாளராக தனது அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்தல்’ என்பது உட்பட. ஆனால் இப்போது கொண்டு வந்துள்ள மசோதாவோ இந்த பிரிவையே நீக்க்கிவிட்டு அதற்கு பதிலாக மிகவும் மேலோட்டமான ஒரு வரையறையாக, பொது பணியாளர் குற்றச் செயலில் ஈடுபடுதல்: முறையற்ற வழியில் ஒருவர் கட்டுபாட்டில் சொத்துகளை வைத்து இருப்பது மற்றும் உள்நோக்கத்தோடு முறையற்ற வகையில் வருமானத்துக்கு மீறிய சொத்துக்களை குவிப்பது என மாற்றப் பட்டுள்ளது. இந்த புது வரையறையின் படி , எந்த ஒரு பலனும் பொருளாதார ரீதியாயானதாக இல்லாமலோ அல்லது மறைமுகமாகவோ இருந்தால் அதை குற்றமாக கருதவோ தண்டிக்கவோ முடியாது. முன்வைக்கப்பட்ட இந்த திருத்தத்தை கவனமாக ஆராய்ந்த சட்ட ஆணையம் இந்த புது வரையறையை நிராகரித்துள்ளது. இன்னும் விரவானதொரு வரையறையை அது முன்மொழிந்தது. பொதுப் பணியாளரின் “ஒழுங்கற்ற பொதுச் செயல் மற்றும் நடவடிக்கை”, “முறையற்ற ஆதாயத்துக்கு வழி வகுத்தால்” அதை தண்டனைக்குரிய குற்றமாக கருத வேண்டும் என சட்ட ஆணையம் கோரியது. இத்தனைக்கு பிறகும், அரசும் பாராளுமன்ற குழுவும் இந்த கோரிக்கையை புறக்கணித்துவிட்டு ஊழல் கூட்டாளிகளை சுவீகரித்துக் கொண்டுள்ளது.
இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் மேஜை-அடியிலான பரிவர்த்தனை என ஏதும் இப்போது உயர்மட்ட அளவில் நடப்பதில்லை இருப்பினும், இப்போது இருக்கும் சட்டத்தில் 13(1)(d) பிரிவு மட்டுமே உயர்மட்ட இடங்களில் நடைபெறும் ஊழலுக்கு எதிரானதாக இருக்கிறது. இதற்கு சற்றும் பொருந்தாத வகையிலேயே ஊழல் புரிந்த அரசு பணியாளர் பெரும் பலனானது, கடல் தாண்டிய பரிவர்தனையாகவும் நேரடி பணவடிவில் இல்லாமலும் இருக்கிறது உதரணத்திற்கு, பனி ஓய்வுக்கு பிந்தைய பலன்கள். போபர்ஸ் ஊழலில் இருந்து 2G வரை, காமன் விளையாட்டு ஊழல், நிலக்கரி ஊழல் என அனைத்து மாபெரும் ஊழலும் குற்றங்களாக கருதப்பட்டது இந்த பிரிவின் உபாயத்தால் தான். அரசு அதிகாரிகளில் ஒரு சாரார் தொடர்ந்து இந்த பிரிவை மட்டும் நீக்க வலியுறுத்துவதும் இதனால் தான். அதற்கு அவர்களது வாதமாக அவர்கள் கூறுவது, நேர்மையான அதிகாரிகளின் நன்மதிப்பை இது பாதிக்க வாய்ப்புள்ளது என்பதே. ஆனால் இந்த வாதம் உண்மை அல்ல. நேர்மைக்கு பெயர்போன ஓய்வு பெற்ற கேபிநெட் செயலாளரான டி.எஸ்.சுப்பிரமணியம், நேர்மையான அதிகாரிகளுக்கு போதுமான வகையில் இப்போது இருக்கும் சட்டமே பாதுகாப்பை வழங்குகிறது என தொடர்ச்சியாக கூறி வருகிறார். பதவியை தவறான வழியில் நிதி சார்ந்த நோக்கங்களுக்கு பயன்படுத்தியது உறுதியாக நிரூபனமாகாத வரையில் பணியாளர்களின் நன்மதிப்பு எவ்வகையிலும் பாதிப்பு அடையாது.
.
ஆரம்பநிலை அழுத்தம்
இரண்டாவது, இந்த மசோதா தொடக்க நிலையிலேயே ஆதாரம் இல்லையென்றால் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்போரை குற்றவாளியாக கருத முடியாததாக ஆக்குகிறது. இப்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்தின் படி பொதுப் பணியாளர் ஒருவரின் அறியப்பட்ட வருவாய்க்கு மீறிய சொத்து அல்லது பணமே அவர் செய்த ஊழலை நிரூபிக்க போதுமானதாக இருக்கிறது. ஆனால் இப்போது வழக்கு தொடுப்பவரேதான், தவறான வழியில் அரசு அலுவலர் பெற்ற பணமே முறையற்ற ரீதியில் அவர் சொத்து குவிக்க பயன்பட்டது என்பதையும் நிரூபித்தாக வேண்டியதாக இருக்கும். மாநிலங்களவையின் தேர்வு குழு இவ்வாறு நோக்கம் கற்பிப்பது தேவையற்றது என கூறி இருந்தாலும் அரசாங்கத்தின் இறுதி முடிவு நமக்கு இன்னும் தெரியவில்லை. அதிலும் இப்போதைய சட்டத்தில் இருக்கும் “அறியப்பட்ட வருவாய்” என்பதற்க்கு “அரசு அல்லது பொதுப் பணியாளர் சட்டரீதியான அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு தான் பணியாற்றும் காலத்தில் மட்டும் பெறப்படும்” என வரையறை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த திருத்தம் 1988ம் ஆண்டு அதன் முந்தைய சட்ட வடிவத்தில் இருந்த ஓட்டைகளை அடைக்க கொண்டுவரப் பட்டது. ஆனால் சமூக தரப்பில் யாரிடமும் இருந்து எந்த பரிந்துரையும் பெறாது, மத்திய அரசு இப்போது இந்த சரத்தையே தூக்க இருக்கிறது. இது பெரிய அளவில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை தப்பிக்கவைக்கும் செயலே ஆகும்.
