20/3/20

"அசுரவதம் இனி நடக்காது" கட்டுரை குறித்த இல. பூவிழியின் பார்வை.

விவாதத்திற்கு இடம்பெற்ற கட்டுரையின் சுட்டி: தொடுகை 




பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் அவர்களது கட்டுரை உயிர்மெய் வலைதளத்தில் நான் வாசிக்கப்பெற்றேன்.  அவர் தனது சிறு வயதில் தான் ஒரு சுவற்றில் கண்ட வாசகம் ஒன்றினை நினைவு வைத்து அதன் விளக்கமறிந்து அதனைப் போலவே தனது கட்டுரையின் பெயரையும் அமைத்துக்கொண்டார். அந்த வாசகம், “வாலி வதம் இனி நடக்காது”.

அவர் தனது கட்டுரையில் விளக்கியது அசுரன் திரைப்படம் மற்றும் அதன் கலாசாரப் பிரதியின் அர்த்த தளங்கள்.
கலாச்சாரப் பிரதி என்பது நாம் பின்பற்றி வந்த கலாச்சாரத்தின் எடுத்துக்காட்டாக மற்றும் அதன் அர்த்த தளங்கள் என்பது பலவகை அர்த்தங்கள் நிறைந்த தளமாக உள்ளது. 


நான் வாசித்ததில் அவர் முதலில் புராண இதிகாசங்களைப் பற்றி கூறுகிறார். மகாபாரதம் மற்றும் இராமாயணம் ஆகிய புராண இதிகாசங்கள் தேவர்கள் மற்றும் அரக்கர்களை மையமாக வைத்து உருவாக்கப் பெற்றவை. இதில் தேவர்களே நன்மை நிறைந்தவர்கள் எனவும் அசுரர்கள் அரக்க குணம் அதாவது தீய குணம் படைத்தவர்கள் என்னும் கருத்து அந்தக் காலத்தில் இருந்தே நிலவி வந்துள்ளது.

அதற்கு எதிர்கதையாடல் கூறும் விதமாக பல திரைப்படங்கள் உருவாக்கப்பட்டதை பட்டியலிடுகிறார். கதையாடல் என்பது ஒரு கூற்றின் ஒரு முகத்தை கூறுவது. அதுவே எதிர்கதையாடல் என்பது கூற்றின் மறு தரப்பை எடுத்து காட்டுவது. அவ்வாறு எதிர்கதையாடல் என கூறுபடுவது அரக்கர்கள் என சித்தரிக்கப்படும் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு எழுப்பப்படும் குரல். அசுரன் திரைப்படம் சாகச நாயகனைக் கொண்டு யதார்த்த மற்றும் தார்மீக கதையாடலை கொண்டுள்ள விதத்தை போற்றுகிறார்.

பொதுவாக எதிர்கதையாடல் சொல்லும் திரைப்படத்தின் முடிவுகள் சோகம் நிறைந்ததாகவே முடிகபெற்று வந்தது. எடுத்துகாட்டாக சில திரைப்படங்களின் பெயரை பேராசிரியர் பட்டியலிடுகிறார். என்னளவில், அவ்வாறு முடியும் முடிவுகளை தகர்த்தெறிந்த படமாகவே அசுரன் திகழ்கிறது என்பது கட்டுரையின் உயிர்ப்பு.


***
விவாத மரபை ஊக்குவிக்கும் விதமாக தனிப்பட்ட தளத்தில் நடந்த உரையாடலை இங்கே பதிவிட்டுள்ளேன். 

கட்டுரையாளர் உயிர்தொழில்நுட்பம் மூன்றாமாண்டு படிக்கிறார். சமூக பண்பாட்டு நிகழ்வொன்ற்றைக் குறித்த அவரின் முதல் பங்களிப்பு இது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக