கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22/12/18

Mystic leap






He cannot relieve himself from

the murmurs of rainy-breeze

Fiery predator’s sharpened teeth

consistently collapsed his balance

Dwelled deep into the isolated acidic ocean

he came out and walked across

stricken by awe in witnessing the steady meditation of toads

inside the dark ruptures of rocks around the tainted pond.




For us there’s nothing else but to be astonished 

about the in-desiccation of his love even in the last petal of the

last flower bloomed amidst the blackened shadow

in his unsettled sky.













(என்னுடைய கவிதை "புனைவன்பு"யின் ஆங்கில மொழிப் பெயர்ப்பு)

3/5/17



ஞகளும் மானெனே 

யானும் கதலல்லே சரீர்

பழஞம் மனவ தா நிசவ் யானிடனை 

கழிஞூஞ்னு மலபல்ல கந்தி யாய நஸ 

ஞர மய ஹசாயி கசத் லே ஹக் ஷ
சடக் சடக் 

நிவநவ யசத் கண மோ 

சடக் 

ஒழி கன் மதள யாழி ஆசே 

ஞணமே சுழிஞு பூங் ஞெரழே ஈ 

மயமே... கணானி ஞகத் யுண நநன 
ரஸ்ஸல்ழே. 

சடக் சடக் 


- அன்புள்ள வம்மூக்கு <3

14/12/16

பொம்மையானவள்



என் பெண்கள் என் பொம்மைகள்

பொத்தல் நிலத்தின்

நிவாரணியாக

பொழியும் மழைபோல

என் வடுக்களின்

இருண்மைகளின்

மீட்சிக்கான

கடைசிப் புகலிடங்கள்.

ஒரு வகையில் தாதிக்கள்.




அவைகளை வைத்து நான்

விளையாடுவேன்

தூக்கியெறிவேன், பூட்டி வைப்பேன்

தண்ணீரில் மிதக்கச் செய்வேன்,

தொலைத்துவிட்டால் அழுவேன் ஒரு

குழந்தை போல.

பிள்ளை குணத்தின் சாயலென கடிந்தாலும்

யாருடனும் பகிரத் துணியமாட்டேன்

என் பொம்மைகளை.

ஏனெனில்

இங்கே

பொம்மைகளானவர்கள் வெறும்

பொம்மைகள் அல்லவே

13/10/16

பிரிவுபச்சாரம்



                                     



உலகம் அழியத் தயாராகி வருகிறது.
அறிவித்த போப் பாண்டவர்
கூடவே தற்கொலைக்கான ஆயுத்தங்களிலும்
மும்முரமானார்.

அழியத் துவங்கப் போகிறதா உலகம்!
வற்றியக் காம்புகளுடன்
பாதி இறந்த குழந்தையை
இறுக அணைத்தவாறே ஆனந்தக்
கெக்கலியிட்டாள்
ஏழை வயோதிகி.

முழுக்க மழித்தெடுத்த முகத்துடன்
கண்ணாடியில் பட்டொடியும் வைரத் துளிகளையொத்த
சில்லெனும் தண்ணீர்,
அப்பிக்கிடந்த முகத்தில்
இருந்து
மெல்ல மெல்ல உருகித்
துளிர்க்க,
பூமியின் கடைசி நாளுக்கான
கடைசி அறிவிப்பானையை
தெரிந்துகொண்ட அவன்
தனது இறுதிப் புணர்ச்சிக்கு தயாரானான்.

இலட்சோபலட்ச மனித சஞ்சாரங்களின்
இறுதி கணம் என்பதால்,
இன்னும் தீவிரமாகவும்
உன்மத்தத்தின் கடைசி மிடரையும் ருசிக்கும் வகையிலும்
நடைபெற்றுக் கொண்டிருந்தது
உலகின் அந்தக்
கடைசிப் புனர்ச்சி.

பூமியின் அந்த இறுதி
தினத்தினூடாக எழுந்த
மூர்க்கமான கலவியின்
கேவலானாது
மென்மையானதொரு சங்கீதமாய்
பால்வெளியை நிறைக்கத் தொடங்கியது.

ஆக
உயிர்ப்பற்று இறுகி கிடந்த
இந்த பூமியின்
இறுதி நாளுக்கான
அழகிய பிரிவு உபச்சாரமாக
ஒரு நல்ல நீண்ட உன்னதமான கலவியைத் தவிர
வேறென்ன இருக்க முடியும்!
என கணக்கை முடித்தான் ஐந்து தலை
பிரம்மன்.

_________________________________
கபிலன். இல

8/10/16








இறைவா
 
எனக்கு ஒரு சுடர் கொடு இறைவா
பாலைவன இருளுல்
பட்சிகளின் கீதமற்ற பொழுதொன்றில்
வானின் மென் திரவசூழ் அந்தியில்
ஒளி தரும் லாந்தர் என
கையளிப்பேன்
பாதைகளற்ற பராரிகள் சிலருக்கு.
நிச்சயம் புதிரையே உடுப்பாய் உடுத்தியுள்ள
அந்த இரு பெரும் கருத்த மலைகளுக்கு இடையே புதைக்க மாட்டேன்.

19/8/15

புனைவன்பு



மழைக்காற்றின் முணுமுணுப்பில் இருந்து
அவனால் விலக முடியவில்லை.
கொடும் மிருகங்களின் கூரிய பற்கள்
அவன் சமநிலையை குலைத்தப் படியிருந்தன.
தனித்து திரவக் கடலின் ஆழத்தில்
மூழ்கிய அவன், பின் மீண்டு
பாறைகளுக்கு அடியே 
இருண்ட இடுக்குக்களின் இடையில்
தேங்கிய நீரினுள் தவளைகள் புரிந்துவந்த தவத்தை
வியந்தபடி நடந்தான்.

முடியாத அவன் வானத்தின்
கடைசி கருநிற நிழலின் ஓரத்தில் பூத்த
மலரின் மெல்லிய நுனியிலும்
அவன் காதலின் பிசுபிசுப்பு குறையாதிருந்ததை நினைத்து
நாம் வியப்பதற்கு ஒன்றுமில்லை தான்.




கபிலன் இல (KABILAN C L).

17/08/2015 23.13

கோவை.

11/4/15

மழலை வெளி -

வண்ணக் காகிதத்தில்
ஓவியம் வரைகிறாள் பாப்பா
முகில் நிறைந்த வானில்
மீனாக சிங்கத்தையும்
நாயாக கரடியையும்
பூனையாக புலியையும்
கோழியாக குதிரையையும்
தீட்டுகிறாள் பாப்பா
தீர்க்கமான அவள் உலகத்தில்
எங்கும் இல்லை மனிதர்கள்

கோவை                                         கபிலன் இல
11.04.2015
17.43 மணி 

14/2/15

கடந்து செல்லா காதல்....

கரைந்தோடும் நினைவுகளின் வழியே
கவிதை பாட, சொற்களைத் தேடுகிறேன்
என்றாவது ஒரு நாள்
சொற்கள் கிட்டலாம்
என் வலியை  உணர்த்தலாம்
எனில் உன் அன்பை போல
அதுவும் தற்காலிகமானதாக
இல்லாது இருத்தலே
போதுமானது
எனக்கு .

கண்களின் ஓரம்
கசிந்தோடும் கண்ணீரின் ஊடே
உன்னுடனான எனது அன்பை
மீட்க முயற்சிக்கிறேன்
நாள்தோறும்
தோற்றுத்தான் போனேன்
இன்றும்.

அன்பிற்கான தேடலின்போது ஆன
எனது தோல்விகள்
புதிதா என்ன

நீ கொடுத்த மலர்களை
மட்டுமல்ல
வீசிச்சென்ற முட்களையும் கூட
தாங்கியே நிற்கிறேன்
தயக்கமின்றி

மீளாதப் பொழுதுகள் பல
தாளாத தனிமையில்
வெம்மை படர்ந்த
அந்தி வெளியில் ,
அன்பிற்கான எனது
பிரயாசைகள்
தொடர்ந்து வண்ணமே
உள்ளன

நீ விட்டுச்சென்ற சுவடுகளோடு
அன்பிற்கான படிப்பினையாக
உன் நாட்கள் என
வாழ்வின் அடுத்த
படிநிலையை
மெல்ல கடக்கவே நினைக்கிறன்

எக்காலத்துக்கும் ஆன அன்பென
இவ்வுலகில் ஏதேனும் உண்டா, என 
எஞ்சி நிற்கும் கேள்வியோடே
தொடர்கிறேன்
எனது பயணத்தை
"அன்பு கிலோ எத்தனை?"
எனக் கேட்காத
உலகத்தை
நோக்கி ...

4/9/14

தன்னறிதல்



பொழுதுகள் புலர்ந்தன

மெல்ல நகர்ந்தன நாட்கள்

கனவுகளைத் தொலைத்து

இலக்கற்று, கையறுநிலையில்

கழியும் நாட்களில்

கசியும் கண்ணீரோடு

அணுநிமிடமும் அரூபமாய்

வாழ்வை நோக்கிய ஏக்கமுமாய்

எழுந்திருக்க நினைக்கும்

எண்ணத்தோடு

சலனமற்று கிடக்கிறது

வீழ்ந்தவனின் மனது
 

30/5/14

கனவுலகம்

கைகளால் தொட எண்ணியதை எல்லாம்
எண்ணத்தால் தீண்டினேன்,
 கனவின் வழி.
எட்டா சிகரங்கள் அனைத்தையும்,
எளிதாய் கடந்து சென்றேன்,
கனவின் வழியே...
மீளா துன்பங்கள் அனைத்திலிருந்தும்,
நொடிப்பொழுதில் மீண்டு வந்தேன்,
கனவின் வழியில்....
என் கனவுகள், என்னால் உருப்பெற்றது, என்னையும் பண்படுத்தியது.
வாழிய நூற்றாண்டு கனவுலகம்!!!

27/5/14

நான் மழை

வார்த்தைகள் முட்டினால்

மௌணங்கள் மொழியாகலம் !

நீ

என்னை தொட்டதால்

நானும் மழை ஆனதேன் ! 

உன் கண்கள் பட்டதும் 
காற்றும் கணத்ததேன் ...............

நேற்று என் வாசலருகே 
கடந்தாய் நீ எனை  
வீசிய மழைக்காற்று என் செவி 
தொட்டு அழைத்தது 
என் வருகையை கவணி என!

மழை காண வந்த நான் 
மனதை நழுவவிட்டேனோ....
ஏணோ, தவற விட்டதேனோ

மழை பார்க்க வந்த நான்,
மலைத்து பொய் நின்னேன் பல நொடி...
உன் கரிய கேசம் படர்ந்த 
மழை முகம் கண்டு தானடி !!!  

26/5/14

மூங்கில் நாதம் - கவிதை

 மனமொன்றில் மெல்லவே ஒலிக்கிறது

மூங்கில் நாதமொன்று ...

இயல்பாய், வெகு இயல்பாய்

காற்றோடு கலந்தபடியே கரைகிறது

காதின் ஓரம் ....

யாருக்காகவும் காத்திராமல்
யார் கவனத்தையும் நாடாமல் .......

இசை வழி நான் - கவிதை

கனத்திடும் மனதானது கரைய,

பலமுறை துணை நின்று உள்ளது இசை....

இசை உதவின் தனை, உண்டான,

எனை ஆட்க்கொண்ட எண்ணங்கள் உடனே மறைவதில்லை...

வழிந்தோடும் கண்ணீர்வழி
மறக்க முயல்வேன், என்னை நானே.......