மூன்றாவது, இந்த மசோதா லஞ்சம் கொடுப்பவரை லஞ்சம் வாங்கியவருக்கு எதிரான சாட்சியாக நிறுத்துவதை சிக்கலாகி உள்ளது. இப்போதிருக்கும் சட்ட படி, ஒரு நபர் தன்னிடம் இருந்து லஞ்சம் பெற்றார் என ஒருவர் மீது புகார் அளித்தார் என்றால், புகார் அளித்தவரே லஞ்சம் வாங்க தூண்டினார் என குற்றம் சாட்ட முடியாது. லஞ்சம் வாங்குவோரையும் கொடுப்பவரையும் ஒரே விதத்தில் நடத்தக் கூடாது. ஆனால் வரவிருக்கும் மசோதா அதை செய்கிறது. இது லஞ்சம் கொடுக்கும் நிலையில் இருப்பவர்களை அரசு அதிகாரிகளுக்கு எதிரான சாட்சியமாக மாறாமல் இருக்கவே செய்யும். மறைமுகமாக இது லஞ்சம் கொடுப்பவர்களுக்கு வேறு வழி இல்லாமல் செய்துவிடும்.
இப்படி முழுவதும் சிக்கலாக்குவதற்கு, வேண்டுமென்றால் லஞ்சம் கொடுப்பவருக்கு முழு விளக்கு அளிக்காமல் குறைந்தபட்ச நடவடிக்கை எடுக்கலாம். அரசுக்கு சிறப்பான வாய்ப்புக்கள் இருந்தன. இரண்டாம் நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் அறிக்கை லஞ்சத்தை “தர விளைவது” மற்றும் “ரகசியமாக தருவது” என இருவகையாக பார்க்க பரிந்துரைத்தது. ஒருவர் லஞ்சம் லஞ்சம் தர முனைந்து, தந்த பின்பு உடனடியாக புகார் அளித்தார் எனில் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆனால் இந்த யோசனைகளை எல்லாம் அரசு உதாசினப்படுத்தியதன்- அனைவரயும் தண்டிக்கும் யோசனயின்- மூலம் லஞ்சம் பெறக் கூடியவர்களுக்கே துணை புரிந்து உள்ளது என்பது உறுதி.
நான்காவது திருத்தம், ஊழல் புரிந்தவரை தண்டிக்கும் வாய்ப்பை குறைத்து உள்ளது. இப்போதிருக்கும் சட்டப் படி, பணியிலிருக்கும் ஒருவரை தண்டிக்க அவரது மூத்த அதிகாரி ஒருவரின் ஒப்புதல் தேவை. இதற்கான காரணம் எளிமையானது. அது நேர்மையான அதிகாரிகளை பழிவாங்கப் படுவதில் இருந்தும், துன்புறுத்தப் படுவதில் இருந்தும் காப்பது தான். இப்போது கொண்டு வந்திருக்கும் மசோதா, பனி ஓய்வு பெற்றவர்களுக்கும் இந்த சலுகையை நீட்டித்து உள்ளது. அவர்கள் பணி ஆற்றிய காலத்தில் அந்த வழக்கு விசாரணை நடைபெற்றால் இந்த நீட்டிப்பு பொருந்தும். இது ஒரு வகையில் நியாமானதாக தோன்றினாலும், தேவையற்ற ஒரு சில சேர்க்கைகள் இணைக்கப்பட்டுள்ளன. அது என்னவெனில், ஒரு தனி நபர் ஊழல் குற்றச்சாட்டில் அரசு பணியாளர் ஒருவரை தண்டிப்பதற்கான ஒப்புதலை பெற அரசாங்கத்தை அணுகினால், அவர் இனி நீதி மன்றத்தை தான் நாட வேண்டி இருக்கும். குற்றம் சாட்டப்பட்ட அரசு பணியாளருக்கு வழங்கப்படும் இந்த மேலதிகமான பாதுகாப்பு, ஊழலால் பாதிக்கபட்டவர்களையும், ஊழலுக்கு எதிரான செயல்பாட்டாளர்களையும் கை விடக் கூடிய ஒரு செயலாகவே இருக்கும். ஊழல் வாதிகளை தண்டிப்பதை விட அதிகாரிகளை காப்பதில் அரசு முனைப்புடன் உள்ளது இதில் தெளிவாகவே தெரிகிறது.
முதலில் அனுமதி
இறுதியாக, மிக மோசமானதும் கொடுரமானதுமான இந்த திருத்தம் பொது மக்களின் எந்த ஒரு கருத்தையும் கேட்காது செய்யப்படுள்ளது. இந்த மசோதா பிரிவு 17A என்னும் புதுப் பிரிவை சேர்க்க கோருகிறது. அதன் சாராம்சம் இது தான்: இனி எந்த ஒரு விசாரணை அமைப்பும் குற்றம் சாட்டபட்ட பணியாளர் ஒருவரை விசாரிக்க அதிகாரபூர்வ அனுமதி முதலில் பெறுவது அவசியம். அந்த அனுமதி லோக் பால் அல்லது லோக் ஆயுக்தா மூலம் வழங்குவது அரசின் முடிவு. பாராளுமன்ற தேர்வுக் குழுவோ இதை இன்னும் மோசமாக்கி, குற்றம் சாட்டப்பட்டவரை நீக்க கூடிய உரிமை “தகுந்த உரிமை படைத்த ஒருவர் அல்லது அமைப்புக்கு தான்” உண்டு என முன்மொழிந்துள்ளது. எனவே இனி அரசியல் முதலாளிகளே ஊழல் தடுப்பு விசாராணையை அரசு பணியாளர் மீது நடத்தலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்பவர்களாக இருப்பர்.
இது அடிப்படையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. முன்னமே குறிப்பிட்ட படி இப்போதிருக்கும் சட்டப் பிரிவு 19, அனைத்துவித போலி குற்றச்சாட்டுகளில் இருந்தும் அதிகாரிகளை காக்கும் விதமாக ஏற்கனவே ஏற்படுத்த பட்டுள்ளது. நேர்மையான, குற்றமற்ற அதிகாரியின் மீது புகார் வருமானால் விசாரித்து பார்த்து அரசாங்கம் அதற்கான ஒப்புதல் வழங்காது அந்த புகாரை நிராகரிக்கலாம். இந்த வசதி ஏற்கனவே இருக்கையில் எதற்கு இப்போது இதில் புதிய திருத்தம்? அதுவும் ஆரம்பகட்ட விசாரணைக்கே எதற்கு ஒப்புதல்? அனைவருக்கும் தெரிந்த எளிமையான விஷயம், விசாரணை இல்லை என்றால் நம்பகமான ஆதாரமும் கிடைக்க போவது இல்லை. பிறகு எந்த அடிப்படையில் அரசாங்கம் ஒரு புகாருக்கு ஒப்புதல் வழங்கும்? அல்லது ஆரம்பகட்ட விசாரணை கூட இல்லாது ஒருவரால் எப்படி ஆதாரங்களை சமர்பித்து ஒப்புதலை பெற முடியும்? அப்படியே ஒப்புதலும் வழங்கபட்டாலும், அது தெரியவந்தால் விசாரணை நடப்பதற்கு முன்னரே அந்த ஊழல் புரிந்தவர் தனது ஆதாரங்களை மறைக்க உதவாதா? இந்த மோசமான திருத்தம் ஊழல் புரிந்த அரசியல்வாதிகளையும் உயர் அதிகாரிகளையும் தப்பிக்க வைக்கவே பயன்பட போகிறது. ஒரு அரசியல்வாதி நினைத்தால் ஊழவாதி ஒருவரை தண்டனையில் இருந்து மாத்திரம் அல்ல ஆதாரங்கள் சேகரிப்பதில் இருந்தும் விசாரணையில் இருந்தும்கூட பாதுகாக்க முடியும்.
மீளட்டும் ஊழல் எதிர்ப்பு
அரசின் இந்த முடிவு பழைய “ஒற்றை வழிமுறையை” மீண்டும் கொண்டு வந்துள்ளது. அந்த பழைய அரசாணையின் படி எந்த ஒரு மூத்த அதிகாரியையும் அரசின் அனுமதி இன்றி விசாரிக்க முடியாது. 1997ம் ஆண்டு புகழ் பெற்ற வினீத் நாராயண் தீர்ப்பில், உச்சநீதிமன்றம் இந்த அரசாணையை சட்ட விரோதம் என அறிவித்தது. அரசாங்கம் அதையே திருத்த சட்டமாக 2003ம் ஆண்டு மீண்டும் கொண்டு வந்தது. கடைசியாக சமீபத்தில் 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அந்த சட்ட பிரிவு அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவித்து, “சமத்துவத்திற்கான உரிமையை” மீறுவதாக கூறி அதை நீக்கி தீர்ப்பளித்தது. ஆளும் வர்க்கத்தில் அதிகாரிகளின் பங்கு எவ்வளவு பெரியது என்பதை இப்போது மூன்றாவது முறையாக அரசு கொண்டு வந்திருக்கும் அதே கவச சட்டமே நிரூபிக்கிறது.
குளிர் கால கூட்ட தொடர் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருப்பதால், பட்ஜெட் கூட்டதொடருக்கு இந்த மசோதா தள்ளிபோகும் என தெரிகிறது. இது அக்கறையுள்ள பொதுமக்களுக்கு, ஊழலை பாதுகாக்கும் அரசின் இந்த மோசமான முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கும், அனைவரிடையே ஒரு பொதுக் கருத்தை உருவாக்குவதற்குமான வாய்ப்பாக ஓரிரு மாதங்கள் கிடைத்துள்ளது. ஊழலுக்கு எதிரான இயக்கத்தை மீண்டும் உயிர்த்தெழ வைப்பதற்கான நேரம் வந்துவிட்டது.
The original article released in The Hindu Dec12,2016 - http://www.thehindu.com/opinion/lead/Time-to-blow-the-whistle/article16793830.ece
நயன்தாரா சாகல்- புகழ்பெற்ற எழுத்தாளரும், ஜவஹர்லால் நேருவின் சகோதரி மகளுமான இவர் தனது நேரடியான, வெளிப்படையான அரசியல் கருத்துக்களால் அறியப்பட்டவர். இந்திரா காந்தி அமலாக்கிய அவசர நிலைக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு எடுத்த இவர், அண்மைக் காலமாக பண்பாடுட்டுக்கும் அரசியலுக்கும் இடையே உள்ள உள்ளார்ந்த தொடர்பு குறித்தும் பேசி வந்துள்ளார்.
இன்று அக்டோபர் 6, 2015- இந்திய பண்பாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாப்பதில் தோல்வியுற்ற அரசைக் கண்டித்தும், ஆளும் ஹிந்துத்துவ சித்தாந்தத்திற்கு மாறான மாற்றுக் கருத்தாளர்களை பாதுகாக்க வலியுறுத்தியும், அதற்கெதிரான போராட்டமாக 1986’ம் ஆண்டு தான் பெற்ற சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளார். அவருடைய அறிக்கை பின்வருமாறு :
பிளவுபடுத்தப்படும் இந்தியா
தனது சமீபத்திய உரையில், இந்திய துணைக் குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து இந்தியர்களுக்கும் “கருத்து, வெளிப்பாடு, நம்பிக்கை மற்றும் வழிபாட்டிற்கான முழு சுதந்திரத்தையும்” உறுதியளித்துள்ளது என்பதை நமக்கு நினைவுபடுத்துவது தேவை என கருதியிருக்கிறார். அதற்கு காரணமேதும் இல்லாமல் இல்லை.
ஏனெனில் இந்திய பண்பாட்டின் பன்முகத் தன்மையும், அது சார்ந்த விவாதங்களும் கொடூரமான தாக்குதலுக்கு தற்போது ஆளாகி வருகின்றது.
மூடத்தனத்தை கேள்வி கேட்கும் பகுத்தறிவாளரனாலும், இந்து மதத்தின் ஆபாசமும், ஆபத்தும் நிரம்பிய பகுதியான ஹிந்துத்துவாவின் ஏதேனும் ஒரு அம்சத்தை கேள்விக்கு உட்படுத்தும் யாராயினும் – அது அறிவுத் தளமாயினும், கலைத்துறையாயினும் சரி அல்லது உணவு பழக்கத்தை பற்றியதானாலும், வாழ்கை முறையைப் பற்றியதானாலும் சரி – ஒதுக்கப்படுகின்றனர், துன்புறுத்தப்படுகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர்.
தனித்துவமிக்க கன்னட எழுத்தாளரும், சாகித்திய அகாடமி விருது பெற்றவருமான எம்.எம்.கல்புர்கி, மஹாராஷ்டிராவை சேர்ந்த நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே என மூடத்தனத்தனங்களுக்கு எதிரான செயல்பாட்டாளர்களான மூவரும் துப்பாக்கிகளுக்கு இரையாகியுள்ளனர்.
மேலும் பலர் “அடுத்து அவர்கள்தான்” எனும் அச்சத்துக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர். மிகச் சமீபமாக, டெல்லிக்கு வெளியே பிசாரா எனும் கிராமத்தில், மொஹம்மத் அக்லக் எனும் அந்தக் கிராம கொல்லர், தனது வீட்டில் மாட்டுக் கறி சமைத்திருக்கலாம் எனும் சந்தேகத்தால், விசாரனையின்றி மூர்க்கமாக அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த எல்லா வழக்குகளிலும், நீதி தன் நிலை தவறி விட்டது. இத்தகைய தொடர்ச்சியான பயங்கர செயல்கள் குறித்து பிரதமரும் அமைதி காத்து வருகிறார். அவரது சித்தாந்தத்தை ஆதரிப்போரில் இத்தகைய தீய செயல் புரிவோரை அவர் விலக்கி விடப் போவதில்லை என்பதை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
எனினும், துக்கமளிக்க கூடிய விஷயமென்பது சாகித்ய அகாடமியின் மௌனம் தான். இந்த அமைப்பு நிறுவப்பட்டதே, படைப்பாக்கத்தின் பாதுகாவலராக செயல்படவும், கலை,இலக்கியம், இசை, நாடகம் ஆகியவற்றின் சிறந்த படைப்புகளை ஊக்கப் படுத்துவதற்காகவுமே ஆகும்.
கல்புர்கி கொலைக்கு எதிரான போராட்டத்தில் ஹிந்தி எழுத்தாளர், உதய் சங்கர் தனது சாகித்ய அகாடமி விருதை திருப்பிக் கொடுத்துள்ளார். ஆறு கன்னட எழுத்தாளர்களும் தங்களது விருதுகளை கன்னட சாகித்ய பரிஷத்திடம் திருப்பி அளித்துள்ளனர்.
கொலையுண்ட இந்தியர்களின் நினைவாகவும், கருத்துரிமைக்காக குரல் கொடுத்து வரும் அனைத்து இந்தியர்களுக்காகவும், அச்சத்திலும் நிலையாமையிலும் வாழ்ந்து வரும் மாற்றுக் கருத்தாளர்களுக்கும் ஆதரவாக, நான் எனது சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிக்கிறேன்.
கட்டுரை: ரோஹன் வெங்கடராமகிருஷ்ணன்
தமிழில் : கபிலன். இல
இந்தியா போன்றதொரு பரந்துபட்ட மிகப்பெரிய நாட்டில் "நடுத்தரம்" என்ற வார்த்தையே கூட பொருத்தமற்ற ஒன்றுதான். இருந்தாலும் நம்மில் பலரும் ‘நடுத்தர-வர்க்கம்’ என நம்மை தொடர்ந்து அடையாளப்படுத்தி வந்திருக்கிறோம். உண்மை நிலை குறித்த பிரக்ஞையற்றும், இந்தியாவின் ஒட்டுமொத்த நிலையை கணக்கிலெடுக்காமலும் நாம் தொடர்ந்து வைத்து வரும் வாதம் "நாம் நடுத்தர வர்க்கம்"
எனில், இத்தகைய பொருத்தமற்ற வாதங்களை பியூவ் ஆராய்ச்சி மையம்(Pew Research Center) இப்போது நொறுக்கி உள்ளது. "இந்தியாவின் வளர்ந்துவரும் நடுத்தர-வர்க்கம்" என்னும் கட்டுக்கதைகளுக்கும் நடைமுறை எதார்த்தத்துக்கும் இடையிலுள்ள வெளியை வெட்டவெளிச்சமாக்கி உள்ளன. சரி, உண்மை நிலை என்ன?, ஆம், இந்தியா, முன் எப்போதும் போல, அதே துக்ககரமான ஏழை நாடுதான்.
உலகளவில் ஏற்பட்ட வருமான விகிதத்தின் சரிவை ஆராய விழைந்த பியூவ் ஆராய்ச்சி மைய ஆய்வின் விளைவு, "இந்தியாவின் மகத்தான நடுத்தர-வர்க்கம்" எனப் மிகப்பெரிய அளவில் தலைப்புச் செய்தியாக செய்திதாள்களில் கோடிட்டு வந்த ஆங்கில ஊடகத்தினரை விழித்து கொள்ளச் செய்துள்ளது.
உலக மக்கள் தொகையில் மாறிவரும் வருமான விகிதத்தை ஆராய்ந்த இந்த ஆய்வு, 2000'ம் ஆண்டின் முதல் பத்தாண்டுகளில் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில், வியப்பூட்டும் விதத்தில் ஏழ்மை குறைப்பு நடந்துள்ளதையும் சுட்டிக் காட்டுகிறது. ஆனால், இவையனைத்தையும் கடந்து பார்த்தால், நடுத்தர-வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை என்பது, 15 சதவீதத்திற்கும் குறைவு தான்.
இந்த ஆய்வு, அன்றாட குடும்ப- வருமான அடிப்படையில் மக்கள் தொகையை ஐந்து வகையாக பிரிக்கிறது. இதில் ஆரம்பநிலை என்பது பல்வேறு விஷயங்களுக்கு உட்பட்டது, உலக அளவில் ஒருநாள் வருமானம் 2($) டாலருக்கு (இந்திய மதிப்பில் இது 127.40₹) கீழ் இருந்தால், அவர்கள் ஏழைகள் எனக் கருதப்படுகின்றனர். 2 டாலர் முதல் 10டாலர் வரை சம்பாதிப்போர், குறைந்த-வருமானப் பிரிவினர். இதே அளவீடுகளின் படி, நடுத்தர-வர்க்கம் என்பவர் நாளொன்றுக்கு 10 டாலர் முதல் 20 டாலர் வரை சம்பாதிப்பவர் ஆகும். (இந்த அளவீடே கூட எவ்வளவு குறைவானது என்பதை அமெரிக்காவைப் பொருத்திப் பார்த்தால் புரிந்துக் கொள்ளலாம். அமெரிக்காவின் வறுமை-கோட்டில் உள்ள மக்களின் வருமானமே $16. நமது அளவுகோளில் இந்த வருமானம் நடுத்தர-வர்க்கத்திற்கு பொருந்தக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது).
இந்தியாவில் உருவாகியுள்ள இந்தச் சரிவை, கொடுக்கப்பட்ட கணக்கீடுகளின் படி உற்றுப் பார்த்தால், இந்தியாவில் இதுவரை கொண்டாடப்பட்டு வந்த நடுத்தர-வர்க்கம் எங்கே எனும் ஆச்சரியம் உங்களுக்கு எழலாம்.
120 கோடி இந்திய மக்களில், 95 சதவிகிதத்தினருக்கும் மேலானவர்கள் ஏழைகள் மற்றும் குறைந்த-வருமானம் பெறுபவர்கள். இதே நிலை உலகளவில் 71 சதவிகிதம். இதுநாள்வரை சொல்லப்பட்டு வந்த அந்த "நடுத்தர-வருமான" இந்தியர்கள் வெறும் 2 சதவீதம் மட்டுமே. இது எவ்வளவு ஏமாற்றமளிக்கக் கூடியது என்றால் உலகளவில் இதுவே 13 சதவீதம்.
இந்த ஆய்வறிக்கை, “இருப்பினும் இந்தியாவின் வறுமை விகிதம் 2001'இல் 35% இருந்தது 2011'ல் 20% ஆக குறைந்துள்ளது. இந்திய மக்கள் தொகையில் “நடுத்தர-வருமானம்” ஈட்டுவோரின் பங்களிப்பு என்பது 1'ல் இருந்து 3 சதவீதமாக உயர்ந்துள்ளது”. மேலும் தொடர்கையில், “வளர்ந்து வந்திருக்க வேண்டிய நடுத்தர வர்க்கத்திற்கு பதிலாக இந்தியா, குறைந்த வருவாய் உள்ளோரின் தொகையில் வீக்கம் கண்டுள்ளது. இதில் பெரும்பாலான மக்கள் நாள்தோறும் 2 முதல் 10 டாலர் என்ற நிலையிலேயே இருக்கின்றனர். இதன்படி மக்கள், நடுத்தர- வருமான நிலை என்பதை அடைய நெடுந் தூரம் செல்ல வேண்டும்” என்கிறது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தின் படி, ஏழ்மை நிலையிலிருந்து வெளியேறிய அதிகப்படியான இந்தியர்கள், பெருவாரியாக "குறைந்த-வருமானம்" பிரிவினுள் தான் தஞ்சம் புகுந்துள்ளனர், அதே நேரம் உயர்தர வர்க்கத்தை நோக்கிய அவர்களது பயணம் என்பதும் மிக மிகக் குறைந்த அளவிலேயே நடந்துள்ளது. தெளிவாக பெரும்பாலான இந்தியர்கள் உயர் வாழ்க்கை தரத்திற்கு அப்பால் உள்ளனர், அண்டை நாடான சீனாவால் முழுதும் மறைக்கப் பட்டுள்ளனர், சீனாவில் மத்திய வர்க்கத்தின் வருமான உயர்வு என்பது 2001'ல் 3 சதவீதத்தில் இருந்து, 2011'ல் 18% ஆக ஆகியுள்ளது முக்கியமானது.
இதில் வியத்தகு முரண் எதுவென்றால், தங்களை நடுத்தர-வர்க்கம் என அழைத்துக் கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை தான். நடுத்தர-வர்க்கமும், நடுத்தர வருமானமும் ஒன்றல்ல என்பதைப்போலவே, இரண்டுக்கும்- ஒன்றின் மேல் ஒன்றாக- நியாயமான இடைவெளி அவசியம். இந்திய மேம்பட்ட ஆய்வு மையத்தின் பல-ஆண்டு குழு கணக்கெடுப்பின் அடிப்படையில் தேவேஷ் கபூர் மற்றும் மிலன் வைஷ்ணவ்-இருவராலும் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, பாதிக்கும் மேலான இந்தியர்கள்- நகர, ஊரக, குறைவருமான, உயர் வருமான(எல்லா பிரிவினரும்)- தங்களை "நடுத்தர வர்க்கத்தினர்" என்றே அடையாளப் படுத்திக் கொள்கின்றனர், என தெரிவிக்கிறது.
பியூவ் ஆராய்ச்சி ஆய்வின் முடிவு, ‘நடுத்தர-வர்க்கம்’ பற்றிய பரவலான, தெளிவற்ற வரையறைகளில் உள்ள பிரச்சனைகளை சுட்டிக் காட்டுகிறது. இருப்பினும், இந்தியாவின் மிகப்பெரிய நடுத்தர வர்க்கத்தை பற்றி தொடர்ந்துக் கேள்விப்பட்டுக் கொண்டே இருக்கிறோம், இந்தச் சிக்கல் அனேக இந்தியர்கள் தங்களை "நடுத்தரம்" எனக் கருதிக் கொள்வதால் தான் உருவாகிறது. ஆனால் உண்மை நிலை முற்றிலும் வேறானது. மிகக் குறுகிய எண்ணிக்கை-யினரே, 'நடுத்தர-வருமான' நிலைக்கு இங்கு தகுதியடைந்துள்ளனர். மேலும் பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடுகளுக்கும் - வளரும் நாடுகளுக்குமான வாழ்கை-தர இடைவெளி என்பது குறைந்தபாடில்லை.
அறிக்கை இவ்வாறு முடிகிறது, "வரலாற்றுபூர்வமான, உலகளாவிய ஏழ்மை குறைப்பை, இந்த நூற்றாண்டின் முதல் தசாப்தம் கண்டது, ஒட்டுமொத்த மக்கள் தொகை இரட்டிப்பு வீதத்தில் நடுத்தர வர்க்கம் ஆகும் எனவும் கருதப்பட்டது. ஆனால், உலகளவில் நடுத்தர வர்க்க எழுச்சி என்பது எதார்த்தத்தை எட்டாத வாக்குறுதியாகவே இன்றும் நீடிக்கிறது”.
1948'ம் ஆண்டு, தனது சகாக்களான தீக்ஸ்க்ராட்ஸ்(Dixicrats) இடையே உரையாற்றுகையில் ஸ்ட்ரோம் தர்மொண்ட் இவ்வாறு குறிப்பிட்டார், "அமெரிக்க ராணுவம் தெற்கத்திய வெள்ளையர்களான எங்களை, கருப்பின மக்களை ‘எங்கள் திரையரங்கினுள்ளோ, எங்கள் நீச்சல் குளத்தினுள்ளோ, எங்கள் வீடுகளினுள்ளோ, எங்கள் தேவாலயங்களினுள்ளோ’ அனுமதிக்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது".
நீச்சல் குளங்களை இனப் பாகுபாடுகளுக்கான போர்க்களமாக அவர் எடுத்துக் கொண்டதை எண்ணி பலமுறை நான் பாதிப்பு அடைந்ததுண்டு, அத்தகையதோர் உணர்வு தேவை தேவையற்றிருந்த போதும். அனைத்துக்கும் பிறகு, பெரும் செல்வாக்கு செலுத்திய ஜிம் க்ரோவின்(Jim crow) பெரும்பாலான அடையாளங்களில் முக்கியமாக "நீர்"ம் அடக்கம், அது ஒதுக்கப்பட்ட நீறூற்றுக்கள், கழிப்பிடங்களிலிருந்து, நிச்சல்குளம் மற்றும் கடற்கரை வரை.
வெள்ளிக்கிழமையன்று, டெக்சாஸ் மாகாணத்தில் மெக்கின்னியில் நடைபெற்ற நீச்சல் குளக் கேளிக்கை பற்றிய யூடியூப் காணொளியில், ஓர் வெள்ளை போலிஸ் அதிகாரி, ஆர்ப்பரித்தும், அருகிலிருந்தோரை கைவிலங்கிட்டும், கருப்பின இளைஞர்களை நோக்கித் துப்பாக்கியை நீட்டி மெரட்டியும் காட்சித் தருகிறார். ஒரு கருப்பின பெண்ணை தலைமுடியைப் பிடித்து இழுக்கிறார், பின் அப்பெண்ணை தரையில் தள்ளுகிறார். அந்த பெண் அலறிக் கூச்சலிடும்போது, தன் முழுங்காலை அப்பெண்ணின் முதுகில் வைத்து அழுத்துகிறார். மெக்கின்னி காவல்துறையை பொருத்தவரை இச்செயல், "அங்கு வாழாத அல்லது அங்கு இருப்பதற்கு அனுமதியற்ற சில சிறார்களால் எழுந்த "தொந்தரவுகளுக்களை" தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை.
இச்சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப் பட்டதும் அந்த அதிகாரி ராஜினாமா செய்துள்ளார், அவர்மேல் விசாரணை நடத்தப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. கேளிக்கை நிகழ்வில் கலந்துகொண்ட கருப்பின இளைஞர்கள் அங்குள்ள செய்தியாளர்களிடம் போலீஸ் வருவதற்கு முன்பான நிகழ்வுகளை விளக்கியுள்ளனர், அதில் அங்குள்ள வெள்ளையின பெரியவர்கள் அவர்களை அணுகி கருப்பின குழந்தைகள் குளங்களை விட்டு வெளியேறுமாறும், தங்களது "பிரிவு 8 குடியிருப்பிற்கே" திரும்பும்மாறும் கூறியதாக தெரிவித்தனர்.
தாக்குதலில் ஈடுபடும் காவலாளி
காவல்துறையால் தாக்கப்பட்ட பெண்
அதற்குபிறகு, இச்சம்பவம் பூதாகரமாகி தேசிய அளவில் கவனத்தை ஈர்த்ததும், உள்ளூர் செய்தியாளர் ஒருவர் அங்குள்ள நீச்சல் குளத்திற்கு முன் ஒட்டப்பட்டிருந்தத , "எங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு நன்றி மெக்கின்னி காவல்துறை" எனும் சுவரொட்டியின் படத்தை பகிர்ந்திருந்தார். ஆயுதமேதுமற்ற இளைஞர்களை நோக்கி துப்பாக்கியைக் காட்டும் அதிகாரியின் பாதுகாப்பில் இருக்கும் ஒரு சமூகத்தில், நீச்சல் குளத்தில் குளிக்க வந்த கருப்பின குழந்தைகளால் என்ன ஆபத்து விளைந்துவிடப் போகிறது?
அப்பகுதியுனுள் எழுதி வைக்கப்பட்டு இருந்த பதாகை
நமக்கு இன்னும், அல்லது என்றும் கூட, அந்தக் குறிப்பிட்ட நீச்சல் குளத்தில் துல்லியமாக என்ன நடந்தது என்று தெரியாதிருக்கலாம், ஆனால் நீச்சல் உடையிலிருந்த கருப்ப்ன குழந்தைகள் மீதான அந்த அதிகாரியின் முரட்டுத்தனமான வெளிப்பாட்டால் நீருக்கான உரிமை மற்றும் அணுகல் யாருக்கு உரிமையுடையது; உரிமையற்றது குறித்து நடந்த நீண்ட நெடும் போராட்டத்தை நினைவுப் படுத்துகிறது.
இனவாதப் பதட்டத்துக்கான இடமாகவே நீர் நீண்டகாலமாகவே இருந்து வந்திருக்கிறது. ஒருங்கிணைக்கப் பட்ட நகரக் குளங்கள் பல கலவரங்களுக்கு வழிவகுத்துள்ளது, 1931'ல் நடந்ததைப் போல. அப்போது போலிஸ் அதிகாரிகள் பார்த்துக் கொண்டிருக்கம் போதே, நீரினுள் இருந்த பிட்ஸ்பர்க்கின் கருப்பின ஆண், வெளியே இழுத்துவரப்பட்டு, வெள்ளையின நீந்துவோர்களால் அடிக்கப் பட்டான். மிஸிஸிப்பின் ஒருங்கிணைவுக்கு முந்தைய அடித்தள-களமாக விளங்கியது ஒதுக்கப்பட்ட கடற்கரைகள் தான். நூற்றுக்கும் மேற்பட்ட கருப்பின மக்கள் தங்கள் துக்கத்தை வெளிப் படுத்த நடைபயணம் சென்றபோது, நீளக் குச்சிகளாலும், ஈயக் குழாய்களாலும், சங்கிலியாலும் ஓர் வெள்ளை கும்பலால் தாக்கப் பட்டனர். அந்த தாக்குதல் செய்தி நிறுவனங்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிடும் போது "மிஸிஸிப்பி வரலாற்றில் நடந்த மிக மோசமான இனவாத கலகம்" எனப் பதிவு செய்தது.
ஒதுக்கப்பட்ட தண்ணீர் என்பது வெறும் தெற்கத்திய பாரம்பரியம் மட்டும் அல்ல. கலிஃபோர்னியாவில், "வெள்ளையர்க்கு மட்டுமே"யான உணவகங்களில், பள்ளிகளில், நீச்சல் வகுப்புகளில் மெக்ஸிக-அமெரிக்கர்களுக்கு இடமில்லை. 2010'ஆம் ஆண்டில், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்'கான நேர்காணலில், திரைப்பட இயக்குனர் சான்ரா ராபீ, ஆரஞ்சு நாடுகளின் சிவில் உரிமைக்களுக்கான வரலாற்றில் அவர் பார்த்த இடத்தில் இனப் பாகுபாடு எப்படி வளர்ந்து வருகிறது என விவரித்தார். "திங்கள்கிழமை மெக்ஸிகனுக்கானது", அவர் தொடர்ந்தார். "அதற்கு அடுத்த நாள் ஒட்டுமொத்த குளமும் வடித்து, சுத்தம் செய்யப் படும், எனவே அடுத்துவரும் வார நாட்களில் வெள்ளையர்கள் அதைப் பயன்படுத்த கூடியதாக இருக்கும்".
"போட்டியிட்ட தண்ணீர்: நீச்சல் குளங்களின் சமூக வரலாறு" எனும் தன் நூலில் ஜெஃப் விட்சே, ஒருங்கிணைக்கப் பட்ட நீச்சல் குளங்களால் உருவாக்கும் இனவாத உலைவுகள் இருவகையான பெரும் பதட்டத்தை உருவாகிறது: ஒன்று மாசு, மற்றொன்று இனக்கலப்பு என வாதிடுகிறார். முன்பெல்லாம் குளங்கள் வர்க்க வேறுபாடுகளால் தான் பிரிக்கப் பட்டிருந்தன, அங்கே வெள்ளை நடுத்தர வர்க்கத்தினர் புலம்பெயர் ஏழை ஐரோப்பியர்களுடன் நீச்சலை தவிர்த்தனர், அவர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் என்று காரணம் அளித்தனர். பெரும் புலம்பெயர்வுக்குப் பிந்தைய சூழலில், இந்த "நோய்" பயம் இனவாதமாக மாற்றப் பட்டது, இப்போது அனைத்து சமூக அடுக்குகளைச் சேர்ந்த வெள்ளையர்களும் கருப்பினத்தவருடன் சேர்ந்து நீச்சலிட்டால் அது தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பயந்தனர். பிட்ஸ்பர்க்கில் 1930'ஆம் ஆண்டு, நகர நீச்சல் குளத்தில் இருந்த கருப்பினத்தவர் மட்டும் வெளியேற்றப் பட்டு, அவர்கள் நோயற்றவற்றவர்கள் நிரூபிக்கும் வகையில் "நலச் சான்றிதழ்" சமர்பிக்குமாறு ஆணையிடப்பட்டனர். வெள்ளையர்களுக்கு அந்த விதி பின்பற்றப்படவில்லை.
மேலும் இதுகுறித்து தன்னுடைய அழுத்தமான கவலையாக திரு. வில்ட்சே குறிப்பிட்டது, நகரக் குளங்களில் பெண்களையும் ஆண்களையும் ஒன்றாக நீச்சலடிக்க அனுமதிப்பது பற்றியது. "பொதுவாக வடகத்திய வெள்ளையர்கள்" அவர் எழுதினார். "வெள்ளை பெண்களுடன் அத்தகைய நெருக்கமான மற்றும் சிற்றின்ப பொதுவெளியில் கருப்பின ஆண்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை கொண்டுள்ளதால் எதிர்ப்பார்கள்"
.
பால்டிமாரில், பிரவுன்.V கல்விவாரிய ஆட்சியான 1954'ல், நகர வழக்குறைஞர், நீச்சல் குளங்களில் இன, நிறப் பாகுபாடு என்பது தொடரவேண்டும், ஏனெனில் "நீச்சல், ஆண்களையும் பெண்களையும் உடல்சார்ந்த, நெருக்கமான தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளத்தக்க வகையில் உள்ளன" என வாதிட்டார். நீதிபதி ரோசல் தாம்சென் அந்த வாதத்தை ஏற்றுக் கொண்டு, நகரக் குளங்களில் பாகுபாட்டை தொடர அனுமதித்து உத்தரவிட்டார். அது குறித்து அவர் விளக்கமளிக்கையில், திரு. வில்ட்சே, நீச்சல் குளங்கள் அது வழங்கும் பயனடைவோரின் நேரிடை மற்றும் சரீர தொடர்புகளால், அது "கல்விக் கூடங்களை விட முக்கியமானது" என்றும் குறிப்பிட்டார்.
வெள்ளை மேலாதிக்கவாத கற்பனைகளில், இந்தக் கவலைகள் எல்லாம் ஒற்றை எண்ணம் கொண்டவை தான். அது, பாகுபாடற்ற இன நெருக்கம் என்பது மாசுத்தன்மையுடையது. இனக்கலப்பு என்பது பாதிப்பை ஏற்படுத்த வல்லது.
நான் கடற்கரை நகரத்தில் தான் வளர்ந்தேன், ஆனால் என்னால் நீந்த முடியாது. என் பெற்றோர் என்னை சிறுவயதிலேயே நீச்சல் வகுப்பில் சேர்த்தனர். ஆனால் நான் அதில் ஒவ்வொரு பகுதியையும் வெறுத்தேன்: நீருக்குள் தலைமூழ்குவது ஆகட்டும், க்ளோரினை முகர்வது ஆகட்டும், தலைமுடியை நினைத்து கொள்வது ஆகட்டும். தண்ணீர் எனக்கு எப்போதும் இயற்கையானதும், அன்னியமானது மாகவே இருந்திருக்கிறது, ஆபத்தான தாகவும், தவிர்க்க முடியததாகவும்.
என் அம்மாவிற்கும் நீந்த தெரியாது. எனினும் ஓர் கோடையில் என்னையும் என் தங்கையையும் நீச்சல் வகுப்பிற்கு அனுப்புவது ஒன்றையே கடமையெனக் கொண்டிருந்தாள். அவள் தென்மேற்கு லூசியானவில் வளர்ந்தவள், அங்கே அருகாமை அனைத்தும்- நதிகளும், கல்ஃப் கடற்கரையும்- நீர்நிலைகள் தான்..அவள் ஒதுக்கப்பட்ட பள்ளிக்குத் தான் சென்றால், ஒதுக்கப்பட்ட தேவாலயங்களில் நடந்த ஒதுக்கப்பட்ட ஜபக்கூட்டங்களில் தான் கலந்து கொண்டாள். அந்த ஒதுக்கப்பட்ட தேவாலயத்தின் மயானத்தில் வெள்ளை மற்றும் கருப்ப ஒதுக்கப்பட்ட பிரேதங்கள் சாம்பலாய் தூர்ந்து காய்ந்திருந்தது. என் தாயும் ஒதுக்கப்பட்ட கடற்கரைக்குச் சென்றிருக்கிறாள். கட்டி எழுப்பப்பட்ட கட்டுமானங்களை பிரிப்பது புரிந்து கொள்ள முடிகிறது„ ஆனால் நீரை, சமுத்திரத்தை நீங்கள் எப்படி தனியாக பிரித்து ஒதுக்குவீர்கள்?
“இது முட்டாள்தனமானது”, என் தாயார் சொல்வார். "ஏனெனில் தண்ணீர் கலக்கும். எந்த திசையில் செல்ல வேண்டுமென்று தண்ணீரால் முடிவு செய்ய முடியாது".
பல தசாப்தங்களாக, வெள்ளை இன நீந்துவோர் கருப்பின மக்களுடன் நீச்சல் குளத்தை பங்கிட்டுக் கொள்ள பயந்தனர், அது தங்களை நோய் பயக்கும் என்னும் கவலையை தெரிவித்தனர், இருந்தும் தங்களது உணவை சமைக்கவும், குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் தாதியாகவும் கருப்பினத்தவரைத் தான் பணி அமர்த்தினர். திரு.தர்மொண்ட் இனக்கலப்பை எதிர்த்து பேரணி சென்றார், ஆனால் அவரது மறைவு பிறகு தான் அவருக்கும் அவரது வீட்டில் வேலை செய்த கருப்பின பெண்ணிற்கும் உண்டான உறவில் ஒரு பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது.
ஸ்டார்ம் தர்மௌண்ட்'ன் மகள் (வயதான மூதாட்டி)
இனவாதத்துக்கும், நீருக்கும் ஓர் விநோத தொடர்பு இருந்தே வந்திருக்கிறது, பின்னது இதன் தவிர்க்க முடியாத நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது. நீர் என்னை தொடுகிறது, பின் உன்னை தொடுகிறது.
"நியு யார்க் டைம்ஸில்" 10/06/15 புதனன்று வெளியான கட்டுரை.
New York Times c(Co-Ed) 10/06/15
(http://mobile.nytimes.com/2015/06/10/opinion/who-gets-to-go-to-the-pool.html?_r=1&referrer=)