11/4/15

மழலை வெளி -

வண்ணக் காகிதத்தில்
ஓவியம் வரைகிறாள் பாப்பா
முகில் நிறைந்த வானில்
மீனாக சிங்கத்தையும்
நாயாக கரடியையும்
பூனையாக புலியையும்
கோழியாக குதிரையையும்
தீட்டுகிறாள் பாப்பா
தீர்க்கமான அவள் உலகத்தில்
எங்கும் இல்லை மனிதர்கள்

கோவை                                         கபிலன் இல
11.04.2015
17.43 மணி