27/5/14

நான் மழை

வார்த்தைகள் முட்டினால்

மௌணங்கள் மொழியாகலம் !

நீ

என்னை தொட்டதால்

நானும் மழை ஆனதேன் ! 

உன் கண்கள் பட்டதும் 
காற்றும் கணத்ததேன் ...............

நேற்று என் வாசலருகே 
கடந்தாய் நீ எனை  
வீசிய மழைக்காற்று என் செவி 
தொட்டு அழைத்தது 
என் வருகையை கவணி என!

மழை காண வந்த நான் 
மனதை நழுவவிட்டேனோ....
ஏணோ, தவற விட்டதேனோ

மழை பார்க்க வந்த நான்,
மலைத்து பொய் நின்னேன் பல நொடி...
உன் கரிய கேசம் படர்ந்த 
மழை முகம் கண்டு தானடி !!!  

26/5/14

மூங்கில் நாதம் - கவிதை

 மனமொன்றில் மெல்லவே ஒலிக்கிறது

மூங்கில் நாதமொன்று ...

இயல்பாய், வெகு இயல்பாய்

காற்றோடு கலந்தபடியே கரைகிறது

காதின் ஓரம் ....

யாருக்காகவும் காத்திராமல்
யார் கவனத்தையும் நாடாமல் .......

இசை வழி நான் - கவிதை

கனத்திடும் மனதானது கரைய,

பலமுறை துணை நின்று உள்ளது இசை....

இசை உதவின் தனை, உண்டான,

எனை ஆட்க்கொண்ட எண்ணங்கள் உடனே மறைவதில்லை...

வழிந்தோடும் கண்ணீர்வழி
மறக்க முயல்வேன், என்னை நானே.......