5/6/23

'வாழ்வதாகச் சொல்கிறோம், வாழ்கிறோமா?' – பகுதி 1


ஜூன் மாத ஆரம்ப நாட்களின், இதுவரை வதைத்து வந்த கடும் வெயில்காலத்தின் கடைசிக் கட்டத்தின் அறிகுறியை உணர்வது போல, இதமான இரவு குளிரின் அரவணைப்பில் எழுதுகிறேன். இருபதுகளின் மத்திமத்தை கடக்கும்போது வாழ்க்கை இன்னும் இருக்கிறது; சொல்லப்போனால் இன்னும் எங்கோ இருக்கிறது என்றே எண்ணிக்கொண்டிருந்தேன். இதுவரை இருளினில் அடைபட்டுக்கிடந்த காலம் குறித்து கவலைக் கொள்ளாது, இனிவரும் நாட்களை உற்சாகத்துடன் எதிர்நோக்குவோம் என்பதே எண்ணமாக இருந்தது. மேலும் ஒருபடி சென்று விவரிப்பதென்றால், நாம் இனியும் விடலைகள் அல்ல, வளர்ந்து வருகிறோம், நம் கல்லூரிக் காலத்தில் தென்பட்ட சில சிறுமைகளில் இருந்தும்கூட விலகி, முழுக்க முதிர்ந்த நிலையில் வாழ்வை எதிர்கொள்வோம், நம் நண்பர்களும் அத்தகைய முதிர்ச்சியோடே நம்முடன் உடன் வருவர் என நினைத்து இருந்தேன். நாம் எதிர்பார்ப்பதில் இல்லை பிரச்சினை, நம் எதிர்பார்ப்பு எங்கிருந்து எழுகிறது என்பதை பெரும்பாலும் நாம் பொருட்படுத்தாது இருப்பதில் தான் இருக்கிறது பிரச்சினை.


சிறுவயதில் கிரிக்கெட் விளையாடி இருப்போம். குறிப்பாக பந்து வீசும் சமயம் எவ்வளவு தூரம் ரன்களை கட்டுப்படுத்த முடிகிறதோ அவ்வளவும் வெற்றிக்கு வித்திடும் என்பதால் மிகுந்த கவனத்துடன் இருப்போம். ஆட்டக்களத்தில் உள்ள பதினோரு பேரும் ஒற்றை தரப்பாக நின்று விளையாட உந்தப்படுவோம். அதன் காரணமாகவே யாரேனும் ஒருவரின் அலட்சியத்தால், பந்தை சரியாக தடுக்கவில்லை என்றால் கோபத்துக்கு உள்ளாவோம். நம் கோபத்தை, சக ஆட்டக்காரரான நம் நண்பரிடம் இயல்பாக வெளிப்படுத்துவோம்; உடனடியாக இல்லையென்றாலும் ஆட்டத்தின் முடிவிலாவது செய்வோம். இதில் கவனிக்கத்தக்க ஆச்சரியம் என்னவெனில், நமது கோபத்தின் நியாயத்தை அந்நண்பர் உணர்ந்திருப்பார். தன்னை தாழ்த்திவிட்டான் என்றோ, மற்றவர்கள் முன் வேண்டுமென்றே அவமானப்படுத்தி விட்டான் என்றோ, உள்ளிருந்து வெளிப்பட்ட தீய எண்ணத்தினால் தனது செயல்பாட்டை குறை கூறியோ அல்லது தனது தவறை உள்நோக்கத்துடன் பெரிதுப்படுத்தி சொன்னான் என்றோ ஒரு சலசலப்பும் இருக்காது. இத்தனைக்கும் யோசித்து பாருங்கள் அந்த ஆட்டத்தினால் என்ன முடிவாக கிடைத்து விடப்போகிறது? என்ன அதிகபட்சம் ஒரு கோப்பை கிடைக்குமா? ஆனால் பாருங்கள் ஒரு கோப்பை கூட வேண்டீராது நாம் பல ஆட்டங்கள் மகிழ்ச்சியாய் ஆடி இருப்போம். எது நம்மை இத்தைகைய ஒற்றுமைக்கும் (solidarity), சகோதரத்துவதுக்கும், மகிழ்ச்சிக்கும் உந்தியது? விளையாடிய யார் ஒருவருக்கும் salary கிடைக்கப்போவதில்லை, pay hike’ம் ஆகப் போவதில்லை, promotion’ம் கிட்டப்போவது இல்லை. இன்னும் இன்றைய காலத்து வழக்கத்தில் சொல்வதென்றால் இது வெறும் “நேர விரயம்” தானே? உடனடி பலாபலனை தராத, ஆனால் மகிழ்ச்சி தரக்கூடிய, கூட்டுச் செயல்பாட்டை நாம் எத்தனை பேர் இன்றைய நாட்களில் செய்ய விழைகிறோம்? நமக்கு வயதாகி விட்டதல்ல பிரச்சனை. கிழத்தன்மை (‘senelity’ or ‘psychological senelity’) வந்து விட்டது. ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு.    

 

வயதாவதால் கிழத்தன்மை வந்துவிடாது. கிழத்தன்மை வருவதற்கும், அது நிலைப்பதற்கும் வயது ஒரு பெரிய காரணி இல்லை. நாம் விளையாட்டை மறப்பதால் அல்ல, விளையாட்டின் விதிகளையும், norms’யையும்  மறப்பதால் தான் வாழ்வின் தொய்வை உணர்கிறோம், கிழத்தன்மையை பூணுகிறோம். அதனால் தான் இயல்பாக ஒரு சிறு விஷயத்தில் ஏற்பட்ட கோவத்தை நண்பன் ஒருவனிடம் வெளிப்படுத்தும் போது அவன் கடிந்து கொண்டதோடு, பதிலுக்கு சண்டையும் போட்டான்தோழி ஒருவருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு surprise நிகழ்வில் இருந்து கடைசி நிமிடத்தில் அவர் தன்னை விடுவித்துக் கொள்கிறார். எனக்கு ஏற்பட்ட நல்ல செய்தியை தெரிவிக்க தொலைபேசியில் பலமுறை அழைத்தும் எதுவும் பதில் இல்லாததால் இன்றுவரை எனக்கு நேர்ந்த (வாழ்வில் எப்போதாவது தான் நிகழும்) நற்செய்தியை நண்பன் ஒருவனுடன் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. இதுக்கு எல்லாம், இவர்களுக்கு எல்லாம் ஏற்றார்போல, ஒரே பதில் நடவடிக்கை தான் இருக்கிறது. அது நாமும் இவர்களைப் போல கண்டும் காணமல், நமது காரியத்தை மட்டும் கவனித்துக் கொண்டு நமது கூட்டுக்குள்ளேயே அடைந்து விடுவது தான். கடைசில் நமது வாழ்-உலகம் திறந்தவெளி சிறைப்போல இருக்கும். அப்படி நானும் எதிர்விணை ஆற்றிவிடக்கூடாது என்று தான் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் அப்படி நடந்து கொள்வது வெகு சுலபம். தேவைப்படும் சமயத்தில் பேசினால் போதும், பார்க்கநேரும் தருவாயில் மட்டும் அலங்காரமாக வாழ்த்துகளை தெரிவித்தால் போதும். நமக்கு என்றோ வந்து சேர்ந்தது என்றாலும், திறக்கப்படாத அந்த message’ல், அதனுடன் வந்து இருக்கும் படத்தில் தெரியப்படுத்தும் செய்தி என்பது நமது நண்பர் ஒருவரின் திருமண அழைப்பாகவும் இருக்கலாம், அல்லது அவர் திடீர் விபத்தொன்றில் மரணித்ததைக் குறித்த செய்தியாகவும் இருக்கலாம். இரண்டு மாதம் கழித்து தெரியாத்தனமாக அந்த message’ஐ திறந்த பிறகு, வேண்டுமானால், busy’ஆக நாம் இல்லையென்றால், வேகவேகமாக ஒரு இரண்டு நிமிடம் நண்பனை நினைத்து அஞ்சலி செலுத்தி விட்டு வேறு காரியத்தைப் பார்க்கலாம்.

 

ஒரே கேள்வி தான்: நாம் நண்பர்கள் தானா? நட்பு என்பது நம் காலத்தில் என்னவாய் இருக்கிறது? நண்பன் ஒருவனைப் பார்ப்பதற்கு, பல ஆயிரம் மைல், பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து, சென்று பார்த்து வந்தால், அவன் அதன்பிறகு பல முறை தமிழகம் வந்தும் எங்களைப் பார்ப்பதைக் குறித்து ஒருமுறைகூட பேசவில்லை. தோழி ஒருவருக்கு அரசு வேலை கிடைத்ததைக் குறித்து பாராட்டுகள் தெரிவித்து செய்தி அனுப்பினால் மாதக்கணக்கில் எந்த பதிலும் இல்லை. விடுமுறை தினங்களில், புத்தாண்டைக் கொண்டாட நண்பர்கள் குழாமுடன் வெளியே சென்றிருந்தபோது, வேண்டுமென்றே குத்தும்படி ஒவ்வொருவருக்கும் இடையிலான நிதிநிலை வித்தியாசங்கள் குறிப்பிடப்பட்டது. நல்ல வேலை விளையாட்டும், கிரிக்கெட்டும் என் பால்ய காலத்தில் என் துணையாக இருந்தது. இல்லையென்றால் Close படத்தின் ரெமி சிறுவனின் கதி தான் எனக்கும் வாய்த்திருக்கும். முப்பதுகளை கடந்து, போலித்தனமையின் புகலிடமாய் விளங்கும் இத்தைகைய “நட்புகளை” எப்படி சமாளிப்பது? எப்படி இணங்கிப்போவது? இது ஒரு வழி. என் வழி. இவ்வாறாக எழுதுவதன் வழி எனக்கு கிடைக்கும் ஒரு திறப்பு, தெளிவு. இது போதுமானது. ஏன் எழுத்தாளர்கள் எல்லாம் சஞ்சலப் பேர்வழிகளாக இருக்கிறார்கள் என இன்று மீண்டும் புரிந்தது. சக மனிதர்களாலான இன்னல்களே அவர்கள் எழுத்தின் மூலக்காரணி எனும் போது, அதை எழுதி தீர்த்துவிடத்தான் முடியுமா! ஆனால் இப்போது எழுதிய இந்தக் குறிப்பு எனக்கானது. யாரையும் படிக்கச் சொல்லி நான் வலியுருத்தப்போவதில்லை. இதுவரை அப்படி படித்து, தங்களது விரிவான கருத்துகளால் விவாதத்தை செறிவாக்கியவர்கள் யாருமிலர். எனவே எனக்கு எதிர்ப்பார்ப்பும் இனி இல்லை. அன்புக்கான நிபந்தனை ஏதுமின்றி வாழ முயல்வேன். என் இப்போதைய கவலை எல்லாம் இப்படி எழுத்தின் வழியாக கூட தங்களின் மனக்கவலைகளை வெளிப்படுத்த, உற்றுநோக்க, தெளிவுபெற முயற்சிக்க முடியாதவர்களை எண்ணித்தான்.   

15/3/23

இலக்கியம் வாசிக்கும், இலக்கியம் வாசிக்கும் நண்பர்களுடைய, நண்பர்களுக்கு என் சிறு குறிப்பு

 



நம் தலைமுறையினர், குறிப்பாக 90களின் பிற்காலத்தை சேர்ந்தவர்களான, GenZ மற்றும் millennial’களுமே இச்சிறுகுறிப்பின் கரிசனத்துக்கு உட்பட்டவர்கள். எனினும் ஏனையோரும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விவாதம் தான் இது.

சமூகத்தில் நாம் மாற்றம் புரிய வேண்டும் என, சிலர் நேரிடையிலும் பலர் மறைமுகமாகவும் விழையும், ஒரு கருத்துருவாக களமாகவே இலக்கிய வாசிப்பு பயிற்ச்சியை, அது சார்ந்த உரையாடலை காணும் எண்ணத்தில் பலர் உள்புகுகிறார்கள். சிலரது சமூக மாற்றத்துக்கான அளவீடு என்பது அதே நோக்கத்தில் செயல்பட விழையும் உடனிருப்போரிடமும் இருந்து கூட வேறுபடும். சிலர் தன்னை பார்த்து ஒரு பத்து அல்லது இருபது நபர்கள் தங்களது ‘வழமையான’ அர்த்தமற்ற’ வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, ‘அழகியல்’ நோக்கில் மற்றும் 'சிந்தனையில்' தேர்ச்சி பெற்று தனது ஆளுமையில் ஏற்றம் பெற்றாலோ அல்லது ‘சமூக மாற்றம்’ நோக்கி நடைபோட்டாலோ கூட ‘வெற்றி’ தான் என்பர். அதிலும் சிலர் ஒருபடி மேலேபோய், “ஒரே ஒருவர் கூட தங்களது வாழ்கையில் மைய்யமான மாற்றத்தை ஏற்படுத்தத் தக்க உத்வேகத்தை என்னிடம் இருந்து பெற்றுக் கொண்டார்களெனில்” தனக்கு வெற்றியே என பெருமிதத்துடன் முன்வைப்பார்கள்.



ஆனால் ‘சமூக மாற்றத்திற்காக’ இலக்கிய வாசிப்பில் ஈடுபடும் அனைவரும் செயல்பட வேண்டும், அதற்கான திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்னும் நிலைப்பாடு வாசிப்பவர்களின் மேல் ஏற்றும் (புறவயமானதும், மனரீதிலுமான) அழுத்தம் பற்றி யாரும் கவனம் கொண்டதாகத் தெரியவில்லை. ‘சமூக மாற்றம்’ நோக்கி நீ செயல்படவில்லை என்றால் சமூக அநீதிகளுக்கான காரணிகளில் நீயும் ஒருத்தி/ஒருவன் எனும் குற்ற உணர்வின் பேரில், இலக்கிய அறநெறி அமைப்புகள், சமூக திரட்டலை மேற்கொண்டால் அது எவ்விதத்தில் ‘சமூக மாற்றத்தை’ வழிவகுக்கும், பேணும்? தனிநபர் சுதந்திரம் குறித்த உரையாடலே தமிழ் படைப்பிலக்கிய உலகில் அரிதிலும் அரிதானாக தென்படுகின்றதெனில் வாசிப்பவர்களிடையே “சமூக மூலமுதல்” (social capital) குறித்த உரையாடலோ, கவனமோ கூட இருப்பதில்லை. உன் அருகில் இருக்கும் ஒருவன் வண்ணதாசன் குறித்து இவ்வளவு அழகாக, நெக்குருகி பேசுகிறானே அவன் தந்தை ஒரு பொதுத்துறை வங்கி மேலாளர் தெரியுமா என்றக் கேள்வியோ; வாழ்க்கையில் 'உன்னதங்களை' பற்றிய அழகியல் பார்வையே முக்கியாமானது என சூளுரைக்கிறானே அவன் 'மேம்பட்ட' சமூகத்தில், அதாவது 'மேல் சாதி' என்னும் சமூகக் குழுவில் இருந்து வந்தவன் தெரியுமா? என்னும் கேள்விகளோ ஏன் இலக்கியம் வாசிப்பவர்களிடத்தில் இருப்பதில்லை என்று என்றைக்காவது யோசித்து இருக்கிறீர்களா? தொலைவில் தெரியும் (வெறும் நன்னம்பிக்கையிலான) வெளிச்சத்தை நோக்கி கண்மூடித்தனமாக நடைபோடும் குறுங்குழுக்களை, படைப்பு இலக்கிய வாசிப்பு வழியாக, சமூகத்தில் நடமாட விட்டுக்கொண்டு இருக்கிறோமா என்னும் கேள்வியும் எழாமலில்லை.



முதலில் ‘சமூக மாற்றதில்’ பங்கெடுக்க உனக்கு விருப்பம் இருக்கிறதா இல்லையா எனும் கேள்வியேனும் இலக்கிய வாசிப்பை தொடங்குவோரிடமோ, இருப்போரிடமோ முன்வைக்கப்படுகிறதா? அல்லது நிகழ வேண்டிய ‘மாற்றம்’ ஏற்புடையதாயினும் நீ active agent’ஆக இருக்க விரும்பிகிறாயா அல்லது passive agent’ஆக இருக்க விருப்பப் படுகிறாயா என்னும் கேள்வியாவது விவாதிக்கப் படுகிறதா? காலம் போன காலம் வரையிலும் ஒன்றிய அரசாங்கத்தில் பணிபுரிந்துவிட்டு, விருப்ப ஓய்வு பெற்று,பின் தன் குடும்ப நிதிப் பாதுகாப்பு மற்றும் பூர்விக வளம் யாவற்றையும் பத்திரப்படுத்திவிட்டு, சவுகரியமான சமூக சூழலில் அமர்ந்து கொண்டு ஒருவன் “சமூக மாற்றம்” குறித்தும் “அறநெறிகளின் முதன்மை” குறித்தும், அவன் எதிர்ப்பார்க்கும் விழுமியங்கள் காணக்கிடைப்பின் அதை “சமூக கீழ்மை” என்றும் இருபது முப்பது ஆண்டுகளாக முன்வைத்து வருகிறான், அவனது ‘அதிகாரத்திற்கு’ உட்பட்டு அதை ஏற்றுக்கொண்டு வழிமொழியும் ஒரு பேதைக் கூட்டம் இக்காலத்தில் ‘இலக்கிய வாசிப்பாளர்கள்’ என்னும் போர்வையில் நம்மிடையே உருப்பெற்றுள்ளது.

முதலில் ‘சமூக மாற்றம்’ என்றால் என்ன? அதற்கு என்ன வரையறை? இந்த ‘சமூக மாற்றம்’ குறித்த கரிசனம் தவிர வேறு தேடலே இந்த சமூகத்தில் கிடையாதா? அல்லது இருக்க கூடாதா? வாழ்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது ஏன் உங்களது இலக்கியத் தேடலாக இருக்க கூடாது? அதுபோக இந்த ‘சமூக மாற்றம்’ சார்ந்த இலட்சியவாதப் பேச்சுக்களை வீறு கொண்டு பேசியவர்கள் எல்லாம் இப்போது எவ்வளவு சொகுசான வாழ்க்கையில் இருக்கிறார்கள் என்பதாவது புலப்படுகிறதா? இப்படி ‘சமூகம்’ ‘திரட்சி’ (collective) குறித்து மார்தட்டியவர்கள் எல்லாம் இப்போது இயற்கையின் எழில், அதன் அழகியல், சிறுசிறு விடயங்களில் உன்னதங்களை காண்பது என சுருங்கிக் கொண்டதை பார்க்க முடிகிறது. ஆனால் இவர்கள் தங்கள் வாயை திறந்து, இப்போதும் இனி வாருங்காலங்களிலும், சொல்ல மாட்டார்கள் தாங்கள் கடைப்பிடிப்பது “Art as an ‘escapism’” என்னும் வழமையை என்று. ஒருவேளை அதை அவர்களே இன்னும் உணராது இருப்பதால் கூட இருக்கலாம். எளிமையான வார்த்தைகளில் சொல்வதானால், நீங்கள் சிறுவயதில் திரைப்படம் பார்க்க ஆரம்பிக்கும்போது நேராக குரசாவா, சத்யஜித் ரே படங்களில் இருந்து ஆரம்பிக்கவில்லை அல்லவா? கவுண்டமணி காமடிகளில் இருந்தும், சுந்தர்.சி படங்களில் இருந்து தானே தொடங்கினீர்கள்? பிறகு படைப்பு இலக்கிய வாசிப்பில் ஏன் இந்தப் பாகுபாடு? ஜனரஞ்சக இலக்கியம் குறித்து ஏன் இப்படி ஒரு தீண்டாமை உங்களிடம் தென்படுகிறது? அதுவும் ‘உன்னதங்களை’ நோக்கி செல்லும் உங்களிடம்? உங்களது இந்த ‘உன்னதங்களுகான’ ‘இலட்சியவாத’ வீறு நடையில் சாமானியன் ஒருவன் தொண்டைக்குழியில் கால் ஊன்றி சென்றாலும் பரவாயில்லை என்னும் பண்பு, மனித மாண்பையே உதாசீனப்படுத்தும் போது, அதெப்படி அறிவுப் பண்பாகும்? அது 'சர்வாதிகார அறநெறி' திரட்சியை விளைவிக்குமா? “அறிவுச் சமூகத்தை” விளைவிக்குமா? என்னுடைய பார்வையில் இதையே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், முதலில் அத்தனையையும் படிக்க ஆசைப்படுங்கள், அதுதான் வாசிப்பை நோக்கி வருபரிடையே இருக்க வேண்டிய முதல் பண்பு. இருபதுகளின் இறுதியிலும், முப்பதுகளின் பாதியிலும் எனது பல நண்பர்கள் இந்த புரிதலுக்கு வந்து சேருவது கவலை அளிக்கிறது. அவர்களும் சோர்வுடனே அவர்களது வாழ்கையை, வாசிப்பை, புதிய தேடல்கள் குறித்த சிந்தனைகளை தொடர்கிறார்கள். நானெல்லாம் என்னுடைய கல்லூரி முதலாம் ஆண்டிலிருந்தே தீவிர இலக்கிய வாசிப்பும் ஜனரஞ்சக வாசிப்பும் வேறுவேறல்ல என்று சொல்லி வந்து இருக்கிறேன், மஹா ஸ்வேதா தேவியும் தேவை விநாயக முருகனும் தேவை, ஹாருகி முரகாமியும் தேவை தாஸ்தாவெஸ்கியும் தேவை என்று. தனிநபர் உறவு குறித்து தொடர்ந்து வலியுறுத்தி இருக்கிறேன் எனினும் ‘குழுவாதேமே’ தழைத்தோங்கியது. இப்போதும் சொல்கிறேன், கண்டதையும் படிக்க ஆரம்பியுங்கள். அனைத்தும் உயர்வானதே. எந்த பண்பாடும் கீழ்மையான பண்பாடு இல்லை. ‘விழுமியம்’ குழுமியம்’ எல்லாம் அப்புறம் இருக்கட்டும், முதலில் வாழ்க்கையில் சந்தோசமாக இருபதைக்குறித்து சிந்தியுங்கள். இலக்கியவாதிகள் ஒன்னும் மகான்கள் அல்ல, உங்களையும் என்னையும் போல தனிமைச் சூழலில், இயல்பான உணர்வெழுச்சிகளை கை அடித்து கடந்து வரும் சாதரனர்களே. எனவே இங்கு யாரிடத்திலும் உங்கள் கேள்விகளுக்கான பதில் முழுமையாக இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். நாம் அதை சேர்ந்து தான் தேட வேண்டும். அதற்கு முதலில் நாம் அனைவரும் தனிமையில் தான் உழல்கிறோம் என்னும் உண்மையை ஒற்றுக்கொண்டு, நம் பலவீனங்கள் குறித்த வெளிப்படையான விவாதத்தின் மூலம் இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படி அதை ஏற்படுத்த விழையும் தருவாயில் வெறும் ‘பேருண்மைகளை’ நோக்கியே மட்டும் நம் பயணம் அமையாமல், அதிஷாவின் “ஓடுவதின் முக்கியத்துவம்” குறித்த பார்வையும், சாரு நிவேதிதாவின் “heavy metal” இசை குறித்த பார்வைகளும் நமது விவாதத்தின் முக்கிய பகுதியானால் நாம் செல்லும் பாதையும் இனிதே அமையும்.

8/3/23

An act of 'remembrance' of our times and the complex terrain of conception of 'identity'

What is an act of remembrance even mean in this age of 'staying connected'? An act of remembrance still holds autonomy within and without that action? Do we still insist on remembering things without catering that task to our digital gadgets? To ponder into such a question, one instant and oft-quoted guideline is to step away from such ecology. To detach yourself from the pervasive digital technology chamber to evolve objective scrutiny, if not a proper solution. The reason for such a cautious note that stems across generations of our times is the question of 'mediation'. And what is mediation? The things you convey, the online content you favor, the memes you share, and the politics you vouch for, are all not tricking down through autonomous human beings but through a mediated one. In other words, the ones influenced by digital technology and a internet platform which became an innate part of everyday life. (The question of hierarchical understanding in terms of mediated and unmediated beings is an altogether important question that warrants considerable attention, so I will delve into it in the future). 

The question of mediation also comes with a caveat. The times which were not intruded by such mediation were seen and considered as lost glory. The taste of bitterness one ends up with, by juxtaposing the assumed unmediated glorious past with the ruptured, and even tormenting, mediated time of the present, is not uncanny today. When Trump mentioned 'make America great again', the boisterous spectators at the receiving end knew exactly for what they were rallied and invested in, whereas in India the 'secular past' is the hurdle Modi dispensation wants to do away with, so the euphemistic 'new India' deployed for their project of subversion. When a gawking collective remembrance, a nostalgia of reactionary politics, enacts itself in history, it is important to be aware that such scale of subversion spectacle emanated from the simple contestations over the minute affairs such as remembrance in the schema of history. 

Memory tends to be history's one of the unmistakable vehement contenders.  An act of remembrance is nothing but an ode to memory. The glean with which nostalgia employed in the authoritarian regimes, denoting their lost pride and impending animosity towards "historical wrongs" always comes short, in the nadir of such ramshackle politics, in not controlling or dissipating the memory of their subjects. The delegation of memory towards the human enterprise of progress and sustenance of equanimity is not much inquired into despite its imminence. But such larger contexts in terms of authoritarian regimes and political mobilisations can only be studied after acquiring a relative consonance of its nascent area of 'remembrance'. To come back to the question I posed before about mediation, this imprudent dichotomy, between mediated times and unmediated era, is one of the consequences of the reactionary gaze, I believe. When was a human ever acted without mediation? A formation of thought of a being and usual interactions amidst collectives in terms of varied stakes were all liable to mediation. Human collectivity plundered and prospered through mediation. Hence, this Protestant obsession with unmediated beings was inapt for the overall human enterprise.

Digital technology and the internet, with all their shortcomings, are not the culprit for the prevalence of mediation. But in this scheme of history, among all these mediated beings, what is the difference that sets apart the current generation from the past beings? The answer would be the question of 'act of remembrance' among the former. Those selfies you clicked, those map markings in your phone of places you visited, those stacked-up empty journal diaries of the past few years; what do they convey to you? The prompt birthday wishes of yours to friends after being notified by social media, used up inference of emojis to exhaustive usage of media with an aspiration to crystalize that moment in the digital landscape and being done with that 'memory' towards a period of stasis. Does our current generation even care to remember? Rather than catering that responsibility to their 'smart' gadgets? If a mundane act of remembrance seems such a formidable outlier of our times, then where will that lead us in terms of the question of 'identity'?

25/7/20

My thought patches - 01

I don't know where to begin, but I don't want to think about it anymore, as I am sure I can "begin" from anywhere. It is only a matter of time. I am writing this primarily as a self-serving cause. To help or assist or to look through for myself. I know I should do this. But I don't know when and how. It was always a matter of concern for me, "when", and "how". And I decided to take a plunge anyway. And in the process- regardless of very minimal effort as a visible text- I realised it's not always about your decision but whether you could tread that path as you wish, as I faced so many troubles to even reach this point. Yes, a mere 60 words. 


One of the aforesaid hurdles, as a coincident, when I opened my laptop, it irked me with five consistent, loud beep noises. It is a symptom of one of the functioning parts of the system malfunctioning (not a biggie). And I still hear the loud beep sound. But I am furthering ahead. Because I know it sounds like a reasonable excuse to procrastinate further, notwithstanding this writing process, but for most of the things in life. I would have, a few months ago, or surely I would have postponed this exercise citing the consistent noise my laptop exerts by a year ago. Because I was very much fond of the comfort I received from absolving hard tasks at hand. But the urge to get over that thought was the first trigger to put myself into words. And in a way this is a hard task, I think. 


If I have to be a believer of any sort, or if a need arises ahead that I have to be categorised as a believer of something, I would gleefully proclaim myself as a believer of words. Because nothing assured me like a pile of words did. It's not just about celebrated literature and myriad works of stalwarts over time, but also about a long simple worded email, we would've received from one of friends or partners. Two weeks ago I had an interesting conversation with one of my brothers, about the folly or foulness of the short messaging format of instant messaging apps and repercussions it lays on the everyday life of its extensive usage. More interesting enough, we recognised we faced a similar pattern of exchanges with people who we often engage with in terms of various realms of our daily life. That led to a primary consensus between us towards the understanding that human emotions are complex enough to ridicule any thought of fixating that it could be articulated convincingly through instant messaging platforms. As the latter is more suitable to "hurry" and "bury" conversations. The long format and laboriously worded sensible exchanges with our loved ones is the one best go-to place for a sensible relationship and closure.  This personal exchange of mine and the following consensus might sound quite obvious to many but we often forget that we still engage and respond to complex aspects of our emotions through these untenable mediums. 


I started this post an hour ago, without any clue of wherewithals. But looking through the writeup, though it is succinct, I felt relieved. As I am often convinced about wilfully opening up ourselves to words is one of the difficult task to bear with, at least for the period of nearing the end of it. I have nothing to offer, except what we take from each other. To quote Mario Vargas Llosa, the writer whom I'm fond of through his columns and interviews but haven't touched his single work yet, "I write because I'm unhappy". And I believe, to sum it again, in words, to gauge through these layers of uncertain times. And to reach somewhere, realising at times I did something about it or tried. As I said an hour ago, I have no plan or a scheme of things to sketch out a post, but I could fathom that cloak of emptiness to render myself into words, so it is only up to a near chance as it all takes but one step amidst sordidity and sanguinity. Apropos of nothing, my laptop still making the irky noise. 

5/4/20

புதுமைப்பித்தனின் "நியாயம்" சிறுகதைக் குறித்த ஒரு வாதம்- கட்டுரை

(புதுமைப்பித்தனின் ஒவ்வொரு சிறுகதைக் குறித்தும் பிரத்தியேகமான, சமூகவியல், அரசியல்-இயங்கியல், வளர்ச்சி கோட்பாடுகளின் அடிப்படையில் விவாதிப்பதென சிறு விழைவு. அதற்கான முதல் முயற்சி).



                     சிறுகதைக்கான இணைப்பு 


இந்த பதிவை எழுதுவதற்கு முன் சற்றேறக்குறைய ஒரு மணி நேரமாக இந்தியாவில் நடந்த முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து சுபகுணராஜன் எழுதிய பழைய வலைப்பதிவை தேடிக் கொண்டிருந்தேன். கிடைத்தப்பாடில்லை. நினைவில் இருந்ததிலிருந்து குறிப்பிட வேண்டுமென்றால், தமிழ் நாட்டில் ஜாதிய படிநிலை சார்ந்து மக்கள் பெரும்பிரிவாக முதன்முதலாக வகுக்கப்பட்டதை குறிப்பிட வேண்டும். தமிழ் நாட்டின் அரசியல் பண்பாட்டு தனித்தன்மைக்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. ஒரு சிறிய நிலப்பரப்பில்- வரலாறு, பாரம்பரிய விழுமியங்கள் மற்றும் சின்னங்களுக்கு அப்பாற்பட்டு- பல்வேறு சமூக குழுக்கள் "ஆண்ட பரம்பரை" பதாகையை கோருவதையும், சிலர் அதற்கு ஏகபோகம் கோருவதையும் எப்படி புரிந்துகொள்வது? சமூக குழுக்களின் அரசியல் கோரலால், போட்டியால், அதிகாரம் தமிழகத்தில் சமூகப் பரவலாக்கம் கண்டுள்ளது. வன்னியர்களின் இடஒதுக்கீடு கோரிக்கையை ஆட்சியில் இருந்த மு.கருணாநிதி ஏற்றுக் கொண்டு அமல்படுத்தும் போது, பிரத்யேக ஒதுக்கீடாக இல்லாமல் "மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்" எனும் புதிய வகைப்பாட்டில் பிற சமூகங்களையும் இணைத்தே அமலாக்கினார். ஒரு சமூகம் மற்ற சமூகங்கள் மீது நிகழ்த்தும் "சமூக நீதி சூறையாடல்" எனும் சம கால சொல்லாடல்கள் எதுவும் எழுவதற்கு  முன்பாகவே கருணாநிதியின் தேர்ந்த அரசியல் பிரக்ஞை அவரை மேற்சொன்ன விஷயத்தில் வழிநடத்தியுள்ளதாக புரிந்து கொள்ளலாம். இந்த சமூக நீதி சார்ந்த செயல்முறை அரசியல் லாவகம் (Dexterity), களத்தில் இருந்து அல்லாது வேறு எங்கிருந்து அவர் கிடைக்கப் பெற்றிருக்க முடியும்? சமூகத்தின் விளிம்புநிலையில் வைக்கப்பட்டு இருந்த இசை வேளாளர் சமூகத்தில் இருந்து வந்த கருணாநிதியின் செயல்திறன் இவ்வகையான நுணுக்கங்களுடன் அணுகக்கூடியதென்றால், தமிழகத்தில் பரந்து விரிந்த, ஆனால் பிற்படுத்தப்பட்ட நாடார் சமூகத்தில் இருந்து வந்த காமராஜரின் அரசியல் அதிகார பரவலாக்க சாத்தியப்பாடு என்னவாக இருந்தது?       






கடந்த ஒரு நூற்றாண்டில் நாடார்கள் குறித்த (அதிகாரப்பூர்வ அல்லது வேறு ஏதேனும்) பதிவுசெய்யப்பட்ட ஆவணங்கள் குறித்த எனது அறிவின் போதாமையோடே புதுமைப்பித்தனின் "நியாயம்" சிறுகதையை அணுக வேண்டியுள்ளது. மிகச் சிறியதாக கதை அமைந்திருப்பினும், நீதிக்கதை வடிவில், அது வைக்கும் விமர்சனம் கூரியது. கதையின் ஆரம்பத்திலேயே "கர்த்தருடைய நீதி வழங்கப் பெறுவதற்காக பாடு பட்டதனால், உலகத்தின் பென்ஷனை எதிர்பார்த்து இருக்கும்", தேவ இறக்க நாடார் அறிமுகமாகிறார். மேஜிஸ்ட்ரேட் பெஞ்சில் அமர்ந்திருக்கும் அவர் தன்முன் கூன்றிலேற்றப்படும் நபர்மீது திட்டவட்டமாக கட்டமைக்கப்பட்ட நீதியமைப்பின் சார்பில்  தீர்ப்பளிப்பவராக உள்ளார். நீதி, பங்கேர்ப்பின் வழியே வழங்குதல் மற்றும் பகிருதல், குறித்த முழுமையான சிந்தனை உதிக்காத, குறுகியே கருதுகோள்களின் வழியே "நீதி அளிக்கப்பட்டு" வந்த காலமது. நீதி என்பது பெற்றுக்கொள்வோரைக் கவனத்தில் எடுத்து கொள்ளாது,  வழங்குவோரின் அற-நிலைப் பாடுகளிலிருந்தே பாவிக்கப்பட்டு வந்த காலம் அது. அந்தக் காலகட்ட சமூகத்தின், மேனிலையாக்கதின் குறுஞ்சித்தரிப்பாக நிகழ்கிறது கதையில் வரும் தேவநாடாரின் பகுதி. 







நாடார்கள் என்றவுடன் பின்னிணைப்பாக கிறிஸ்தவம் என்ற பிம்பம் எப்போது உருவானது என தெரியவில்லை. ஆனால் நான் முதல் முதலாக நாடார்கள் குறித்து சமூகவியல் தளத்தில் தெரிந்து கொண்டது தமிழ் நாட்டில் கிறிஸ்துவ மதத்தினர் மத்தியில் தலித் கிறிஸ்துவ மக்களுக்கு எதிராக காட்டப்படும் பாகுபாடு குறித்த ஆய்விலிருந்து தான். கிறிஸ்துவத்துக்கு மதம் மாறியவர்களில் தமிழகத்தில் கணிசமான பகுதியினர் நாடார்கள். கேரளத்தில்- ஒரு சில பத்தாண்டுகள் முன்வரையிலும்- இன்னும் மோசமான நிலையிலேயே இருத்தி வைக்கப்பட்டு இருந்தனர். அங்கே கிறிஸ்துவமும் வாய்ப்புக்களுக்கான வாயிற்கதவாக அவர்களுக்கு இருக்கவில்லை. ஒரு மதத்தில் இருந்து -படிநிலை பாகுபாடு, ஒடுக்குமுறை, வாய்ப்பு மறுக்கப்படுதல் ஆகிய காரணங்களால்- இன்னொரு மதத்திற்கு இடம் பெயர்வதால் எத்தகைய நேர்மறை விளைவுகளை, வளர்ச்சியை எதிர்கொள்ளலாம் எனும் வாதத்திற்கு நாடார்களின் தரப்பு வலு சேர்க்கிறது. சமூக-பண்பாட்டு மூலதனத்தின் (social capital) வளர்ச்சியும், பெருக்கமும், பகிர்தலும் ஒட்டுமொத்த சமூகத்தையும் (community) பெருமளவில் சென்று சேர்ந்துள்ளதை கவனிக்க முடிகிறது. இந்திய சமூகத்தின் அடிப்படை பண்பான குறுகிய-வட்ட விசுவாசத்தை விட்டு வெளியேறி பரந்துபட்ட அடையாளத்தினுள் பொருத்திக்கொள்ளும் போக்கு நாடார்களின் சமூக விரிவாக்கம் குறித்த விவாதத்திலும் காண முடிகிறது. ஆனால் இத்தருணத்தில் தமிழகதின் முக்கியமான அரசியல் பங்கேற்ப்பாளரான தொ.திருமாவளவன் 2016ம் ஆண்டு, தலித் மக்களின் அரசியல் போராட்டம் குறித்து ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கது. தலித் மக்களின் பெரும் எண்ணிக்கையிலான மதமாறுதலால், நம்நாட்டின் வாக்கு அரசியல் பிரதிநிதித்துவ அமைப்பின் பின்னணியில், எவ்வாறு தங்களது அதிகார பேரத்தைக் குறைத்துக் கொண்டார்கள் எனப் பேசினார். அதே வேளையில், மதம் மாறிய தலித் மக்கள் போதிய சமூக அங்கீகாரத்தை பெற முடியாது "சிறுபான்மை" எனும் வட்டத்தினுள் சுருங்கி விடுவதைக் குறித்தும், தற்போதைய ஒன்றிய அரசின் வெறுப்பு அரசியலுக்கு இலக்காகுவதைக் குறித்தும் அங்கலாய்த்துக் கொண்டது பல காலம் நடைபெற்று வந்த இந்த விவாதத்தில் முக்கியமான இடையீடு.     







கதையின் மையத்தில் பால்ராஜின் விளித்தலான "விரியன் பாம்பு குட்டிகளே" என்பது கேலிக்குரிய உருவகமாக தெரிந்தாலும், அக்காலக்கட்டத்தில் ஆழ பதிந்து இருக்கும் ஒரு சாராரைக் குறித்த தப்பெண்ணத்தை (prejudice) வெளிப்படுத்துவதாகவே  உள்ளன. சுதந்திரத்திற்குமுன்பான காலகட்டத்தில், ஆங்கிலேயர்கள் (கோட்டை- கொத்தளம் எனும் ஸ்தூல நிலை தாண்டி)  மட்டுமின்றி அவர்களது மதிப்பீடுகளும்  ஆளுமை செலுத்தி வந்தன. குதிரை என்பது இங்கே ஆடம்பரத்தின், ஆளுகையின் சின்னமாக மட்டுமல்லாது சாதாரண மக்களின் மாண்பை விடவும் ஒரு படி மேலானதெனும் படிமமாக  கதையினுள் உருக்கொள்கிறது. மேனிலையாக்கம் எனும் ஏணியில் ஏறி அமர்ந்திருப்பினும், போலச்செய்தல் எனும் சமூக கடமையின் பாற்பட்டு கடுமையான தண்டனையை குற்றவாளிக்கு விதித்து, வீடு திரும்பியதும் "பரலோகத்தின் தேவ பிதாவை அனைவருக்குமான மன்னிப்பிற்காக" யாசிக்கிறார் தேவ இறக்கம் நாடார். எளிமையான உருவக சித்தரிப்புகளுடன், விமர்சன சுளிப்புடன் கதையை, சமூகத்தின் இருவேறு தளத்தின் நிகழ்வை ஒப்பீட்டு முடிக்கிறார் புதுமைப்பித்தன்.    

27/3/20

புதுமைப்பித்தனின் "ஆற்றங்கரைப் பிள்ளையார்" குறித்த ஒரு வாதம்

(புதுமைப்பித்தனின் ஒவ்வொரு சிறுகதைக் குறித்தும் பிரத்தியேகமான, சமூகவியல், அரசியல்-இயங்கியல், வளர்ச்சி கோட்பாடுகளின் அடிப்படையில் விவாதிப்பதென சிறு விழைவு. அதற்கான முதல் முயற்சி).  

                 சிறுகதையை வாசிக்க தொடுக  



ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு பிள்ளையார் சதுர்த்தியன்று சமூக வலைத்தளத்தில் அதன் பரவலாக்கம் குறித்த அழகியல் பூர்வமான காரணத்தை நான் பகிர்ந்ததால், நண்பர்கள் சிலர் கடிந்து கொண்டனர். பிள்ளையார், அதன் வடிவிலாகட்டும், உருவகமாகட்டும் சிறந்த படைப்பிற்குரிய பல அம்சங்களை கொண்டுள்ளது. ஏனோ அதன் மீதான வசீகரம் சிறு வயது முதல் இருந்து வந்ததற்கான காரணம் மெல்ல மெல்ல சமீப காலங்களில் தான் புலப்படுகிறது. யானைத் தலையும், மனித உடலும், சில இடங்களில் விகார தோற்றமும் பல இடங்களில் காட்சிபடுத்தப்படும் பாலகன் தோற்றமும் என கற்பனை வளமும் மரபின் வலிமையையும் ஒரு சேரத்தக்க இயங்கும் வகையில் அவ்வுருவம் தக்கவைக்கப்பட்டுள்ளது. இயற்கையின் விசாலத்தின், மாண்பின், அதன் வலிமையின் சான்றாக பொருட் கொள்ளத்தக்கதாக உள்ளது, யானை. ஒரு சமூகமாக கூட்டாக இயங்குவதிலும், அடிப்படை தேவைகளுக்காக பல தொலைவு பயணம் செய்வத்திலுமென ஆதி மனிதனுக்கான பல படிப்பினைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. சுருக்கமாக, இயற்கையின், அதன் படைபாக்கத்தின் அதிசயிக்கத்தக்க பிரம்மாண்ட உருவகம். மனிதனுக்கு விளங்கிக்கொள்ள முடியாத வியப்பாக இயற்கை எப்படி இருந்ததோ அதே போன்றதொரு விளைவை தான் யானையும் உண்டாக்கி இருக்கும் என விழைகிறேன். அதனைக் கைகொண்டால் இயற்கையின் ஒரு பேருருவை கைகொண்டதன் மகிழ்வை, பெரும் ஆற்றலை ஆட்கொண்டதன் உணர்வை மனிதன் அடையப்பெருவதோடு, தனது ஆதிக்கத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதிலும் ஆர்வம் பெறுவான். அவ்வாறான கைகொள்ளளின் ஆதார உருவகச் சான்று தான் பிள்ளையாரா? இன்றுவரை கோயில்களில் பல்வேறு காரணங்களுக்காக யானைகளை இருத்தி வைத்து இருக்கும் வழக்கத்தை மேலே குறிபிட்ட வாதத்தின் அடிப்படையில் விளக்கத் துணியலாமா?  





ஒரு விஷயத்தில் இருந்து அதன் இயல்பான அடுத்த படிநிலையை கடப்பதை "இயற்கை" என பெயர்க்காரணம் கொள்வதும் மனிதனின் இன்னொரு வகை ஆதிக்கம் தானா என ஐயம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. இந்த அர்த்தப்படுத்திகொள்ளுதலின் சிக்கலே  "வளர்ச்சி" எனும் கருத்தாக்கத்தை இயற்கையுடன் ஐக்கியபடுத்திக் கொள்வதுதான். இந்த சிந்தனை, பொருளியல் வாதத்திற்கு பிறகான, சமீபத்திய வரவாக இருந்தாலும் இத்தகைய பொருளியல் அடிப்படியிலான படிநிலை வாதம் சமூகத்தை எந்தளவுக்கு வழிநடத்தியுள்ளது என்பதை ஆராய ஆர்வம் கூடாமல் இல்லை. தொடர்ந்து நகர்வது தான் "இயற்கை" எனில் ஏன் இயற்கைக்கு மீள் வருகை புரிய வேண்டுமென உலகம் முழுவதுமுள்ள சூழலியல் செயல்பாட்டாளர்கள் அறை கூவுகிறார்கள்? இயற்கை குறித்த இருமைவாதங்களான ஸ்தூலத் தன்மை மற்றும் நெகிழ்வுப்போக்கில் எது பொருட்கொள்ளத்தக்கது? ஏனெனில், ஒரு கணம் சிந்தித்து பார்த்தால் சற்றேறக்குறைய கடந்த ஒரு நூற்றாண்டில், உலகத்தை மாபெரும் ஆதிக்கம் செலுத்தியது, "மாற்றம் ஒன்றே மாறாதது" எனும் இயங்கியல் வாதம் தான். இயற்கை மீதான இதன் தாக்கம் சொல்லில் அடங்காதெனினும் அதேவேளையில் மானிட சமூகத்தை ஆற்றுப்படுத்தும் நோக்கில் மனித நம்பிக்கைகள் ஸ்தூல உருவம் கொண்டனவா? இல்லையெனில் நகரத்தை தாண்டியுள்ள சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து அழித்து கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்புகளில், நகர விளிம்பிற்கு துரத்தப்பட்ட மக்களின் பங்கேற்ப்புடன், கொண்டாடப்படும் பிள்ளையார் சதுர்த்தியை எப்படி புரிந்துகொள்வது?   




புதுமைப்பித்தனை படிப்பது ஒரேநேரத்தில் உற்சாகமிக்க செயல்பாடாகவும், தீவிர பயிற்சியாகவும் இருக்கிறது. "ஆற்றங்கரை பிள்ளையார்" எனும் கதை, உள்ளபடியே சிறார்க்கதை தோற்றத்துடன்(Parable) கவனத்தில் கொள்ள வேண்டிய மிகப்பெரும் கேள்விகளை தன்னுள் கொண்டுள்ளது. தத்துவ தேடலுக்குரியதாகவும், சமகால நடப்புகள் தொடர்பான விவாதப் புள்ளிகளுடனும் அமைந்துள்ளது.  தமிழ் சிறுகதை உலகை வடிவமைத்தவரும், தீர்மானித்தவருமான புதுமைப்பித்தனின் ஒவ்வொரு கதையும் தனித்தன்மையும், சிந்தனைமரபின் நீட்சியையும் பூண்டுள்ளன.




காலம் குறித்த தரநிர்ணயப் படுத்துதலை எள்ளிநகையாடி, "கி.மு.'க்கள் எட்டாத சரித்திர அடிவானம்" என தொடங்கும் கதை, பிள்ளையார் உருவகத்தை முன்வைத்து சரித்திர பிரக்ஞையுடன் சமயம்-அரசு-ஆதிக்கம்-பன்முக பண்பாட்டுச்சூழல்-படிநிலை மாற்றம் குறித்த பெரும் விவாதத்தை நடத்த முன்வருகிறது, அதுவும் எளிமையான சிறார் கதைக்கே உரிய மொழியுடன். சமயச் சார்பான மொழி அவர் வாழ்ந்த காலத்தில் வழமையானதொரு போக்குதான் என "சந்தேகத்தின் பலனை" அளிக்க முன்வந்து வாசிக்க துவங்கினாலும், அப்படியானதொரு சார்பின்றி கதையை நகர்த்தி மேலும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்குகிறார். நாகரீகத்தை நதியுடன் ஒப்பிடுவது, சமயத்தை மரத்தோடு ஒப்பிடுவது, சமூகத்தை மேடையாக விழைவது(நாமனைவரும் நடிகர்கள் எனும் விளக்கத்திற்காகவா?), பெரும் மாற்றங்களை, படையெடுப்புகளை இயற்கை பேரிடருடன் ஒப்பிடுவது, இஸ்லாமிய, ஆங்கிலேய படையெடுப்பை முறையே ரோஜா மற்றும் விவிலியத்துடன் ஒப்பிடுவது என ஆர்வத்தை தூண்டும் விவாதப் புள்ளிகள் ஆங்காங்கே விரவி கிடக்கின்றன. சில தரப்புகளை மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் நிலையில், நேரடியாக கதையை படிப்பதனால் மட்டுமே முழுமையுணர்வை சென்று சேரவும், இவ்விவாதத்தில் பங்களிக்கவும் முடியும் எனக் கருதுகிறேன். (கதைக்கான இணைய சுட்டி






அரச மரம் என்பது "ராஜ தர்மம்" எனவும், வேப்ப மரம் "சமய தர்மம்" எனக் கதையின் ஆரம்பத்தில் வரும் கூற்று விளக்கத்திற்கான தேவையின்றியே அமைந்திருகிறது. குறிப்பாக நம் நாட்டில், ஆரம்பத்தில் இருந்தே  இவ்விரண்டுக்குமிடையே நிலவும் இறுக்கமான பிடிப்பு அனைவரும் அறிந்ததே. சமூகத்தின் மீதான, அதன் பிரதிநிதியான தனிமனிதன் மீதான இவற்றின் சுமையே புதுமைப்பித்தனின் பிரதான கவலையாக தொனிக்கிறது. வேப்ப மரத்தின் வேர்கள் பிள்ளையாரின் வயிற்றை சுற்றியும், கால்கள் எங்கும் நகரமுடியா வண்ணம் பற்றிக்கொண்ட அரச மரத்தின் வேர்களும், இவ்விரண்டிற்கும் இடையே மாட்டிக் கொண்ட பிள்ளையாரின் தலையுமென அதை வெளிப்படுத்திச் செல்கிறார். இத்தகைய "கஷ்ட காலம்" வருவதற்கு முன் இரு மரங்களின் செழிப்பான வளர்ச்சியினால், அதன் நிழலின் குளிர்ச்சியில் பிள்ளையார் இன்பித்து இருந்துள்ளதாக கதை குறிப்பிடும் காலகட்டம் எதுவாக இருக்கும் எனும் கேள்விக்கு ஒரு தெளிவு கிடைத்தபாடில்லை. நவீனத்துவரான புதுமைப்பித்தன், மதங்களற்ற சமூகத்திலும், தனி மனித முதன்மை வாதத்திலும் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்திருக்க கூடும் என்னும் அதே வேளையில் சமயங்களின் தாக்கத்திலும் தெளிவு கொண்டவராகவே இருக்கிறார். 




கதையில் நிகழும் இஸ்லாமிய வருகையை, "தாடி வைத்த, உடைவாள் தரித்த கைலிக் கட்டிய கிழட்டு மனிதன்" வருகையுடன் கட்டியம் கொள்கிறார். இறந்த பசுமாட்டின் தோலும், சேமித்து வைக்கப்பட்ட இறைச்சியுமென, மாற்று பண்பாட்டு "வெறித்தலுக்குறிய" கூறுகளுடன் சித்தரிப்புகள் கதையில் வெளிப்படுகின்றன.  எதிர்மறை எண்ணங்களினால் வெளிப்பட்ட படிமங்கள் என இவற்றை புறந்தள்ளிவிட எந்த நியாயமும் இருப்பதாக தெரியவில்லை. "உடைவாள்" குறித்த பிம்பம், வன்முறை வெறியாட்டத்தையும், படையெடுப்புகளையும் சுட்டுவதாகவே உள்ளன. ஒவ்வொரு குழுமத்துக்கும் இடையே உள்ள தனித்தன்மையைச் சுட்டும் அதே தருணத்தில் வகைமாதிரிகளை கட்டமைக்கும் எந்த முயற்சியும் கதையில் நிகழவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 20ம் நூற்றாண்டின் முதல் பாதியில் நிலவிய அரசியல் சரிகளுக்கு (Political Correctness) ஏற்ப அத்தகைய சித்தரிப்புகள் ஒற்றுப்போய் இருப்பதற்கு வாய்ப்பிருந்தும் புதுமைப்பித்தன் அவ்வாறு முயலவில்லை என்பது வியப்பிற்குரியது. முகலாய, துருக்கிய இஸ்லாமியர்களின் வருகையை மட்டுமின்றி "மேற்கு சமுத்திரத்தின் இடரால்" ஏற்பட்ட வெள்ளையர்களின் வருகையையும் எளிமையான படிமங்களோடே அணுகுகிறார். எ.கா: "வெண்மையான, தங்க கம்பிகள் போன்ற தலைமுடியுடன், தாடியும், நீண்ட அங்கியுமாய், தோல் பையினுள் வாளும், கருப்பு அட்டை போட்ட ஒரு பெரிய புத்தகமும், சிலுவையும் வைத்திருந்தான்".  




மேற்குறிப்பிட்ட உருவகங்களை தாண்டி பண்பாட்டுக் குறிப்புகளே பெரும் ஆர்வத்தை மூட்டுகின்றன. திடீரென ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் மேடையை வந்தடைந்த "தாடிவைத்த கைலி உடுத்தியக் கிழவன்" மாமிசத்தை மட்டும் கொண்டு வரவில்லை, ஒரு ரோஜா மலரையும் கொண்டு வருகிறான். மாட்டு தோலை "பிள்ளையாருக்கு" போற்றியதோடு நில்லாமல் அருகிலேயே கொண்டு வந்த ரோஜாவை நட்டு இருபெரும் மரங்களுக்கு இடையே ஒரு சிறு செடியையும் வளர்க்கிறான். மேடையில், மரங்களுக்கிடையில் அழகாக வளர்கிறது ரோஜா செடி. 




சிறுவயதில் என் வீட்டின் அருகாமையில் வசித்துவந்த சாமிகிரி சித்தர் என்பவர், ஒவ்வொரு மாலையும் விளையாட்டு திடலில் எங்களைக் கடந்து போகும்போது பத்தடி தூரத்திலிருந்தே சுண்டி இழுக்கும் விதமாக அத்தர் அணிந்து இருந்ததை நினைவிற்கு கொண்டு வராமல் கதையின் இந்த பகுதியைக் கடந்து வர முடியவில்லை.  கதையில் வரும் ஒரு வரி, "மரக் கன்றுகள், செடியின் பரப்பை தாண்டி வேறு புல்பூண்டுகளும் முளைத்தன",ஒட்டுமொத்த சாரத்தையும் விவரித்து விடுகின்றது.       




புத்தரும், ஜீனரும் மற்றும் சங்கரன், ராமானுஜன், மத்வன் என பிள்ளையாரின் நிலை கண்டு "மேடைக்கு" பலரும் உதவ முன்வந்தும் நிலைமை சீரான பாடில்லை. அதிலும் பிள்ளையாரின் வருத்தத்திற்கும், கடும் சொற்களுக்கும் ஆளான புத்தரின் நிலையோ சோகத்திற்கு இடமானது. நிலைப் பெற்று இருக்கும் இடத்தில் மாற்றம் ஏற்படும் போது அது "ரோஜாக்களை" மற்றுமல்ல "முட்களையும்" சேர்த்தே வாரி வரும். சமகால வாதக்களங்கள் பல இத்தகைய நுணுக்கங்களுக்கு இடமளிப்பது இல்லை. பண்பாடு எப்போதும் இருமைவாதங்களின் கொதிகலனாகவே இருந்து வந்திருக்கின்றன. எவர் நல்லவர், யார் தீயவர், எது நல்லது, எது கெட்டது, நல்ல இஸ்லாமியர், தீய/தவறான இஸ்லாமியர் என வரையறைகளை விதிக்கும் கருவியாக பண்பாடு இருப்பதை புதுமைப்பித்தனும் கவனத்தில் கொண்டு இருப்பது அவரது மேதமையைக் காட்டுகிறது. 




இறுதியாக சமகாலத் தன்மையுடன் விளங்கும் சில விவாதப் புள்ளிகளுடன் என் தரப்பை நிறைவு செய்கிறேன். ஆங்கிலேயர்கள் குறித்த பல்வேறு விமர்சன சொல்லாடல்கள் நம்மிடையே புழங்கிவந்தாலும், சிறு அளவிலேனும் ஆக்கப்பூர்வ அணிந்துரைகள், ஆதரவு மொழிகள் இல்லாமல் இல்லை. "கருப்பு தோல் அட்டைப் போட்ட ஒரு பெரிய புத்தகம்" எனும் உருவகத்தின் ஊடே புதுமைப்பித்தன் மேற்குறிப்பிட்ட இரண்டாம் தரப்பின்பால் கவனத்தைக் கோருகிறாரா என ஐயப்பட தோன்றுகிறது. ஏனெனில் காலனிய அரசாங்கத்தின் கல்வி பரவலாக்கத்தால் மிகப்பெரும் பலனை, அறிவு விரிவாக்கத்தை தமிழகம் அடைந்தது.  இன-மைய-தேசியம், அரசியல் தளத்தில் வலுப்பெற்று வரும் இக்காலத்தில் அக்குழுமச் சார்பினர் காலனிய அரசாங்கத்தின் நேர்மறை விளைவுகளை முன்வைப்பவர்களை சிறுமைப் படுத்தும் போக்கு வளர்ந்து வருவதும் இத்தைகைய விவாதத்திற்கு நியாயம் சேர்க்கிறது. கதையின் இறுதி அத்தியாத்தில், பல தரப்பட்ட மக்கள் குழுமி "மேடையில்" எது, எப்படி இருக்க வேண்டும் எனும் சச்சரவுகளில் ஈடுபட்டு வரும் தருணத்தில்,  நாம்- இனி வரும் காலங்களில்- வாழ்நாள் தோறும் முட்டி மோதி ஒருமித்த, இணக்கமான புரிதலுக்கு வழிகோல தவிக்கக் கூடிய ஒரு கேள்வியை கேட்கிறார் புதுமைப்பித்தன், "மரத்திற்கு பிள்ளையாரா, பிள்ளையாருக்கு மரமா?".                   

20/3/20

"அசுரவதம் இனி நடக்காது" கட்டுரை குறித்த இல. பூவிழியின் பார்வை.

விவாதத்திற்கு இடம்பெற்ற கட்டுரையின் சுட்டி: தொடுகை 




பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் அவர்களது கட்டுரை உயிர்மெய் வலைதளத்தில் நான் வாசிக்கப்பெற்றேன்.  அவர் தனது சிறு வயதில் தான் ஒரு சுவற்றில் கண்ட வாசகம் ஒன்றினை நினைவு வைத்து அதன் விளக்கமறிந்து அதனைப் போலவே தனது கட்டுரையின் பெயரையும் அமைத்துக்கொண்டார். அந்த வாசகம், “வாலி வதம் இனி நடக்காது”.

அவர் தனது கட்டுரையில் விளக்கியது அசுரன் திரைப்படம் மற்றும் அதன் கலாசாரப் பிரதியின் அர்த்த தளங்கள்.
கலாச்சாரப் பிரதி என்பது நாம் பின்பற்றி வந்த கலாச்சாரத்தின் எடுத்துக்காட்டாக மற்றும் அதன் அர்த்த தளங்கள் என்பது பலவகை அர்த்தங்கள் நிறைந்த தளமாக உள்ளது. 


நான் வாசித்ததில் அவர் முதலில் புராண இதிகாசங்களைப் பற்றி கூறுகிறார். மகாபாரதம் மற்றும் இராமாயணம் ஆகிய புராண இதிகாசங்கள் தேவர்கள் மற்றும் அரக்கர்களை மையமாக வைத்து உருவாக்கப் பெற்றவை. இதில் தேவர்களே நன்மை நிறைந்தவர்கள் எனவும் அசுரர்கள் அரக்க குணம் அதாவது தீய குணம் படைத்தவர்கள் என்னும் கருத்து அந்தக் காலத்தில் இருந்தே நிலவி வந்துள்ளது.

அதற்கு எதிர்கதையாடல் கூறும் விதமாக பல திரைப்படங்கள் உருவாக்கப்பட்டதை பட்டியலிடுகிறார். கதையாடல் என்பது ஒரு கூற்றின் ஒரு முகத்தை கூறுவது. அதுவே எதிர்கதையாடல் என்பது கூற்றின் மறு தரப்பை எடுத்து காட்டுவது. அவ்வாறு எதிர்கதையாடல் என கூறுபடுவது அரக்கர்கள் என சித்தரிக்கப்படும் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு எழுப்பப்படும் குரல். அசுரன் திரைப்படம் சாகச நாயகனைக் கொண்டு யதார்த்த மற்றும் தார்மீக கதையாடலை கொண்டுள்ள விதத்தை போற்றுகிறார்.

பொதுவாக எதிர்கதையாடல் சொல்லும் திரைப்படத்தின் முடிவுகள் சோகம் நிறைந்ததாகவே முடிகபெற்று வந்தது. எடுத்துகாட்டாக சில திரைப்படங்களின் பெயரை பேராசிரியர் பட்டியலிடுகிறார். என்னளவில், அவ்வாறு முடியும் முடிவுகளை தகர்த்தெறிந்த படமாகவே அசுரன் திகழ்கிறது என்பது கட்டுரையின் உயிர்ப்பு.


***
விவாத மரபை ஊக்குவிக்கும் விதமாக தனிப்பட்ட தளத்தில் நடந்த உரையாடலை இங்கே பதிவிட்டுள்ளேன். 

கட்டுரையாளர் உயிர்தொழில்நுட்பம் மூன்றாமாண்டு படிக்கிறார். சமூக பண்பாட்டு நிகழ்வொன்ற்றைக் குறித்த அவரின் முதல் பங்களிப்பு இது. 

24/10/19

Who’s belling the cat?



If the BJP hasn’t started to worry about Haryana and Maharashtra election results yet, they have to, henceforth at least. Ascribing from the state, from where the political social coalition strategy originated, which the BJP trying to mimic laboriously on their present electoral struggle across various states, I am intrigued by the ingraining social phenomenon and felt necessary to point out that it’s now or never for the BJP to witness the tip of the iceberg of the downfall are they inching towards. The normative discourse on the social coalition is one of the long-held academic dialogue on the study of polity and Political Sociology and its impacts are also widely assessed. As I stated before, Tamil Nadu (TN) is the classic case for the BJP’s current electoral playbook. But it missed the quintessential perspective, about the former’s functional narrative, due to its lack of vision between means and ends.





                                       





TN, a state which is excelling in all health and wealth indicators and achieved significant progress in economic growth and resource distribution, gathered its political milieu through tumultuous years of demonstrations and hard negotiations of communities with establishments. Seen through its social prism, it is the state peopled mostly by backward communities but the power centers were structured around and positioned by socially, and (though it’s inundated) economically forwarded communities in the initial years of the republic. This power disparity is one of the significant exacerbating factors which fueled the rise of subaltern politics in the state which is not given due regard often, if not acknowledged. Social wealth distribution and economic expansion through a cultural construct (a Tamil identity proposition) viz-a-viz inclusivity with secular credentials, is where the BJP lost its trope.




Inclusivity and prosperity have a normative semblance, which is highly regarded in the ‘common sense’ (Gramscian) of subaltern communities. An aversion to it in the Northern part of India stems from its historical accounts. The accumulation of mistrust between communities has been constantly propelled, as the political establishments shied away from reconciliation, thanks to the partition crisis. The BJP and its political predecessors always held a strong belief in cashing out on this emotive exchequer. But after making victorious strides entrenching themselves militantly in the ’90s, only they realized their contingency in political consistency. 

Now they’ve lucked out by Modi for the past five years, after a decade of humiliating defeats, through his expediency in stitching social coalitions and placing the helm with the socially burden-less actor. It worked out quite well, until recently, across various states attributing coherence in negotiations through various political actors, but after the emergence of distraught among social coalitions about the lopsided consensus- despite the means- in the ends. Glaring attributions can be proposed towards the increasing agitation of social elites against the coalition of subalterns, in and out of the establishment. And Tamil Nadu provides a walk away from this binary constraints. Though the state's electoral politics and coalitions structured around placing the helm at influential but also socially less burdened leader/actor, the progressive ends, not just the means, serves the vitality and supremacy to the argument, in this case, social coalition. After long due although TN has awakened from the slumber, after realizing it’s restrainedness of the recent political reality, the coalition entrenchments hasn't weakened. 



The BJP’s lack of progressive ends, let alone the posture and optics, draining out its electoral strategy if not obliterating its drawn lines of negotiations. TN’s Karunanidhi and Jayalalitha are from both corners of the social spectrum, the former is from the most oppressed community and the latter belongs to socially elite section, held power not only by relying on coalitions but through their progressive political measures and means of distribution with the persuasion on inclusive ideals. If BJP didn’t smell the fact that their othering out strategy might be numbered, it won’t be long before ‘Gramscian’ consciousness starts ticking in subalterns. So the sailing on the enmity centered coalition needs an immediate corrective and back to the drawing board measures to strike an effective consensus among coalition, forsaking the ruling party’s polemical dreams and myths.

14/7/19

No more Blinking - a short note on India & China equation in terms of BRI


Credit: MR edition


China's OBOR (One belt and One Road) initiative has puzzled India from the beginning. Not just the scale of China's ambition but also the consequences of it. In a way, it shows the unpreparedness of India despite being a contentious ally for a long time. The lack of vision of the South Asian giant persuaded its political class to blink at the Silk road initiative at the beginning (till the commencement of the first Belt and Road Forum). But very soon, in a rush India came up with a game-plan, a reactionary move and no match in the intent, to counter China hastily which turned out to expose the resourceless-ness of the former. As of now one way or another, it is catching up the global attention after the tragic "debt-trap" episode of Hambantota port, which had fallen into the arms of Chinese firms.

Trade and infrastructure funding, a masquerader for strategic investments, is not a new "specter" haunting South Asian geopolitical space, both the USA and Japan played an important role from the beginning of the cold war.  But the trust deficit enjoyed by China makes way for the perplexity among Indian policymakers. Since the 'opening-up' in 1979 China progressed gradually to today's stature with a humongous Forex vault and adequate funding infrastructures, showing an exit for the former dominant forces. The current nationalistic fervor arousing in India, due to its ruling elite and right-wing consolidation, has a logical resonance with the Xi Jinping's "Asia for Asians" rhetoric. But then why India has to align with Western democracies in opposing China?

1962 war defeat, world's largest border dispute, lack of respect for Indian territorial sovereignty and integrity by claiming parts of North eastern India and supporting extremist groups on the border areas are some of the major fault-lines.

To ask this question is nothing short of showing disregard for history, as a foreign policy cannot be weaved from the vacuum. The 1962 war defeat, the world's largest border dispute, lack of respect for Indian territorial sovereignty and integrity by claiming parts of Northeastern India and supporting extremist groups in the border areas are some of the major fault-lines India shares with the world's second-largest economy. 

India's reluctance stems from this history and inconsistencies in confidence-building measures from China. As of date, India faces the largest trade deficit with china among its trading partners. With its growing economy and a big chunk of demographic dividend, India aspires to be a regional power. But the strong footprints of Chinese, in terms of investment and naval presence, in the Indian Ocean region and South Asian neighborhood feeds the suspicion and growing antagonism in India, adding to the baggage of the complex relationship. The urge of replacing US dominance in the Asian power paradigm is evident from the intense diplomatic efforts put forth by Beijing in the roll-out of BRI (Belt and Road initiative). The continuous persuasion to convince New Delhi in terms of strategic implications of the connectivity funding ended in failure and the reason for it proves to be detrimental. One of the major components of the scheme, CPEC (China Pakistan Economic Corridor) faces huge backlash from India as it directly infringes her land sovereignty i.e. POK (Pakistan Occupied Kashmir, ceded some space to China). So, until the border dispute is resolved, there is no way forward for the acknowledgment or appreciation of the whole initiative from the Indian side. 

In a path to become Superpower, China's indifference towards India's concerns serves to be the raison d'etre for the latter's alignment with Western liberal forces, and -unlike Beijing- to work out for the alternatives with more flexibility and transparency. This presents a glimpse of complexity in the Indian foreign policy-making, standing distinctly aside from the narratives of mainstream dichotomous echo-chambers. For the longer term and larger good, Beijing has to see the reality and get resolved to remove the constraints with New Delhi and relax the thorny relationship with some definitive measures.

22/12/18

Mystic leap






He cannot relieve himself from

the murmurs of rainy-breeze

Fiery predator’s sharpened teeth

consistently collapsed his balance

Dwelled deep into the isolated acidic ocean

he came out and walked across

stricken by awe in witnessing the steady meditation of toads

inside the dark ruptures of rocks around the tainted pond.




For us there’s nothing else but to be astonished 

about the in-desiccation of his love even in the last petal of the

last flower bloomed amidst the blackened shadow

in his unsettled sky.













(என்னுடைய கவிதை "புனைவன்பு"யின் ஆங்கில மொழிப் பெயர்ப்பு)

28/12/17

சிம்மாசனங்கள் - சிறுகதை




யாருமற்ற வகுப்பறையில் காலியாக இருந்தது ஆசிரியரின் நாற்காலி. அமைதி அடர்த்தியாக பரவி இருந்த அன்றைய காலை அவனுக்குள் ஒரு சலனத்தை ஏற்படுத்தியது. “ஏன் இன்னும் ஒருத்தரையும் காணோம்”, தனக்கு தானே பேசிக்கொண்டு வகுப்பறைக்கு வெளியே வராண்டாவில் இருந்து பள்ளியை சுற்றி அமைந்திருந்த தீப்பெட்டிக் கட்டுகளைப் போல சிதறிக் கிடந்த வீடுகளைப் பார்த்தான். புழுக்கம் நிறைந்த இறுக்கமான வீடுகள். “இன்னும் இவங்களுக்கு விடியலை போல” கடிகாரத்தை பார்த்து முனகிய அடுத்த நொடி, வளாக சுற்றுச்சுவரின் இடது புறத்தில் இருந்த மஞ்சள் நிற தகரக் கூரை வீட்டில் இருந்து கணவன் மனைவி இருவர் சத்தமாக சண்டை இட்டுக்கொண்டு வீதிக்கு வந்தனர். “என்னைக் கேக்காம செய்வியா...செய்வியா, ஏன் செஞ்ச சொல்லு?”, கணீர் கணீரென மனைவியை அறைந்து கொண்டிருந்தார் கணவர். வீறிட்டு அழுதவாறே கூச்சலிட்டதால் மனைவி என்ன சொல்கிறாள் என விக்னேஷிற்கு கேட்கவில்லை. சற்று தள்ளி சென்று உற்று நோக்கினான். “ரெண்டு பேரையும் எங்கயோ பார்த்த மாதிரியே இருக்கே”, அவனது யோசனை அவனுக்கே தொந்தரவாக இருந்தது.



விக்னேஷிற்கு ஒரு தங்கை. பெயர் தேவி. வீட்டிற்கு அருகிலேயே உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். ஒவ்வொரு நாளும் அரக்கப் பறக்க இவன் கிளம்பிய பிறகே அம்மா தங்கையின் பக்கம் திரும்புவாள். ‘கிர்ர் கிர்’ எனும் குட்டி குறட்டை சத்தம் போன்ற அவளது மூச்சொலி , வயோதிக நகரப் பேருந்து கக்கிச் செல்லும் கரும்புகை போன்ற பொறாமையை அவனுள் பரவச் செய்யும். நான்கு வருடம் பிந்தி சென்று வாழவேண்டும் எனும் ஆசை துளிர்க்கும். ஸ்கூல் பேக்கை தோளில் மாட்டி அம்மாவிற்கு டாட்டா சொல்லும்போது, தேவியின் நிம்மதியான தூக்கத்தைப் பார்க்க அவ்வளவு ஆசையாய் இருக்கும். அம்மா நகர்ந்த சமயம், சடுதியில் அவளை எழுப்பிவிட்டு ஓடி வந்து விடுவான்.


தூக்கம், ஆகப் பெரும் சந்தோசம். அதைவிட இந்த உலகத்தில் பெரிய தேவை என்ன இருக்க முடியும்?. விக்னேஷைப் பொறுத்தவரை மனிதனின் மகிழ்ச்சிகரமான தருணம், ஏன் பொக்கிஷம் தூக்கம் தான். அவன் தன் நிஜ வாழ்வின் சுவாரசியத்தை மிஞ்சும் அதி அற்புதமான பல வாழ்கையை கனவுலகில் தான் வாழ்ந்து இருக்கிறான். பல விநோதங்களை கண்டடைந்தும் இருக்கிறான். பெண்கள் அனைவரும் சிகரெட் பிடிப்பது அப்படியான விநோதங்களில் ஒன்று. ஆனால் நேற்றைய இரவு கடுமையான ஒன்று. அவனால் தூங்கவே முடியவில்லை. நடுயிரவிற்கு பிறகு அத்தனை சத்தம். திடீரென அப்பாவும் அம்மாவும் எதுக்கு இப்படி சண்டை போட்டு கொள்கிறார்கள், என சோம்பியவாரே எழுந்தான். கூச்சல் அதிகமாக அதிகமாக இவனுள் பயம் திரண்டது. “போலாமா வேணாமா”, என யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் தங்கையை பார்த்தான். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.




மணி ஆறு ஆகி இருந்தது. “இத்தன புஸ்தகங்களை எதுக்குப்பா தூக்கிட்டு போற, நாங்கெல்லாம் படிக்கறப்போ ஒரு நோட், ரெண்டு நோட்டு தான் எடுத்துட்டு போவோம். இவ்ளோ சுமைய தூக்கிட்டு போனா எப்டி படிக்க தோணும்”, பஸ் ஸ்டாப்பில் ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்கவர் இவனிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பஸ் வந்துவிட்டது. ஏறி உட்கார்ந்ததும் திரும்பி பார்த்தான், இவனோடு சேர்த்து மூன்று பேர் தான் இருந்தார்கள். முதல் பேருந்து என்பதால் சற்று நேரம் நின்றது. வழக்கமாக ஆறே முக்காலுக்கு தான் ஏறுவான், எட்டு மணிக்கு பள்ளி சென்று சேர சரியாக இருக்கும். அன்று பத்தாம் வகுப்பிற்கு சிறப்பு வகுப்புகள் ஏதும் இருந்தால் மாணவர்கள் வருவார்கள் என நம்பிக்கை கொண்டான்.



விக்னேஷ் தன் வீட்டில் இருந்து இரு பேருந்துகள் மாறி தான் தினமும் பள்ளிக்கு சென்று வருகிறான். அடுத்த ஆண்டு பொது பரீட்சை என்பாதால் பள்ளியை மாற்றுவதில் அவனது பெற்றோருக்கும்ஆசிரியர்களுக்கும் உவப்பு இல்லை. பேருந்து நெரிசலில் தப்பி பிழைத்து மாலை வீடு திரும்பிய நொடியில் இருந்தே புகார் பட்டியல் வாசிக்க ஆரம்பித்துவிடுவான். கால் வலிக்கிது, சோர்வாக இருக்கிறது, பஸ்ஸில் சென்று வர சிரமமாக இருக்கிறது. அவனது புகார்கள் எதுவும் கண்டுகொள்ள படவில்லை. அனைத்திற்குமான ஒரே பதில், “பப்ளிக் முடியட்டும் அப்புறம் மாத்திரலாம்”.



என்றைக்குமில்லாது கூட்டமில்லாத பஸ் ஒன்றிற்குள் இருப்பது அவனுக்கு வித்தியாசமாக இருந்தது. பக்கவாட்டிலும், வெளிப்புறத்திலும் ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ போஸ்டர்கள் நிரம்பி வழிந்தன. ரேடியோவில் ‘சூரியோதயம்’ ஒலிக்க ஆரம்பித்தது, பஸ் கிளம்பி இருந்தது.



“இப்ப எல்லாம் வர வர மரியாதையே இல்லாம போயிட்டிருக்கு, என்ன நெனைச்சுட்டு இருக்க மனசுல”


“அப்டி என்ன குறைஞ்சு போச்சு, நீங்களே சாப்பாடு போட்டுகொங்கனு தான சொன்னேன், அதுக்கு அடிபீங்களா?”


“ஆமாடீ,அதென்ன நீ சொல்றது, ஒரு மனுஷன் அல்லோலப்பட்டு வீட்டுக்கு வந்தா இப்டிதான் நடந்துக்குவியா?”


“இந்த ஒரு முறை தான சொன்னேன், என்னை ஏன் இப்டி பாடாப்படுத்துறீங்க...அய்யோ ஆண்டவா”


“ஆமாடி இப்ப கால் மேல கால் போட்டுட்டு எனக்கு ஆர்டர் போடுவ, நாளைக்கு என் தலை மேல ஏறி உக்காருவ, அப்றம் நான் உனக்கு சேவகம் பண்ணனுமா?” 

சண்டை, அழுகை, கதறல், ஆத்திரம். இடையில் இரண்டு முறை அம்மாவிற்கு அறையும் விழுந்து இருந்தது. அப்பா இன்னும் பொருமிக்கொண்டு இருந்தார். கொட்டக் கொட்ட அதை பார்த்துக்கொண்டு இருக்கும்போதே தங்கை எழுந்து அழத் தொடங்கி விட்டிருந்தால். அந்நொடி வீடே கண்றாவியாக இருந்தது. எங்காவது போய் விடலாமா எனத் தோன்றியது.


விக்னேஷின் அப்பா தாசில்தார் ஆபிஸில் வேலைப் பார்கிறார். என்ன வேலை எவ்வளவு சம்பளம், எதையும் தெளிவாக சொல்ல மாட்டார். தாசில்தாரரிடம் பெற வேண்டிய ஆவணங்கள் குறித்துப் பலரும் வீட்டிற்கு வந்து அப்பாவை பார்ப்பார்கள். சிலர் நேரம் காலம் தெரியாது பேசிக் கொண்டிருப்பார்கள். டீ, பக்கோடா என இடையிடையே அவருடைய அறைக்கு கொண்டு போய்க் கொடுக்க வேண்டும். சிரித்தவாறே, “அதெல்லாம் பண்ணிடலாம், சீக்கிரமே முடிச்சி கொடுத்தரலாம்” என சொல்லிக் கொண்டிருப்பார் அப்பா. ஒவ்வொரு நாள் இரவும் மேலதிகாரிகளை திட்டியே சாப்பிடத் தொடங்குவார். சில நாட்கள் எல்லைமீறி வசை காதைப் பொத்துமளவுக்கு வந்து விழும். ம்ம்’கொட்டிக் கொண்டே அம்மா ‘குழந்தைங்க, குழந்தைங்க’ என இறைஞ்சுவார்.



“அடி போடி, இவனுங்க முன்னாடி எப்பவும் கை கட்டி வாய்ப்பொத்தி நின்னுகிட்டே சேவகம் பண்ணனுமா... ஒரு நிமிஷம் உட்கார்ந்துற முடியலை, வெட்கமா இருக்கு. என்னை நெனைச்சா எனக்கே கேவலமா இருக்கு. இன்னைக்கு அந்தாளு வந்து பேசிட்டு இருக்கும்போது உக்காந்து இருந்துடேனாமா... ‘ஒரு சீனியர் ஆபிஸர் பேசிட்டு இருக்குரப்போ இப்டிதான் உக்காந்துட்டு இருப்பியாயா? இதான் மரியாதை கொடுக்கற லச்சணமா’னு அசிங்க படுத்திட்டான். இதெல்லாம் ஒரு பொழப்பா? இதுக்கு பேசாம பிச்சை எடுக்கலாம்”. அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்த அம்மாவை பார்த்து மேலும் ஆத்திரத்துடன் “எல்லாம் உன்னால தான்டி, உன்னால எனக்கு பிடிச்ச சனியன் தான் எல்லாம்” என எரிந்து விழத் தொடங்குவார். “நீ இல்லாம இருந்திருந்தா நிம்மதியா இருந்திருப்பன். குடும்பம், நீ, ஆபீஸ்’னு எல்லத்துனாளையும் தான் நான் இப்டி சின்னப்பட்டுட்டு இருக்கேன்”. ஒவ்வொரு நாளும் இருள் கவியத் தொடங்கும் போது, எதற்கும் தயரானவளாக அம்மா இயல்பாக மாறுதை விக்னேஷ் கவனித்திருக்கிறான்.



பேருந்து ஜன்னல் கம்பிகளினூடே புலர்ந்து வரும் காலையை கவனிப்பதில் ஒரு அலாதி இருப்பதைப் பல முறை உணர்ந்து இருக்கிறான். வித்தியாச வித்தியாசமான முகங்கள், விசித்திரமான காட்சிகள். அதே இடம், அதே சாலை தான். ஆனால் காலை வேறு மாதிரியானது. சாலை வளைவுகளை கடக்கும்போது தொப்பலாக செய்திதாள்கள் குவிந்து இருப்பதை பார்ப்பான், கூடையை தூக்கிவிட ஆள் பார்த்து கொண்டு நிற்கும் பூக்கார பாட்டிகள் கேலியாக தோற்றமளிப்பார்கள். வீடுகளுக்கு முன் குனிந்து கூட்டுபவர்களை பார்த்ததும் பதற்றமாகி விடுவான். ஒரு சில முறை இவன் பார்த்ததை அவர்கள் கவனித்து விட்டால் தவித்துப்போவான். யார் எவரென தெரியாவிட்டாலும் தான் தப்பு செய்து விட்டதாக உணர்வான். குற்றவுணர்வுடனே அன்றைய நாள் தொடங்கும்.




கண்ணசந்து கம்பியில் லேசாக இடித்துக் கொண்டதும் தான் பிரக்ஞை ஏற்பட்டு தோன்றியது, இன்றைய நாள் அப்படியான நாள் இல்லை. வழக்கமான புத்துணர்வு மிக்க காலையாக இன்று இல்லை, சிறப்பு வகுப்பு எடுக்க வரும் ஆசிரியரின் முகம் போல சலனமற்று இருந்தது. விரக்தி வெதும்பி வெளிப்பட்டது. வயிற்றுனுள் ஈருருளை திணறுவது போன்று இருந்தது, நேரத்திற்கு சாப்பிடும் வழமை இன்று அனுசரிக்கப் படவில்லை. அழுது வீங்கிய கண்களும், கரகரத்த குரலுமாய் கையில் இருபது ரூபாயை திணித்து “இந்தா இவ்ளோ தான் இருக்கு, அங்க போய் டீ,பன் எதாவது வாங்கி சாப்ட்டுகோ” என்றால் அம்மா. சமைக்காததர்கான காரணம் விக்னேஷிற்கு தெரியாமலில்லை. ஆனால் அதை எதுவும் அவன் கேட்கவில்லை. அப்பா எங்கே என சுற்றும் முற்றும் பார்த்தான், காணவில்லை.



அம்மா’விற்கு வீட்டில் மட்டும் தான் வேலை. நினைவு தெரிந்த நாளிருந்து அவள் வெளியில் எங்கும் வேளைக்கு சென்றதில்லை. தன் நண்பர்களின் அம்மா’க்கள் பலர் வேலைக்கு போவது தெரிந்திருந்தும், அவனுக்கு அது ஆச்சரியம் ஏற்படுத்தவில்லை. “அம்மாவும் வேளைக்கு போய்ட்டா அப்புறம் இன்னைக்கு மாறி தான் எப்பவும் சாப்பிடாம வர வேண்டி இருக்கும்”, யோசித்து கொண்டிருந்தவன் செவிப்பாரையில் வந்தறைந்தது பள்ளி வேனின் சத்தம். கடிகாரத்தை பார்த்தான், 7.42.




வந்ததில் இருந்து பத்து பதினைந்து நிமிடங்கள் அப்பிடியே வராண்டாவில் நின்று கொண்டு யோசனையில் மூழ்கி இருந்தது உணர்ந்து அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தனது வகுப்பு அறைக்குள் மெளனமாக நுழைந்தான். சூழ்ந்திருந்த வெறுமை கலந்த அமைதி மேலும் பல நினைவுகளை தூண்டி அவனை துன்புறுத்தியது. கணக்கு தான் முதல் பீரியட், சார் வர இன்னும் நேரமாகும் என நினைத்தபடியே நாற்காலியை இழுத்து உட்கார்ந்தான். விக்னேஷிற்கு சார்’ரின் சேரில் உட்காருவது அதுவே முதல் முறை. மிகவும் சௌகரியமாக உணர்ந்தான். அங்கே உட்கார்ந்து கொண்டு அவனும் அவன் இரண்டு நண்பர்கள் உட்காரும் பெஞ்சை பார்க்கும் போது, அது மிகவும் சிறியதாக தெரிந்தது. இதனுடன் ஒப்பிடும்போது அந்த மரபெஞ்சின் விஸ்தீரணம் பத்தில் ஒரு வீதம் கூட இல்லை என உணர்ந்தான். அவனுக்கு இன்னும் குழப்பமாக இருந்தது, அது தான் உட்காரும் இடம் தானா? ஆசிரியர் நாற்காலியில் வீற்றிருக்கும் போதெல்லாம் அவர் தன்னையே பார்ப்பதாக விக்னேஷிற்கு தோன்றும். முரளி அவனை கூப்பிட்டு கூப்பிட்டு சலித்துவிடுவான். சார் பாத்துவிடுவார் என்னும் பயமே போதுமானதாக இருந்தது அவனுக்கு, திரும்பவே மாட்டான், அவர் இருக்கும் வரை யாருடனும் பேச மாட்டான். கணக்கை விடவும், அதன் ஆசிரியர் மீதே பயம் அதிகம். ஆனால் நாற்காலியில் உட்கார்ந்தால் மாணவர்கள் எதிரே வந்து அமர்ந்தாலும் இல்லாவிட்டாலும், பெரிய வித்தியாசம் இருக்காது என்றே விக்னேஷிற்கு இப்போது தோன்றியது. பரந்து விரிந்த அந்த வகுப்பை, அந்த ஒற்றை சேரில் இருந்து பார்ப்பது என்பது ஒரே நேரத்தில் ஒரு கழுகு பார்வையை போன்றும், விட்டத்தை வெறிப்பதாகவும் இருப்பதாக அவனுக்குப் பட்டது. மாணவர் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும், ஆசிரியர் தன்னை பார்த்து விட கூடும் எனும் பிரக்ஞையால் மறைந்து மறைந்து பேச வேண்டிய நிலை. ஆனால் ஆசிரியர்க்கு அங்கிருந்து அனைவரும் ஒன்றுதான். மரபெஞ்சுகள் தான். தமிழ் ஆசிரியர் ஒருவர் மட்டுமே அனைவரையும் வட்டமாக குழுமச் செய்து தானும் சேர்ந்து அமர்ந்து வகுப்பை நடத்துகிறார் எனும் நினைவு தட்டியதும், சம்பந்தமின்றி ஏன் இது நினைவுக்கு வந்ததது என திகைப்படைந்தான். அந்த யோசனையை அப்படியே உதறிவிட்டு, ஒரு கணம் நிதானித்து நாற்காலியின் இரு கைப்பிடிகளையும் இறுகப் பற்றினான். மெல்ல வலது காலின் மேல் இடது காலை போட்டான். சிம்மாசனத்தில் இருப்பது போல உணர்ந்தான். சட்டென தலைமுடியை ஐந்து விரல்கள் இடுக்கி போல் பிடித்து தரதரவென இழுப்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்து எழுந்தான். மூர்ச்சை அடையும் அளவுக்கு வலி மிகுந்து “சார் சார்..சாரி சார்” எனக் கதறினான். அதுகாறும் அவர் வந்து நின்றுகொண்டு இருந்ததை அவன் கவனிக்கவில்லை. தலையில் இருந்த கையை எடுத்து சுளீரென கன்னத்தில் கனமாக பதித்தார் ஆசிரியர். “வாத்யார் உக்கார இடத்துல உக்காரலாமாடா?” என்றார் பற்களை கடித்தபடி, “போ, போய் உன் இடத்துல உக்காரு”.


தேம்பி வழிந்த கண்களை துடைத்துக் கொண்டு, வாத்யாரை பார்த்து நடுங்கியபடியே சென்று தனது பெஞ்சில் அமர்ந்தான்.


*** 
Thank You for the Inspiration Perumal Murugan Sir. I Hope for it to continue forever.

3/5/17



ஞகளும் மானெனே 

யானும் கதலல்லே சரீர்

பழஞம் மனவ தா நிசவ் யானிடனை 

கழிஞூஞ்னு மலபல்ல கந்தி யாய நஸ 

ஞர மய ஹசாயி கசத் லே ஹக் ஷ
சடக் சடக் 

நிவநவ யசத் கண மோ 

சடக் 

ஒழி கன் மதள யாழி ஆசே 

ஞணமே சுழிஞு பூங் ஞெரழே ஈ 

மயமே... கணானி ஞகத் யுண நநன 
ரஸ்ஸல்ழே. 

சடக் சடக் 


- அன்புள்ள வம்மூக்கு <3

23/3/17

மீண்டெழட்டும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் –யோகேந்திர யாதவ்



இந்த தேசம் நிச்சயமற்ற உருவில் “கருப்பு பணத்திற்கு எதிரான போரில்” ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், ஊழலுக்கு எதிரான நிலையில் இருந்தே விடுபட்டு விடும் அபாயத்தில் இருக்கிறோம் நாம். உண்மையில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் நாம் பின்னோக்கியே நகர்ந்து கொண்டு இருக்கிறோம். பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து அனைவரும் விவாதித்துக் கொண்டு இருக்கையில், ஊழல் தடுப்புச் சட்டத்தை(PCA),1988 திருத்துவதற்கு தயாராகி விட்டது பாராளுமன்றம். கொடுமை என்னவென்றால், பெரும்பாலான அரசியல் அமைப்புகளுக்கும் சாதகமாக அமைவதால், பல கட்சிகளின் ஆதரவையும் இத்திருத்தம் பெட்டறுள்ளது. ஆம், எல்லாம் கருப்பு பணத்திற்கு எதிரான போர் எனும் பெயரில் தான்.
நாடாளுமன்றத்தில் தற்போது நிலுவையில் இருக்கும் ஊழல் தடுப்பு (திருத்தம்) மசோதா 2013, சில திருத்தங்களை ஊழல் தடுப்பு சட்டத்திற்கு(PCA) முன்மொழிகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியின் போது ஏற்பட்ட மிகப் பரவாலான ஊழல் எதிர்ப்பு போராட்டங்களின் போது, 2013ம் ஆண்டு மாநிலங்களவையில் இந்த மசோதா முதன் முதலில் அறிமுகப் படுத்தப்பட்டது. சட்டரீதியாக ஊழலுக்கு கிடுக்கு பிடி போடுவதே அதன் நோக்கம். ஆனால் வருந்தத்தக்க சில அம்சங்கள் அதிலும் இருந்தன. எனினும் அதன் ஒட்டுமொத்த சீர்குலைவு என்பது தேசிய ஜனநாயக கூட்டணி உருவாக்க முனைந்த திருத்தங்களால் தான் ஆனது. கேபினெட் உட்பட, பல்வேறு கட்சிகளையும் உள்ளடக்கிய மாநிலங்களவையின் தேர்வு குழுவும் இந்த மாற்றங்களை ஏற்று கொண்டுள்ளது. இந்த பிற்போக்குத்தனமான சட்டம் இந்த குளிர் கால கூட்ட தொடரில் நிறைவேற்ற முடியாததால் தள்ளி போகும் நிலையிலுள்ளது. 


யோகேந்திர யாதவ்





சீர்குலைக்கும் திருத்தங்கள்

கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்வு குழுவால் அங்கீரிக்கப்பட்ட இந்த மசோதாவின் வடிவம், ஒரு வழியில் மட்டுமன்றி பல்வேறு வழிகளிலும் ஊழல் தடுப்பு என்னும் அதன் அடிப்படையையே மழுங்கடிப்பதாக உள்ளது. ஊழலின் தற்போதைய வரையறையை குறுக்குவதோடு அல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான ஆதாரத்தையும் அதை நிருபிப்பதற்கான தேவையையும் அதிகமாக வலியுறுத்துகிறது, இது “தகவல் தெரிவிப்பாளர்களின” (whistleblowers) நிலையை இன்னும் சிரமம் ஆக்குவதோடு, அதிகாரிகள் தங்களை மேலும் காத்துக் கொள்வதற்கும், ஆட்சியாளர்கள்-அதிகாரிகள் எந்த ஒரு ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைக்கும் உள்ளகாதவாரு பார்த்து கொள்ளவுமே பயன்படும். இந்த மசோதா சட்டமானால், ஏற்கனவே ஊழலுக்கு எதிராக பலவீனமாக உள்ள நமது அமைப்பு மேலும் பலத்த அடி வாங்கும்.
  
இப்போது மசோதாவின் முக்கியமான ஒவ்வொரு சரத்தும் ஊழலுக்கு எப்படி பக்கபலமாக இருக்கிறது என பாப்போம் 

மசோதாவில் முதல் அம்சமான ஊழலின் வரையறையும் பொருளும், அரசு (அ) பொதுப் பனியாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் குறுக்கப் பட்டுளள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 13(1)(d), ஊழலின் பல்வேறு மறைமுக அம்சங்களை கருத்தில் கொண்டுள்ளது, முறையற்ற உதவியாக “எந்த விலை மதிப்புள்ள பொருளோ அதற்கான முகாந்திரத்தை நிறுவும் செயலோ” அல்லது “பொது பணியாளராக தனது அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்தல்’ என்பது உட்பட. ஆனால் இப்போது கொண்டு வந்துள்ள மசோதாவோ இந்த பிரிவையே நீக்க்கிவிட்டு அதற்கு பதிலாக மிகவும் மேலோட்டமான ஒரு வரையறையாக, பொது பணியாளர் குற்றச் செயலில் ஈடுபடுதல்: முறையற்ற வழியில் ஒருவர் கட்டுபாட்டில் சொத்துகளை வைத்து இருப்பது மற்றும் உள்நோக்கத்தோடு முறையற்ற வகையில் வருமானத்துக்கு மீறிய சொத்துக்களை குவிப்பது என மாற்றப் பட்டுள்ளது. இந்த புது வரையறையின் படி , எந்த ஒரு பலனும் பொருளாதார ரீதியாயானதாக இல்லாமலோ அல்லது மறைமுகமாகவோ இருந்தால் அதை குற்றமாக கருதவோ தண்டிக்கவோ முடியாது. முன்வைக்கப்பட்ட இந்த திருத்தத்தை கவனமாக ஆராய்ந்த சட்ட ஆணையம் இந்த புது வரையறையை நிராகரித்துள்ளது. இன்னும் விரவானதொரு வரையறையை அது முன்மொழிந்தது. பொதுப் பணியாளரின் “ஒழுங்கற்ற பொதுச் செயல் மற்றும் நடவடிக்கை”, “முறையற்ற ஆதாயத்துக்கு வழி வகுத்தால்” அதை தண்டனைக்குரிய குற்றமாக கருத வேண்டும் என சட்ட ஆணையம் கோரியது. இத்தனைக்கு பிறகும், அரசும் பாராளுமன்ற குழுவும் இந்த கோரிக்கையை புறக்கணித்துவிட்டு ஊழல் கூட்டாளிகளை சுவீகரித்துக் கொண்டுள்ளது.

இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் மேஜை-அடியிலான பரிவர்த்தனை என ஏதும் இப்போது உயர்மட்ட அளவில் நடப்பதில்லை இருப்பினும், இப்போது இருக்கும் சட்டத்தில் 13(1)(d) பிரிவு மட்டுமே உயர்மட்ட இடங்களில் நடைபெறும் ஊழலுக்கு எதிரானதாக இருக்கிறது. இதற்கு சற்றும் பொருந்தாத வகையிலேயே ஊழல் புரிந்த அரசு பணியாளர் பெரும் பலனானது, கடல் தாண்டிய பரிவர்தனையாகவும் நேரடி பணவடிவில் இல்லாமலும் இருக்கிறது உதரணத்திற்கு, பனி ஓய்வுக்கு பிந்தைய பலன்கள். போபர்ஸ் ஊழலில் இருந்து 2G வரை, காமன் விளையாட்டு ஊழல், நிலக்கரி ஊழல் என அனைத்து மாபெரும் ஊழலும் குற்றங்களாக கருதப்பட்டது இந்த பிரிவின் உபாயத்தால் தான். அரசு அதிகாரிகளில் ஒரு சாரார் தொடர்ந்து இந்த பிரிவை மட்டும் நீக்க வலியுறுத்துவதும் இதனால் தான். அதற்கு அவர்களது வாதமாக அவர்கள் கூறுவது, நேர்மையான அதிகாரிகளின் நன்மதிப்பை இது பாதிக்க வாய்ப்புள்ளது என்பதே. ஆனால் இந்த வாதம் உண்மை அல்ல. நேர்மைக்கு பெயர்போன ஓய்வு பெற்ற கேபிநெட் செயலாளரான டி.எஸ்.சுப்பிரமணியம், நேர்மையான அதிகாரிகளுக்கு போதுமான வகையில் இப்போது இருக்கும் சட்டமே பாதுகாப்பை வழங்குகிறது என தொடர்ச்சியாக கூறி வருகிறார். பதவியை தவறான வழியில் நிதி சார்ந்த நோக்கங்களுக்கு பயன்படுத்தியது உறுதியாக நிரூபனமாகாத வரையில் பணியாளர்களின் நன்மதிப்பு எவ்வகையிலும் பாதிப்பு அடையாது. 


ஆரம்பநிலை அழுத்தம் 

இரண்டாவது, இந்த மசோதா தொடக்க நிலையிலேயே ஆதாரம் இல்லையென்றால் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்போரை குற்றவாளியாக கருத முடியாததாக ஆக்குகிறது. இப்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்தின் படி பொதுப் பணியாளர் ஒருவரின் அறியப்பட்ட வருவாய்க்கு மீறிய சொத்து அல்லது பணமே அவர் செய்த ஊழலை நிரூபிக்க போதுமானதாக இருக்கிறது. ஆனால் இப்போது வழக்கு தொடுப்பவரேதான், தவறான வழியில் அரசு அலுவலர் பெற்ற பணமே முறையற்ற ரீதியில் அவர் சொத்து குவிக்க பயன்பட்டது என்பதையும் நிரூபித்தாக வேண்டியதாக இருக்கும். மாநிலங்களவையின் தேர்வு குழு இவ்வாறு நோக்கம் கற்பிப்பது தேவையற்றது என கூறி இருந்தாலும் அரசாங்கத்தின் இறுதி முடிவு நமக்கு இன்னும் தெரியவில்லை. அதிலும் இப்போதைய சட்டத்தில் இருக்கும் “அறியப்பட்ட வருவாய்” என்பதற்க்கு “அரசு அல்லது பொதுப் பணியாளர் சட்டரீதியான அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு தான் பணியாற்றும் காலத்தில் மட்டும் பெறப்படும்” என வரையறை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த திருத்தம் 1988ம் ஆண்டு அதன் முந்தைய சட்ட வடிவத்தில் இருந்த ஓட்டைகளை அடைக்க கொண்டுவரப் பட்டது. ஆனால் சமூக தரப்பில் யாரிடமும் இருந்து எந்த பரிந்துரையும் பெறாது, மத்திய அரசு இப்போது இந்த சரத்தையே தூக்க இருக்கிறது. இது பெரிய அளவில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை தப்பிக்கவைக்கும் செயலே ஆகும்.

மூன்றாவது, இந்த மசோதா லஞ்சம் கொடுப்பவரை லஞ்சம் வாங்கியவருக்கு எதிரான சாட்சியாக நிறுத்துவதை சிக்கலாகி உள்ளது. இப்போதிருக்கும் சட்ட படி, ஒரு நபர் தன்னிடம் இருந்து லஞ்சம் பெற்றார் என ஒருவர் மீது புகார் அளித்தார் என்றால், புகார் அளித்தவரே லஞ்சம் வாங்க தூண்டினார் என குற்றம் சாட்ட முடியாது. லஞ்சம் வாங்குவோரையும் கொடுப்பவரையும் ஒரே விதத்தில் நடத்தக் கூடாது. ஆனால் வரவிருக்கும் மசோதா அதை செய்கிறது. இது லஞ்சம் கொடுக்கும் நிலையில் இருப்பவர்களை அரசு அதிகாரிகளுக்கு எதிரான சாட்சியமாக மாறாமல் இருக்கவே செய்யும். மறைமுகமாக இது லஞ்சம் கொடுப்பவர்களுக்கு வேறு வழி இல்லாமல் செய்துவிடும். 

இப்படி முழுவதும் சிக்கலாக்குவதற்கு, வேண்டுமென்றால் லஞ்சம் கொடுப்பவருக்கு முழு விளக்கு அளிக்காமல் குறைந்தபட்ச நடவடிக்கை எடுக்கலாம். அரசுக்கு சிறப்பான வாய்ப்புக்கள் இருந்தன. இரண்டாம் நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் அறிக்கை லஞ்சத்தை “தர விளைவது” மற்றும் “ரகசியமாக தருவது” என இருவகையாக பார்க்க பரிந்துரைத்தது. ஒருவர் லஞ்சம் லஞ்சம் தர முனைந்து, தந்த பின்பு உடனடியாக புகார் அளித்தார் எனில் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆனால் இந்த யோசனைகளை எல்லாம் அரசு உதாசினப்படுத்தியதன்- அனைவரயும் தண்டிக்கும் யோசனயின்- மூலம் லஞ்சம் பெறக் கூடியவர்களுக்கே துணை புரிந்து உள்ளது என்பது உறுதி.

நான்காவது திருத்தம், ஊழல் புரிந்தவரை தண்டிக்கும் வாய்ப்பை குறைத்து உள்ளது. இப்போதிருக்கும் சட்டப் படி, பணியிலிருக்கும் ஒருவரை தண்டிக்க அவரது மூத்த அதிகாரி ஒருவரின் ஒப்புதல் தேவை. இதற்கான காரணம் எளிமையானது. அது நேர்மையான அதிகாரிகளை பழிவாங்கப் படுவதில் இருந்தும், துன்புறுத்தப் படுவதில் இருந்தும் காப்பது தான். இப்போது கொண்டு வந்திருக்கும் மசோதா, பனி ஓய்வு பெற்றவர்களுக்கும் இந்த சலுகையை நீட்டித்து உள்ளது. அவர்கள் பணி ஆற்றிய காலத்தில் அந்த வழக்கு விசாரணை நடைபெற்றால் இந்த நீட்டிப்பு பொருந்தும். இது ஒரு வகையில் நியாமானதாக தோன்றினாலும், தேவையற்ற ஒரு சில சேர்க்கைகள் இணைக்கப்பட்டுள்ளன. அது என்னவெனில், ஒரு தனி நபர் ஊழல் குற்றச்சாட்டில் அரசு பணியாளர் ஒருவரை தண்டிப்பதற்கான ஒப்புதலை பெற அரசாங்கத்தை அணுகினால், அவர் இனி நீதி மன்றத்தை தான் நாட வேண்டி இருக்கும். குற்றம் சாட்டப்பட்ட அரசு பணியாளருக்கு வழங்கப்படும் இந்த மேலதிகமான பாதுகாப்பு, ஊழலால் பாதிக்கபட்டவர்களையும், ஊழலுக்கு எதிரான செயல்பாட்டாளர்களையும் கை விடக் கூடிய ஒரு செயலாகவே இருக்கும். ஊழல் வாதிகளை தண்டிப்பதை விட அதிகாரிகளை காப்பதில் அரசு முனைப்புடன் உள்ளது இதில் தெளிவாகவே தெரிகிறது. 



முதலில் அனுமதி

இறுதியாக, மிக மோசமானதும் கொடுரமானதுமான இந்த திருத்தம் பொது மக்களின் எந்த ஒரு கருத்தையும் கேட்காது செய்யப்படுள்ளது. இந்த மசோதா பிரிவு 17A என்னும் புதுப் பிரிவை சேர்க்க கோருகிறது. அதன் சாராம்சம் இது தான்: இனி எந்த ஒரு விசாரணை அமைப்பும் குற்றம் சாட்டபட்ட பணியாளர் ஒருவரை விசாரிக்க அதிகாரபூர்வ அனுமதி முதலில் பெறுவது அவசியம். அந்த அனுமதி லோக் பால் அல்லது லோக் ஆயுக்தா மூலம் வழங்குவது அரசின் முடிவு. பாராளுமன்ற தேர்வுக் குழுவோ இதை இன்னும் மோசமாக்கி, குற்றம் சாட்டப்பட்டவரை நீக்க கூடிய உரிமை “தகுந்த உரிமை படைத்த ஒருவர் அல்லது அமைப்புக்கு தான்” உண்டு என முன்மொழிந்துள்ளது. எனவே இனி அரசியல் முதலாளிகளே ஊழல் தடுப்பு விசாராணையை அரசு பணியாளர் மீது நடத்தலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்பவர்களாக இருப்பர். 

இது அடிப்படையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. முன்னமே குறிப்பிட்ட படி இப்போதிருக்கும் சட்டப் பிரிவு 19, அனைத்துவித போலி குற்றச்சாட்டுகளில் இருந்தும் அதிகாரிகளை காக்கும் விதமாக ஏற்கனவே ஏற்படுத்த பட்டுள்ளது. நேர்மையான, குற்றமற்ற அதிகாரியின் மீது புகார் வருமானால் விசாரித்து பார்த்து அரசாங்கம் அதற்கான ஒப்புதல் வழங்காது அந்த புகாரை நிராகரிக்கலாம். இந்த வசதி ஏற்கனவே இருக்கையில் எதற்கு இப்போது இதில் புதிய திருத்தம்? அதுவும் ஆரம்பகட்ட விசாரணைக்கே எதற்கு ஒப்புதல்? அனைவருக்கும் தெரிந்த எளிமையான விஷயம், விசாரணை இல்லை என்றால் நம்பகமான ஆதாரமும் கிடைக்க போவது இல்லை. பிறகு எந்த அடிப்படையில் அரசாங்கம் ஒரு புகாருக்கு ஒப்புதல் வழங்கும்? அல்லது ஆரம்பகட்ட விசாரணை கூட இல்லாது ஒருவரால் எப்படி ஆதாரங்களை சமர்பித்து ஒப்புதலை பெற முடியும்? அப்படியே ஒப்புதலும் வழங்கபட்டாலும், அது தெரியவந்தால் விசாரணை நடப்பதற்கு முன்னரே அந்த ஊழல் புரிந்தவர் தனது ஆதாரங்களை மறைக்க உதவாதா? இந்த மோசமான திருத்தம் ஊழல் புரிந்த அரசியல்வாதிகளையும் உயர் அதிகாரிகளையும் தப்பிக்க வைக்கவே பயன்பட போகிறது. ஒரு அரசியல்வாதி நினைத்தால் ஊழவாதி ஒருவரை தண்டனையில் இருந்து மாத்திரம் அல்ல ஆதாரங்கள் சேகரிப்பதில் இருந்தும் விசாரணையில் இருந்தும்கூட பாதுகாக்க முடியும். 



மீளட்டும் ஊழல் எதிர்ப்பு 

அரசின் இந்த முடிவு பழைய “ஒற்றை வழிமுறையை” மீண்டும் கொண்டு வந்துள்ளது. அந்த பழைய அரசாணையின் படி எந்த ஒரு மூத்த அதிகாரியையும் அரசின் அனுமதி இன்றி விசாரிக்க முடியாது. 1997ம் ஆண்டு புகழ் பெற்ற வினீத் நாராயண் தீர்ப்பில், உச்சநீதிமன்றம் இந்த அரசாணையை சட்ட விரோதம் என அறிவித்தது. அரசாங்கம் அதையே திருத்த சட்டமாக 2003ம் ஆண்டு மீண்டும் கொண்டு வந்தது. கடைசியாக சமீபத்தில் 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அந்த சட்ட பிரிவு அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவித்து, “சமத்துவத்திற்கான உரிமையை” மீறுவதாக கூறி அதை நீக்கி தீர்ப்பளித்தது. ஆளும் வர்க்கத்தில் அதிகாரிகளின் பங்கு எவ்வளவு பெரியது என்பதை இப்போது மூன்றாவது முறையாக அரசு கொண்டு வந்திருக்கும் அதே கவச சட்டமே நிரூபிக்கிறது. 
குளிர் கால கூட்ட தொடர் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருப்பதால், பட்ஜெட் கூட்டதொடருக்கு இந்த மசோதா தள்ளிபோகும் என தெரிகிறது. இது அக்கறையுள்ள பொதுமக்களுக்கு, ஊழலை பாதுகாக்கும் அரசின் இந்த மோசமான முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கும், அனைவரிடையே ஒரு பொதுக் கருத்தை உருவாக்குவதற்குமான வாய்ப்பாக ஓரிரு மாதங்கள் கிடைத்துள்ளது. ஊழலுக்கு எதிரான இயக்கத்தை மீண்டும் உயிர்த்தெழ வைப்பதற்கான நேரம் வந்துவிட்டது.

The original article released in The Hindu Dec12,2016 - http://www.thehindu.com/opinion/lead/Time-to-blow-the-whistle/article16793830.ece