23/3/17

மீண்டெழட்டும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் –யோகேந்திர யாதவ்



இந்த தேசம் நிச்சயமற்ற உருவில் “கருப்பு பணத்திற்கு எதிரான போரில்” ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், ஊழலுக்கு எதிரான நிலையில் இருந்தே விடுபட்டு விடும் அபாயத்தில் இருக்கிறோம் நாம். உண்மையில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் நாம் பின்னோக்கியே நகர்ந்து கொண்டு இருக்கிறோம். பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து அனைவரும் விவாதித்துக் கொண்டு இருக்கையில், ஊழல் தடுப்புச் சட்டத்தை(PCA),1988 திருத்துவதற்கு தயாராகி விட்டது பாராளுமன்றம். கொடுமை என்னவென்றால், பெரும்பாலான அரசியல் அமைப்புகளுக்கும் சாதகமாக அமைவதால், பல கட்சிகளின் ஆதரவையும் இத்திருத்தம் பெட்டறுள்ளது. ஆம், எல்லாம் கருப்பு பணத்திற்கு எதிரான போர் எனும் பெயரில் தான்.
நாடாளுமன்றத்தில் தற்போது நிலுவையில் இருக்கும் ஊழல் தடுப்பு (திருத்தம்) மசோதா 2013, சில திருத்தங்களை ஊழல் தடுப்பு சட்டத்திற்கு(PCA) முன்மொழிகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியின் போது ஏற்பட்ட மிகப் பரவாலான ஊழல் எதிர்ப்பு போராட்டங்களின் போது, 2013ம் ஆண்டு மாநிலங்களவையில் இந்த மசோதா முதன் முதலில் அறிமுகப் படுத்தப்பட்டது. சட்டரீதியாக ஊழலுக்கு கிடுக்கு பிடி போடுவதே அதன் நோக்கம். ஆனால் வருந்தத்தக்க சில அம்சங்கள் அதிலும் இருந்தன. எனினும் அதன் ஒட்டுமொத்த சீர்குலைவு என்பது தேசிய ஜனநாயக கூட்டணி உருவாக்க முனைந்த திருத்தங்களால் தான் ஆனது. கேபினெட் உட்பட, பல்வேறு கட்சிகளையும் உள்ளடக்கிய மாநிலங்களவையின் தேர்வு குழுவும் இந்த மாற்றங்களை ஏற்று கொண்டுள்ளது. இந்த பிற்போக்குத்தனமான சட்டம் இந்த குளிர் கால கூட்ட தொடரில் நிறைவேற்ற முடியாததால் தள்ளி போகும் நிலையிலுள்ளது. 


யோகேந்திர யாதவ்





சீர்குலைக்கும் திருத்தங்கள்

கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்வு குழுவால் அங்கீரிக்கப்பட்ட இந்த மசோதாவின் வடிவம், ஒரு வழியில் மட்டுமன்றி பல்வேறு வழிகளிலும் ஊழல் தடுப்பு என்னும் அதன் அடிப்படையையே மழுங்கடிப்பதாக உள்ளது. ஊழலின் தற்போதைய வரையறையை குறுக்குவதோடு அல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான ஆதாரத்தையும் அதை நிருபிப்பதற்கான தேவையையும் அதிகமாக வலியுறுத்துகிறது, இது “தகவல் தெரிவிப்பாளர்களின” (whistleblowers) நிலையை இன்னும் சிரமம் ஆக்குவதோடு, அதிகாரிகள் தங்களை மேலும் காத்துக் கொள்வதற்கும், ஆட்சியாளர்கள்-அதிகாரிகள் எந்த ஒரு ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைக்கும் உள்ளகாதவாரு பார்த்து கொள்ளவுமே பயன்படும். இந்த மசோதா சட்டமானால், ஏற்கனவே ஊழலுக்கு எதிராக பலவீனமாக உள்ள நமது அமைப்பு மேலும் பலத்த அடி வாங்கும்.
  
இப்போது மசோதாவின் முக்கியமான ஒவ்வொரு சரத்தும் ஊழலுக்கு எப்படி பக்கபலமாக இருக்கிறது என பாப்போம் 

மசோதாவில் முதல் அம்சமான ஊழலின் வரையறையும் பொருளும், அரசு (அ) பொதுப் பனியாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் குறுக்கப் பட்டுளள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 13(1)(d), ஊழலின் பல்வேறு மறைமுக அம்சங்களை கருத்தில் கொண்டுள்ளது, முறையற்ற உதவியாக “எந்த விலை மதிப்புள்ள பொருளோ அதற்கான முகாந்திரத்தை நிறுவும் செயலோ” அல்லது “பொது பணியாளராக தனது அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்தல்’ என்பது உட்பட. ஆனால் இப்போது கொண்டு வந்துள்ள மசோதாவோ இந்த பிரிவையே நீக்க்கிவிட்டு அதற்கு பதிலாக மிகவும் மேலோட்டமான ஒரு வரையறையாக, பொது பணியாளர் குற்றச் செயலில் ஈடுபடுதல்: முறையற்ற வழியில் ஒருவர் கட்டுபாட்டில் சொத்துகளை வைத்து இருப்பது மற்றும் உள்நோக்கத்தோடு முறையற்ற வகையில் வருமானத்துக்கு மீறிய சொத்துக்களை குவிப்பது என மாற்றப் பட்டுள்ளது. இந்த புது வரையறையின் படி , எந்த ஒரு பலனும் பொருளாதார ரீதியாயானதாக இல்லாமலோ அல்லது மறைமுகமாகவோ இருந்தால் அதை குற்றமாக கருதவோ தண்டிக்கவோ முடியாது. முன்வைக்கப்பட்ட இந்த திருத்தத்தை கவனமாக ஆராய்ந்த சட்ட ஆணையம் இந்த புது வரையறையை நிராகரித்துள்ளது. இன்னும் விரவானதொரு வரையறையை அது முன்மொழிந்தது. பொதுப் பணியாளரின் “ஒழுங்கற்ற பொதுச் செயல் மற்றும் நடவடிக்கை”, “முறையற்ற ஆதாயத்துக்கு வழி வகுத்தால்” அதை தண்டனைக்குரிய குற்றமாக கருத வேண்டும் என சட்ட ஆணையம் கோரியது. இத்தனைக்கு பிறகும், அரசும் பாராளுமன்ற குழுவும் இந்த கோரிக்கையை புறக்கணித்துவிட்டு ஊழல் கூட்டாளிகளை சுவீகரித்துக் கொண்டுள்ளது.

இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் மேஜை-அடியிலான பரிவர்த்தனை என ஏதும் இப்போது உயர்மட்ட அளவில் நடப்பதில்லை இருப்பினும், இப்போது இருக்கும் சட்டத்தில் 13(1)(d) பிரிவு மட்டுமே உயர்மட்ட இடங்களில் நடைபெறும் ஊழலுக்கு எதிரானதாக இருக்கிறது. இதற்கு சற்றும் பொருந்தாத வகையிலேயே ஊழல் புரிந்த அரசு பணியாளர் பெரும் பலனானது, கடல் தாண்டிய பரிவர்தனையாகவும் நேரடி பணவடிவில் இல்லாமலும் இருக்கிறது உதரணத்திற்கு, பனி ஓய்வுக்கு பிந்தைய பலன்கள். போபர்ஸ் ஊழலில் இருந்து 2G வரை, காமன் விளையாட்டு ஊழல், நிலக்கரி ஊழல் என அனைத்து மாபெரும் ஊழலும் குற்றங்களாக கருதப்பட்டது இந்த பிரிவின் உபாயத்தால் தான். அரசு அதிகாரிகளில் ஒரு சாரார் தொடர்ந்து இந்த பிரிவை மட்டும் நீக்க வலியுறுத்துவதும் இதனால் தான். அதற்கு அவர்களது வாதமாக அவர்கள் கூறுவது, நேர்மையான அதிகாரிகளின் நன்மதிப்பை இது பாதிக்க வாய்ப்புள்ளது என்பதே. ஆனால் இந்த வாதம் உண்மை அல்ல. நேர்மைக்கு பெயர்போன ஓய்வு பெற்ற கேபிநெட் செயலாளரான டி.எஸ்.சுப்பிரமணியம், நேர்மையான அதிகாரிகளுக்கு போதுமான வகையில் இப்போது இருக்கும் சட்டமே பாதுகாப்பை வழங்குகிறது என தொடர்ச்சியாக கூறி வருகிறார். பதவியை தவறான வழியில் நிதி சார்ந்த நோக்கங்களுக்கு பயன்படுத்தியது உறுதியாக நிரூபனமாகாத வரையில் பணியாளர்களின் நன்மதிப்பு எவ்வகையிலும் பாதிப்பு அடையாது. 


ஆரம்பநிலை அழுத்தம் 

இரண்டாவது, இந்த மசோதா தொடக்க நிலையிலேயே ஆதாரம் இல்லையென்றால் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்போரை குற்றவாளியாக கருத முடியாததாக ஆக்குகிறது. இப்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்தின் படி பொதுப் பணியாளர் ஒருவரின் அறியப்பட்ட வருவாய்க்கு மீறிய சொத்து அல்லது பணமே அவர் செய்த ஊழலை நிரூபிக்க போதுமானதாக இருக்கிறது. ஆனால் இப்போது வழக்கு தொடுப்பவரேதான், தவறான வழியில் அரசு அலுவலர் பெற்ற பணமே முறையற்ற ரீதியில் அவர் சொத்து குவிக்க பயன்பட்டது என்பதையும் நிரூபித்தாக வேண்டியதாக இருக்கும். மாநிலங்களவையின் தேர்வு குழு இவ்வாறு நோக்கம் கற்பிப்பது தேவையற்றது என கூறி இருந்தாலும் அரசாங்கத்தின் இறுதி முடிவு நமக்கு இன்னும் தெரியவில்லை. அதிலும் இப்போதைய சட்டத்தில் இருக்கும் “அறியப்பட்ட வருவாய்” என்பதற்க்கு “அரசு அல்லது பொதுப் பணியாளர் சட்டரீதியான அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு தான் பணியாற்றும் காலத்தில் மட்டும் பெறப்படும்” என வரையறை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த திருத்தம் 1988ம் ஆண்டு அதன் முந்தைய சட்ட வடிவத்தில் இருந்த ஓட்டைகளை அடைக்க கொண்டுவரப் பட்டது. ஆனால் சமூக தரப்பில் யாரிடமும் இருந்து எந்த பரிந்துரையும் பெறாது, மத்திய அரசு இப்போது இந்த சரத்தையே தூக்க இருக்கிறது. இது பெரிய அளவில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை தப்பிக்கவைக்கும் செயலே ஆகும்.

மூன்றாவது, இந்த மசோதா லஞ்சம் கொடுப்பவரை லஞ்சம் வாங்கியவருக்கு எதிரான சாட்சியாக நிறுத்துவதை சிக்கலாகி உள்ளது. இப்போதிருக்கும் சட்ட படி, ஒரு நபர் தன்னிடம் இருந்து லஞ்சம் பெற்றார் என ஒருவர் மீது புகார் அளித்தார் என்றால், புகார் அளித்தவரே லஞ்சம் வாங்க தூண்டினார் என குற்றம் சாட்ட முடியாது. லஞ்சம் வாங்குவோரையும் கொடுப்பவரையும் ஒரே விதத்தில் நடத்தக் கூடாது. ஆனால் வரவிருக்கும் மசோதா அதை செய்கிறது. இது லஞ்சம் கொடுக்கும் நிலையில் இருப்பவர்களை அரசு அதிகாரிகளுக்கு எதிரான சாட்சியமாக மாறாமல் இருக்கவே செய்யும். மறைமுகமாக இது லஞ்சம் கொடுப்பவர்களுக்கு வேறு வழி இல்லாமல் செய்துவிடும். 

இப்படி முழுவதும் சிக்கலாக்குவதற்கு, வேண்டுமென்றால் லஞ்சம் கொடுப்பவருக்கு முழு விளக்கு அளிக்காமல் குறைந்தபட்ச நடவடிக்கை எடுக்கலாம். அரசுக்கு சிறப்பான வாய்ப்புக்கள் இருந்தன. இரண்டாம் நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் அறிக்கை லஞ்சத்தை “தர விளைவது” மற்றும் “ரகசியமாக தருவது” என இருவகையாக பார்க்க பரிந்துரைத்தது. ஒருவர் லஞ்சம் லஞ்சம் தர முனைந்து, தந்த பின்பு உடனடியாக புகார் அளித்தார் எனில் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆனால் இந்த யோசனைகளை எல்லாம் அரசு உதாசினப்படுத்தியதன்- அனைவரயும் தண்டிக்கும் யோசனயின்- மூலம் லஞ்சம் பெறக் கூடியவர்களுக்கே துணை புரிந்து உள்ளது என்பது உறுதி.

நான்காவது திருத்தம், ஊழல் புரிந்தவரை தண்டிக்கும் வாய்ப்பை குறைத்து உள்ளது. இப்போதிருக்கும் சட்டப் படி, பணியிலிருக்கும் ஒருவரை தண்டிக்க அவரது மூத்த அதிகாரி ஒருவரின் ஒப்புதல் தேவை. இதற்கான காரணம் எளிமையானது. அது நேர்மையான அதிகாரிகளை பழிவாங்கப் படுவதில் இருந்தும், துன்புறுத்தப் படுவதில் இருந்தும் காப்பது தான். இப்போது கொண்டு வந்திருக்கும் மசோதா, பனி ஓய்வு பெற்றவர்களுக்கும் இந்த சலுகையை நீட்டித்து உள்ளது. அவர்கள் பணி ஆற்றிய காலத்தில் அந்த வழக்கு விசாரணை நடைபெற்றால் இந்த நீட்டிப்பு பொருந்தும். இது ஒரு வகையில் நியாமானதாக தோன்றினாலும், தேவையற்ற ஒரு சில சேர்க்கைகள் இணைக்கப்பட்டுள்ளன. அது என்னவெனில், ஒரு தனி நபர் ஊழல் குற்றச்சாட்டில் அரசு பணியாளர் ஒருவரை தண்டிப்பதற்கான ஒப்புதலை பெற அரசாங்கத்தை அணுகினால், அவர் இனி நீதி மன்றத்தை தான் நாட வேண்டி இருக்கும். குற்றம் சாட்டப்பட்ட அரசு பணியாளருக்கு வழங்கப்படும் இந்த மேலதிகமான பாதுகாப்பு, ஊழலால் பாதிக்கபட்டவர்களையும், ஊழலுக்கு எதிரான செயல்பாட்டாளர்களையும் கை விடக் கூடிய ஒரு செயலாகவே இருக்கும். ஊழல் வாதிகளை தண்டிப்பதை விட அதிகாரிகளை காப்பதில் அரசு முனைப்புடன் உள்ளது இதில் தெளிவாகவே தெரிகிறது. 



முதலில் அனுமதி

இறுதியாக, மிக மோசமானதும் கொடுரமானதுமான இந்த திருத்தம் பொது மக்களின் எந்த ஒரு கருத்தையும் கேட்காது செய்யப்படுள்ளது. இந்த மசோதா பிரிவு 17A என்னும் புதுப் பிரிவை சேர்க்க கோருகிறது. அதன் சாராம்சம் இது தான்: இனி எந்த ஒரு விசாரணை அமைப்பும் குற்றம் சாட்டபட்ட பணியாளர் ஒருவரை விசாரிக்க அதிகாரபூர்வ அனுமதி முதலில் பெறுவது அவசியம். அந்த அனுமதி லோக் பால் அல்லது லோக் ஆயுக்தா மூலம் வழங்குவது அரசின் முடிவு. பாராளுமன்ற தேர்வுக் குழுவோ இதை இன்னும் மோசமாக்கி, குற்றம் சாட்டப்பட்டவரை நீக்க கூடிய உரிமை “தகுந்த உரிமை படைத்த ஒருவர் அல்லது அமைப்புக்கு தான்” உண்டு என முன்மொழிந்துள்ளது. எனவே இனி அரசியல் முதலாளிகளே ஊழல் தடுப்பு விசாராணையை அரசு பணியாளர் மீது நடத்தலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்பவர்களாக இருப்பர். 

இது அடிப்படையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. முன்னமே குறிப்பிட்ட படி இப்போதிருக்கும் சட்டப் பிரிவு 19, அனைத்துவித போலி குற்றச்சாட்டுகளில் இருந்தும் அதிகாரிகளை காக்கும் விதமாக ஏற்கனவே ஏற்படுத்த பட்டுள்ளது. நேர்மையான, குற்றமற்ற அதிகாரியின் மீது புகார் வருமானால் விசாரித்து பார்த்து அரசாங்கம் அதற்கான ஒப்புதல் வழங்காது அந்த புகாரை நிராகரிக்கலாம். இந்த வசதி ஏற்கனவே இருக்கையில் எதற்கு இப்போது இதில் புதிய திருத்தம்? அதுவும் ஆரம்பகட்ட விசாரணைக்கே எதற்கு ஒப்புதல்? அனைவருக்கும் தெரிந்த எளிமையான விஷயம், விசாரணை இல்லை என்றால் நம்பகமான ஆதாரமும் கிடைக்க போவது இல்லை. பிறகு எந்த அடிப்படையில் அரசாங்கம் ஒரு புகாருக்கு ஒப்புதல் வழங்கும்? அல்லது ஆரம்பகட்ட விசாரணை கூட இல்லாது ஒருவரால் எப்படி ஆதாரங்களை சமர்பித்து ஒப்புதலை பெற முடியும்? அப்படியே ஒப்புதலும் வழங்கபட்டாலும், அது தெரியவந்தால் விசாரணை நடப்பதற்கு முன்னரே அந்த ஊழல் புரிந்தவர் தனது ஆதாரங்களை மறைக்க உதவாதா? இந்த மோசமான திருத்தம் ஊழல் புரிந்த அரசியல்வாதிகளையும் உயர் அதிகாரிகளையும் தப்பிக்க வைக்கவே பயன்பட போகிறது. ஒரு அரசியல்வாதி நினைத்தால் ஊழவாதி ஒருவரை தண்டனையில் இருந்து மாத்திரம் அல்ல ஆதாரங்கள் சேகரிப்பதில் இருந்தும் விசாரணையில் இருந்தும்கூட பாதுகாக்க முடியும். 



மீளட்டும் ஊழல் எதிர்ப்பு 

அரசின் இந்த முடிவு பழைய “ஒற்றை வழிமுறையை” மீண்டும் கொண்டு வந்துள்ளது. அந்த பழைய அரசாணையின் படி எந்த ஒரு மூத்த அதிகாரியையும் அரசின் அனுமதி இன்றி விசாரிக்க முடியாது. 1997ம் ஆண்டு புகழ் பெற்ற வினீத் நாராயண் தீர்ப்பில், உச்சநீதிமன்றம் இந்த அரசாணையை சட்ட விரோதம் என அறிவித்தது. அரசாங்கம் அதையே திருத்த சட்டமாக 2003ம் ஆண்டு மீண்டும் கொண்டு வந்தது. கடைசியாக சமீபத்தில் 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அந்த சட்ட பிரிவு அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவித்து, “சமத்துவத்திற்கான உரிமையை” மீறுவதாக கூறி அதை நீக்கி தீர்ப்பளித்தது. ஆளும் வர்க்கத்தில் அதிகாரிகளின் பங்கு எவ்வளவு பெரியது என்பதை இப்போது மூன்றாவது முறையாக அரசு கொண்டு வந்திருக்கும் அதே கவச சட்டமே நிரூபிக்கிறது. 
குளிர் கால கூட்ட தொடர் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருப்பதால், பட்ஜெட் கூட்டதொடருக்கு இந்த மசோதா தள்ளிபோகும் என தெரிகிறது. இது அக்கறையுள்ள பொதுமக்களுக்கு, ஊழலை பாதுகாக்கும் அரசின் இந்த மோசமான முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கும், அனைவரிடையே ஒரு பொதுக் கருத்தை உருவாக்குவதற்குமான வாய்ப்பாக ஓரிரு மாதங்கள் கிடைத்துள்ளது. ஊழலுக்கு எதிரான இயக்கத்தை மீண்டும் உயிர்த்தெழ வைப்பதற்கான நேரம் வந்துவிட்டது.

The original article released in The Hindu Dec12,2016 - http://www.thehindu.com/opinion/lead/Time-to-blow-the-whistle/article16793830.ece

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக