14/12/16

பொம்மையானவள்



என் பெண்கள் என் பொம்மைகள்

பொத்தல் நிலத்தின்

நிவாரணியாக

பொழியும் மழைபோல

என் வடுக்களின்

இருண்மைகளின்

மீட்சிக்கான

கடைசிப் புகலிடங்கள்.

ஒரு வகையில் தாதிக்கள்.




அவைகளை வைத்து நான்

விளையாடுவேன்

தூக்கியெறிவேன், பூட்டி வைப்பேன்

தண்ணீரில் மிதக்கச் செய்வேன்,

தொலைத்துவிட்டால் அழுவேன் ஒரு

குழந்தை போல.

பிள்ளை குணத்தின் சாயலென கடிந்தாலும்

யாருடனும் பகிரத் துணியமாட்டேன்

என் பொம்மைகளை.

ஏனெனில்

இங்கே

பொம்மைகளானவர்கள் வெறும்

பொம்மைகள் அல்லவே

1 கருத்து: